எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி : புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து நேற்று நடந்த பந்த போராட்டத்தால் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்துறையின் வரவு, செலவு திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறையை சரிக்கட்டும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படும்.புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டாக தொடர்ந்து மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
நடப்பு ஆண்டிலும் புதுச்சேரி அரசின் மின்துறை ஒழங்குமுறை ஆணையத்திடம் வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்து, சுமார் ரூ.120 கோடி பற்றாக்குறையை சரிகட்ட மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரியது.
இதன்பேரில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்தது. வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும். இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதாலும், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பாலும் அறிவிக்கப்பட்ட மின் கட்டணம் அமல்படுத்தப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டது.
தேர்தலுக்கு பிறகு ஜூன் 16-ம் தேதி முன் தேதியிட்டு மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அரசு அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி ஊர்வலம் நடந்தது.
இதைத் தொடர்ந்து முதல் 200 யூனிட்களுக்கு ரூ.85 பைசா அரசு மானியம் வழங்குவதாக அறிவித்தது. ஆனாலும் மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. சட்டப்படி மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இதை மாற்றும் அதிகாரம் புதுச்சேரி அரசுக்கு இல்லை என்றும் அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகளான இண்டியா கூட்டணி, மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நேற்று மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தரும்படி இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் வணிக நிறுவனங்கள், வியாபாரிகள், பஸ், டெம்போ, ஆட்டோ உரிமையாளர்கள், மார்க்கெட் வியாபாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
அதன்படி நேற்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. பந்த்' போராட்டத்தையொட்டி அதிகாலை முதல் புதுச்சேரியில் தனியார் பஸ்கள் முற்றிலுமாக ஓடவில்லை. பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் இன்றி புதுச்சேரி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
புதுச்சேரியை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம் என்பதால், பஸ் போக்குவரத்து முடங்கியது. இதனால் பஸ் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். பெரும்பாலான டெம்போ, ஆட்டோக்கள் ஓடவில்லை. இருப்பினும் ஒரு சில ஆட்டோ, டெம்போக்கள் ஓடியது.
கல்லூரி பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டது. மாணவர்கள் வழக்கம் போல கல்லூரிகளுக்கு சென்றனர். புதுச்சேரியிலிருந்து இயங்கும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லைகளான கன்னிய கோவில், கோரிமேடு, கனக செட்டிகுளம் பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கினர்.
ஒரு சில தமிழக அரசு பஸ்கள் மட்டும் புதுச்சேரி வந்து சென்றது. பஸ்கள் இயக்கப்படாததால் புதுச்சேரி தற்காலிக பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது. புதுச்சேரி அரசு பஸ்கள் ஒரு சில இயக்கப்பட்டது. இதில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த பஸ்களில் பயணிகள் ஏறி மாநில எல்லைக்கு சென்று வெளியூர் சென்றனர்.
பந்த் போராட்டத்தால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால், அரசே 1 முதல் 8-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்தது. அதே நேரத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வழக்கம்போல பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மாணவர்கள் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. நகரத்தின் பிரதான பஜார் வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, புஸ்சிவீதி, மிஷன் வீதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது.
வில்லியனூர், பாகூர், தவளக்குப்பம், அரியாங்குப்பம், சேதராப்பட்டு, திருக்கனூர், திருபுவனை, மதகடிப்பட்டு உள்பட புறநகர், கிராமப் புறங்களிலும் இதே நிலை நீடித்தது. தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. பெரிய மார்க்கெட் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறிய மார்க்கெட்டுகள் இயங்கவில்லை.
ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பந்த் போராட்டத்தையொட்டி நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடைகள் திறக்கப்படாததாலும், பஸ்கள் ஓடாததாலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராஜீவ்காந்தி சதுக்கம், இந்திராகாந்தி சதுக்கம், வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம், மறைமலை அடிகள் சாலை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 5 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 1 day ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 4 days ago |
-
ஜம்மு காஷ்மீர் முதற்கட்ட தேர்தல்: 24 சட்டசபை தொகுதிகளில் விறுவிறுபான ஓட்டுப்பதிவு: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்தனர்
18 Sep 2024ஜம்மு, பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது.
-
தங்கம் விலை சற்று குறைவு
18 Sep 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் நேற்றும் சற்று குறைந்து விற்பனையானது.
-
நிபா வைரசுக்கு வாலிபர் பலி: கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கம்
18 Sep 2024திருவனந்தபுரம் : நிபா வைரசுக்கு வாலிபர் பலியானது குறித்து கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கமளித்துள்ளார்.
-
சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை
18 Sep 2024சென்னை : சென்னை, சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
-
இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: சீமான் அஞ்சலி
18 Sep 2024சென்னை, இரட்டைமலை சீனிவாசனாருக்கு பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
-
வரும் 1-ம்தேதி செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
18 Sep 2024சென்னை, மோசடி வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக வரும் 1-ம் தேதி நேரில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா: புதிய அலை உருவாகலாம் என எச்சரிக்கை
18 Sep 2024நியூயார்க், ஜெர்மனியில்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் புதிய வகை கொரோனா திரிபு 27 நாடுகளில் பரவியுள்ளது.
-
நடிகர் தனுஷ் விவகாரம்: பெப்சி நிர்வாகத்திற்கு நடிகர் சங்கம் கண்டனம்
18 Sep 2024சென்னை, நடிகர் தனுஷ் விவகாரம் தொடர்பாக பெப்சி நிர்வாகத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
நடன இயக்குநர் ஜானி மீது போக்சோவில் வழக்குப்பதிவு
18 Sep 2024ஆந்திரா, நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
டி-20 தரவரிசை பட்டியல்: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
18 Sep 2024துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 267 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
-
ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த முடியாது: மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்
18 Sep 2024புதுடெல்லி, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு மாறானது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி: கொல்கத்தா பெண் மருத்துவரின் பெயர், புகைப்படத்தை நீக்கியது விக்கிப்பீடியா
18 Sep 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பயிற்சி பெண் மருத்துவ
-
உத்தரகாண்டில் மீட்கப்பட்டு சென்னை வந்த தமிழர்கள் 13 பேரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு
18 Sep 2024சென்னை : உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
-
பஞ்சாப் பயிற்சியாளர் நியமனம்
18 Sep 2024பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக, ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அரியானா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் 7 வாக்குறுதிகள் வெளியீடு
18 Sep 2024புதுடெல்லி : அரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முதியோர் உதவித்தொகையாக ரூ. 6,000 வழங்கப்படும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படும், ரூ.
-
மீன்வள பல்கலை., பட்டமளிப்பு விழா: அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு
18 Sep 2024நாகை, நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்துள்ளார்.
-
டெல்லி முதல்வராக அதிஷி 21-ம் தேதி பதவியேற்கிறார்?
18 Sep 2024புதுடெல்லி : டெல்லியின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்ட அதிஷி, வரும் 21ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2024.
19 Sep 2024 -
போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: இஸ்ரேல்
19 Sep 2024ஜெருசலேம், ஹிஸ்புல்லாவின் பேஜர், வாக்கி டாக்கி வெடித்து சிதறியதால் பதற்றமான நிலைய உருவாகிய நிலையில், போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்வதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்
-
போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: இஸ்ரேல்
19 Sep 2024ஜெருசலேம், ஹிஸ்புல்லாவின் பேஜர், வாக்கி டாக்கி வெடித்து சிதறியதால் பதற்றமான நிலைய உருவாகிய நிலையில், போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்வதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்
-
அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 2,100 வழங்கப்படும்: அரியானாவில் பா.ஜ.க. வாக்குறுதி
19 Sep 2024சண்டிகர், அரியானாவில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்துள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க எடப்பாடி வலியுறுத்தல்
19 Sep 2024சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெளிநாட்டு மாணவர்களுக்கு மேலும் விசா கட்டுப்பாடு: கனடா
19 Sep 2024ஒட்டாவா, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
-
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு
19 Sep 2024ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
-
விண்வெளியில் தனது பிறந்த நாளை கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்: வலைதளங்களில் நெட்டிசன்கள் வாழ்த்து
19 Sep 2024நியூயார்க், சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு நெட்டிசன்கள் பலரும் வலைதளங்களில்