முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எமர்ஜென்சி நாட்கள் இந்திய வரலாற்றின் இருண்ட காலம் : துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      இந்தியா
jagdeepdhankhar-2023-05-05

Source: provided

மும்பை : 1975 ஜூன் 25-ம் தேதி ஒரு கருப்பு நாள்.எமர்ஜென்சி நாட்கள் இந்திய வரலாற்றின் இருண்ட காலம். அது தொடர்பான அறிவு அரசியலமைப்பைப் பாதுகாக்கும் வலிமையை வழங்கும் என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன் தொழில்நுட்ப உயர்நிலைப்பள்ளி, ஜூனியர் கல்லூரியில் நேற்று சம்விதான் மந்திர்  எனப்படும் அரசியல் சாசன கோயில் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

அரசியலமைப்பு சட்டத்தை ஒரு புத்தகமாகப் பார்க்கக் கூடாது. அதற்கு மதிப்பளிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் கீழ் நம் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் அதே வேளையில், நமது அரசியலமைப்பு அடிப்படை கடமைகளையும் உள்ளடக்கியது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் மனசாட்சி. அது சமத்துவத்தை கொண்டு வருவதற்கான உறுதியான நடவடிக்கை. அம்பேத்கருக்கு 1990 மார்ச் 31-ம் தேதி ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது. இருந்தாலும் இந்த கவுரவம் ஏன் முன்னரே வழங்கப்படவில்லை?

சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றில் இருண்ட காலமான 21 மாத அவசரநிலை குறித்து இளைய தலைமுறையினர் விழிப்புடன் தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாளை ஒருபோதும் மறக்காமல் அதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். 1975 ஜூன் 25-ம் தேதி ஒரு கருப்பு நாள். சுதந்திரத்துக்குப் பிந்தைய நமது பயணத்தின் இருண்ட அத்தியாயம். அது தொடர்பான அறிவு அரசியலமைப்பைப் பாதுகாக்கும் வலிமையை வழங்கும். இதைக் கருத்தில் கொண்டுதான் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

ஜூன் 25-ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த 21 மாதங்களில் என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மகராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய சமூக நீதி துறை இணையமைச்சர் ராம்தாஸ் ஆத்வாலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து