எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே : அணியின் கலவைக்காகவும் ஓய்வை கருத்தில் கொண்டும் ஷமி 4-வது போட்டியில் விளையாடவில்லை என்று பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
தொடரை வென்றது...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி புனேயில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பேசு பொருளானது...
முன்னதாக இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதல் 2 போட்டிகளில் களமிறங்கவில்லை. இது பலரது மத்தியிலும் பேசு பொருளானது. ஏனெனில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் சந்தித்த காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் குணமடைவதற்கு 14 மாதங்கள் ஆனது. அவர் விளையாடாதது கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமானது.
முகமது ஷமி நீக்கம்...
இதனையடுத்து முழுமையாக குணமடைந்த ஷமி சமீபத்திய உள்ளூர் தொடர்களில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக இத்தொடரில் தேர்வு செய்யப்பட்ட அவர் முதல் 2 போட்டிகளில் விளையாடாதது அவருக்கு காயம் முழுமையாக குணமடைந்து விட்டதா? என்ற சந்தேகத்தை கிளப்பியது. இதன் பின் நடைபெற்ற 3-வது போட்டியில் முகமது ஷமி விளையாடினார். ஆனால் அதில் விக்கெட்டுகள் எடுக்காத அவர் 3 ஓவர்கள் மட்டுமே வீசினார். இதனையடுத்து நேற்று நடைபெற்ற 4-வது போட்டியில் முகமது ஷமி அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் சாம்பியன்ஸ் டிராபி விரைவில் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் அவர் காயத்தை சந்தித்து விட்டாரா? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்தது.
பயிற்சியாளர் விளக்கம்...
இந்நிலையில் அணியின் கலவைக்காகவும் ஓய்வை கருத்தில் கொண்டும் ஷமி 4-வது போட்டியில் விளையாடவில்லை என்று பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஷமி நன்றாக பவுலிங் செய்து வருகிறார். அவரை வலைப் பயிற்சியில் நான் பார்த்து வருகிறேன். அவர் எங்களுடன் விளையாடுவது மகிழ்ச்சி. அணியின் கலவைக்காகவும் ஓய்வை கருத்தில் கொண்டும்தான் அவர் இந்த போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்கு அடுத்தப் போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம். அதற்கு விஷயங்கள் எப்படி செல்கிறது என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்.
புத்துணர்ச்சிக்காக...
ஆனால் அவர் மீண்டும் எங்களுடைய அணியில் வந்ததில் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறோம். விளையாடுகிறார் என்பதைத் தாண்டி அவர் பயிற்சியில் அவருடைய அனுபவத்தையும் அறிவையும் கொடுப்பதே எங்களுடைய இளம் பவுலிங் துறைக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் பெரிய புத்துணர்ச்சியைக் கொடுக்கும். எனவே ஷமி மீண்டும் அணியில் வந்தது சிறப்பான விஷயம். " என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-02-2025.
01 Feb 2025 -
ஒரேநாளில் 2-வது முறை அதிகரித்த தங்கம் விலை சவரன் ரூ.62 ஆயிரத்தை கடந்தது
01 Feb 2025புதுடெல்லி: மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனையானது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலெக்டர்கள் முதல்வரிடம் வாழ்த்து
01 Feb 2025சென்னை: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள் சென்னை தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
மத்திய பட்ஜெட் 2025-ல் விலை உயரும், விலை குறையும் பொருட்கள்?
01 Feb 2025புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2025-ல் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் காரணமாக சில பொருள்களின் விலை குறைகின்றன.
-
தமிழர்களின் நிலம் திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பு : அதிபர் திசநாயகா உறுதி
01 Feb 2025கொழும்பு : இலங்கை ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் திசநாயகா உறுதி அளித்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
01 Feb 2025சென்னை : தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு அமல் : வெள்ளை மாளிகை தகவல்
01 Feb 2025வாஷிங்டன் : கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கான 25 சதவீதம் வரி விதிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
-
மணல் குவாரிகளை திறக்க அ.தி.மு.க. அனுமதிக்காது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
01 Feb 2025சென்னை : தமிழக அரசு 13 மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்கமாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிப்பு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2025புதுடெல்லி: ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
தேர்தலை நோக்கமாக கொண்டது: மத்திய பட்ஜெட் குறித்து தி.மு.க. கடும் விமர்சனம்
01 Feb 2025சென்னை: தேர்தல் நடைபெற உள்ள பீகார் போன்ற மாநிலங்களில் அரசியல் லாபத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட மத்திய பட்ஜெட் என்று தி.மு.க. விமர்சனம் செய்துள்ளது.
-
வார்த்தை ஜாலங்கள் நிறைந்த ஒரு மாயாஜால அறிக்கை மத்திய பட்ஜெட் குறித்து இ.பி.எஸ். கருத்து
01 Feb 2025சென்னை: மத்திய பட்ஜெட் ஒரு மாயாஜால அறிக்கையாகும். வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாகத் தோன்றுகிறது என்று அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கல்: எதிர்க்கட்சி வெளிநடப்பு
01 Feb 2025புதுடெல்லி : மத்திய பட்ஜெட் தாக்கலின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
இஸ்ரேல் பணய கைதிகளில் மேலும் 3 பேரை விடுதலை செய்தது ஹமாஸ் அமைப்பு
01 Feb 2025காசா முனை : இஸ்ரேல் பயண கைதிகள் 3 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.
-
அடுத்த 3 ஆண்டுகளில் மாவட்ட மருத்துவமனைகளில் 200 புற்றுநோய் மையங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2025புதுடெல்லி: அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல் நேர புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும் மற்றும் புற்றுநோய், அரிய வகை நோய்கள் மற்றும் இதர நாள்பட்ட ந
-
அமெரிக்காவில் மீண்டும் விமானம் விபத்து: குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது
01 Feb 2025பிலடெல்பியா : பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
5 லட்சம் பட்டியலின, பழங்குடியின பெண்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2025புதுடெல்லி : பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு ரூ.2 கோடி வரை தொழிற்கடன் வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
நாடு முழுவதும் 50 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2025புதுடில்லி: நாட்டின் சிறந்த 50 சுற்றுலாத் தலங்கள் மாநிலங்களுடன் இணைந்து மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
ஜூனியர் மகளிர் டி-20 உலகக்கோப்பை இறுதி: இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகள் இன்று மோதல்
01 Feb 2025கோலாலம்பூர் : ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதுகின்றன.
-
குடிமக்களின் பைகளை நிரப்பும் மத்திய பட்ஜெட் பிரதமர் மோடி புகழாரம்
01 Feb 2025புதுடெல்லி: குடிமக்களின் பைகளை நிரப்பவும், சேமிப்பை அதிகரிக்கச் செய்யவும், நாட்டின் வளர்ச்சிக்கு குடிமக்கள் பங்களிப்பவர்களாக மாறவும் இந்த பட்ஜெட் மிகவும் வலுவான அடித்தள
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் பாதை; ரூ.1,165 கோடிக்கு திட்ட அறிக்கை சமர்பிப்பு
01 Feb 2025சென்னை : தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, நான்காவது புது ரயில் பாதை 1,165 கோடி ரூபாயில் செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை, ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே அ
-
6 துறைகளில் சீர்திருத்தங்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
01 Feb 2025புதுடெல்லி: 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் ஆறு துறைகளில் சீர்திருத்தங்களை தொடங்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது
01 Feb 2025புதுடெல்லி : வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்து விறப்னை செய்யப்பட்டது.
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது
01 Feb 2025சென்னை : வழிதவறி விட்டதாக உதவி கேட்ட 13 வயது சிறுமிக்கு பட்டினப்பாக்கம் போலீஸ் பூத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த மயிலாப்பூர் போக்குவரத்து போலீஸ்காரர் ராமன் கைது செ
-
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அபார வெற்றி
01 Feb 2025காலே : இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
நாடு முழுவதும் அடுத்த ஆண்டில் மருத்துவக்கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2025புதுடெல்லி: நாடு முழுவதும் அடுத்த ஆண்டில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் 10,000 கூடுதல் இடங்கள் சேர்க்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரா