முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்களின் வருவாயை அரசு எப்படி பயன்படுத்தப்படுகிறது : தமிழ்நாடு அரசு விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      தமிழகம்
TN 2024-12-2

Source: provided

சென்னை : கோவில்கள் மூலம் கிடைக்கும் வருவாயை கோவில்களுக்கே செலவு செய்கிறோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவில் உண்டியல் பணம் ரூ.445 கோடியை தேவாலயம், மசூதி கட்டுவதற்கு தமிழக அரசு செலவழித்துள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் பொய்யான தகவல். பதிவிட்டவர் பகிர்ந்த புகைப்படத்தில் இடம்பெற்ற செய்திக்கும், தமிழ்நாட்டுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

கர்நாடகாவில் உள்ள கோவில்களின் உண்டியலில் வசூலான நிதி தொடர்பாகவே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு என்று திரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் மூலம் கிடைக்கும் வருவாயை கோவில்களுக்கும், இந்து சமயம் சார்ந்த விவகாரங்களுக்காக மட்டுமே அரசு செலவு செய்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து