முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை

வியாழக்கிழமை, 20 மார்ச் 2025      தமிழகம்
Jail

Source: provided

ஈரோடு: ஈரோட்டில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் கிச்சிபாளையம் சுந்தர்தெருவை சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியா (வயது 35). இவருடைய மனைவி சரண்யா (28). வக்கீல்.  பிரபல ரவுடியாக வலம் வந்த ஜானின் மீது சேலம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை, வழிப்பறி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சேலத்தில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக சேலம் அன்னதானப்பட்டி  போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட ஜான் தனது மனைவியுடன் திருப்பூருக்கு புறப்பட்டார்  ஈரோடு மாவட்டம் நசியனூர் முள்ளம்பட்டிபிரிவில் கார் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு கார்  ஜானின் கார் மீது பயங்கரமாக மோதியது. அப்போது அந்த காரில் இருந்து மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன்  வந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஜானை சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா, ஜானை காப்பாற்ற முயன்றார். இதில் அவர் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அதன்பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து அவர்கள் வந்த காரிலேயே தப்பித்து சென்றது.

 இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.  கொலை செய்யப்பட்ட ஜானின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே போலீசார் கொலையாளிகளை  பச்சபாளிமேடு பகுதியில்  மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் போலீசாரை தாக்க முயன்றதில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டு ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் தற்காப்புக்காக அவர்களை நோக்கி போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோர் துப்பாக்கியால் காலில் சுட்டனர்.

இதில் காயம் அடைந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் காயமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டரும், ஏட்டும் சிகிச்சைக்காக அங்கு சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், பெரியசாமி, சிவக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஏற்கெனவே 4 பேர் பிடிபட்டநிலையில், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 9 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து