எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. அதனால் விரலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சையினால் முதல் 3 போட்டிகளில் கீப்பிங், கேப்டன் பொறுப்பிலிருந்து சாம்சன் விலகுவதாகக் கூறப்பட்டுள்ளது. என்.சி.ஏ.வில் உள்ள மருத்துவர்கள் விக்கெட் கீப்பிங்கில் இருந்து சஞ்சு சாம்சனுக்கு சிறிது ஓய்வு தேவை என அறிவுறுத்தியுள்ளார்கள். இம்பாக்ட் பிளேயர் விதியின்படி பேட்டராக மட்டுமே சாம்சன் தொடர்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
23 வயதாகும் ரியான் பராக் தற்போது இளம் கேப்டனாக இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கிறார். இதற்கு முன்பு விராட் கோலி 22 வயதில் ஆர்.சி.பி. அணியை தலைமை ஏற்றது குறிப்பிடத்தக்கது. பயிற்சி ஆட்டத்தில் ரியான் பராக் அரைசதம் அடித்துள்ளார். பேட்டிங், பீல்டுங்கில் அசத்தும் பராக் பந்துவீசுவதும் குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை மார்ச் 23-ல் எதிர்கொள்ளவிருக்கிறது.
சஹால் - தனஸ்ரீ விவாகரத்து
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் யுஸ்வேந்திர சஹால். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ வர்மா, பாடல் நிகழ்ச்சிகளில் பாடகியாக அறிமுகமாகினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீக்கு கிடைத்து நடன போட்டிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தன.
இந்த நிலையில், இருவரும் பரஸ்பரமாக பிரிய முடிவெடுத்து விவகாரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். மேலும், மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். போட்டி தொடங்கவிருப்பதால், அதற்கு முன்னதாக அவரது வழக்கை முடித்து வைக்க அவரது வழக்குரைஞரும் கோரிக்கை வைத்தார். அதன்படி, கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் கொடுக்க சஹால் ஒப்புக் கொண்டார். இதனால், இருவருக்கும் விவாகரத்து வழங்கி மும்பை குடும்ப நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புகழ் பரப்பும் ப்ராவோ
கௌதம் கம்பீருக்குப் பதிலாக கே.கே.ஆர். அணியின் ஆலோசகராக முன்னாள் மே.இ.தீ. வீரரும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான டிவைன் ப்ராவோ நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ப்ரோவோ பேசியதாவது: கே.கே.ஆர். அணியில் சாம்பியன்களுக்கான மனநிலையை கொண்டு வருவேன். நான் வெற்றிப் பெறுவதை நம்புகிறேன். என்னுடைய சாதனைகள் அவர்களுக்காக பேசும். ஆனால், முடிவாக அடுத்த தலைமுறை கிரிக்கெட்டர்களை அவர்களது வழியிலேயே சாம்பியன்களாக்க உதவ வேண்டும். கே.கே.ஆர். அணி மீது உலகம் முழுவதும் நன்மதிப்பு இருக்கிறது. நான் விளையாடும்போது கே.கே.ஆரில் சில வீரர்கள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இந்த அணியில் இணைவது மகிழ்ச்சி. டிரினிடாட் & டொபாக் அணியில் கேப்டனாக இருப்பது அதிர்ஷடமானது. உலகம் முழுமைக்கும் கே.கே.ஆர். அணியின் புகழினை கொண்டுச் செல்வதில் உறுதியாக இருக்கிறேன். வெற்றிக்குக் காரணம் போட்டி மீதான ஆர்வமே. இந்த அணியில் 9-10 வீரர்கள் சாம்பியன்ஷிப்பில் வெற்றிப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே எப்படி வெற்றிப் பெறுவதெனத் தெரியும். அதுதான் எங்களது நோக்கமும் என்றார்.
பேட்மிண்டன்: ரஜாவத் வெற்றி
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சுவிட்சர்லாந்து வீரர் டோபியாஸ் கொன்சி உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரஜாவத் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் பிரியான்ஷு ரஜாவத், பிரான்ஸ் வீரர் டோமா ஜூனியர் போபோவ் உடன் மோதுகிறார்.
வருண் சக்கரவர்த்திக்கு பாராட்டு
கே.கே.ஆர். அணியில் 2020-ல் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி தனது சிறப்பான பந்துவீச்சினால் இந்திய அணிக்கும் தேர்வானார். கே.கே.ஆர். அணி கடந்தாண்டு ஐ.பி.எல். கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி இருந்தார்கள். சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியிலும் வருண் சக்கரவர்த்தி முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் சுனில் நரைன் பேசியதாவது: பல ஆண்டுகளாக நாங்கள் எங்களை நிரூபித்து வருகிறோம். நாங்கள் கூட்டாக நன்றாக பந்து வீசுகிறோம். வருண் சக்கரவர்த்தி எங்கள் பக்கம் இருப்பது எப்போதும் நல்லது. நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றை, அழுத்தத்தை வருண் எப்போதும் தொடர்ச்சியாக செய்கிறார். கே.கே.ஆர். அணி தனது முதல் போட்டியில் ஆர்.சி.பி.யை மார்ச்.22இல் எதிர்கொள்கிறது. 71 ஐ.பி.எல். போட்டிகளில் 83 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி 7.56ஆக இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
மின்பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: செந்தில் பாலாஜி எச்சரிக்கை
20 Mar 2025சென்னை: மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
தெலுங்கில் கேள்வி எழுப்பிய போதும் திரும்பி பார்க்காத பொள்ளாச்சி ஜெயராமன் அமைச்சர் கே.என். நேரு நகைச்சுவை
20 Mar 2025சென்னை: நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழிலும், தெலுங்கிலும் பேசி வாய்ப்பு கேட்ட போதிலும் பொள்ளாச்சி ஜெயராமன் எங்களை பார்த்தது கூட இல்லை என அமைச்சர் கே.என்.
-
ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்குப்பதிவு
20 Mar 2025சென்னை: ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
காசா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்: பலி எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு
20 Mar 2025டெய்ர் அல் பலாஹ்: காசா மீது இஸ்ரேல் நடத்தி தீவிர தாக்குதலில் பலி எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.
-
22 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொலை:பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு
20 Mar 2025புதுடெல்லி: சத்தீஸ்கரில் நடைபெற்ற இருவேறு மோதல்களில் 22 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளா
-
பதற்றம் தணியாததால் நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
20 Mar 2025நாக்பூர்: வன்முறை நடைபெற்று 3 நாட்களுக்கு மேல் ஆகியும் நாக்பூரில் பதற்றம் தணியவில்லை. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.
-
சேலம் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை
20 Mar 2025ஈரோடு: ஈரோட்டில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீசார்
20 Mar 2025சென்னை: தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
-
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பான வேல்முருகன் பேச்சு:முதல்வர் கண்டனம்
20 Mar 2025சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் வேல்முருகன் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அமைச்சர் மீது சேற்றை வீசியவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்
20 Mar 2025சென்னை: அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: இந்தியாவுக்கு 118-வது இடம்
20 Mar 2025வாஷிங்டன்: உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் தேதி (நேற்று) கொண்டாடப்பட்டது. இதில் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில்
-
நாக்பூர் வன்முறை குற்றவாளிகளை பிடிக்க 18 சிறப்பு குழுக்கள்: காவல்துறை தகவல்
20 Mar 2025மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரத்தில் நடந்த வன்முறையில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 18 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது
-
1,200 பணியிடங்களை நிரப்ப மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் சிறப்பு தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு
20 Mar 2025சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான 1,200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
-
வரும் 30-ம் தேதி முதல் மதுரை-விஜயவாடா இடையே விமான சேவை தொடக்கம்
20 Mar 2025மதுரை: மதுரை-விஜயவாடா இடையே வருகிற 30-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படுகிறது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா ஒப்புதல் வெள்ளை மாளிகை தகவல்
20 Mar 2025வாஷிங்டன் டி.சி: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா ஒப்பு கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
-
வனங்களில் சாலை அமைக்க முதல்வர் உத்தரவு: அமைச்சர் பொன்முடி தகவல்
20 Mar 2025சென்னை: வனங்களில் சாலை அமைக்க தேவையான பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
-
தரமணியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு: அமைச்சர் கே.என்.நேரு உறுதி
20 Mar 2025சென்னை: தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.
-
ராஜஸ்தான் கேப்டன் ரியான்
20 Mar 2025இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. அதனால் விரலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
-
இந்திய வீரர்களுக்கான கட்டுப்பாடுகளில் எந்த மாற்றம் இல்லை: பி.சி.சி.ஐ. அதிரடி
20 Mar 2025மும்பை: வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் தங்குவது குறித்த பி.சி.சி.ஐ. கட்டுப்பாட்டில் மாற்றமில்லை என அதன் செயலாளர் தேவஜித் சைகியா அறிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் சோதனை விவகாரம்: வரும் 25-ம் தேதி வரை நடவடிக்கை கூடாது அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
20 Mar 2025சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25-ம் தேதி வரை எந்த மேல்நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்
-
போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் , நடத்துநர் பணிகளுக்கு ஏப். 21 வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
20 Mar 2025சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
-
பார்லி. மக்களவைக்கு டி-சர்ட் அணிந்து வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
20 Mar 2025புதுடெல்லி: பாராளுமன்றத்தின் மக்களவைக்கு எம்.பி.க்கள் டி-சர்ட் அணிந்து வந்ததால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
-
நீர்வரத்து 1,500 கனஅடியாக நீடிப்பு: ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
20 Mar 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
பேரிடர் பட்டியலில் வெயில் தாக்கத்தை சேர்க்க வேண்டும் மத்திய அரசுக்கு பாராளுமன்றக்குழு பரிந்துரை
20 Mar 2025புதுடெல்லி: மத்திய அரசு தனது பேரிடர் மேலாண்மைத் திட்டங்களில் வெப்ப அலைகள் போன்ற "புதிய மற்றும் வளர்ந்து வரும்" பேரிடர்களைச் சேர்க்க வேண்டும் என்று பாராளுமன்றக் குழு பரி
-
பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
20 Mar 2025சென்னை: மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.&n