முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தர்பூசணி சாகுபடியால் நஷ்டம்: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      தமிழகம்
PR-Pandian 2023-09-25

Source: provided

சென்னை : தர்பூசணி சாகுபடியால் நஷ்டம் ஏற்பட்டதற்கு இழப்பீடு வழங்க விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்பூசணி பழங்களில் ஊசி போட்டு நிற கலப்படம் செய்கின்றனர் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்த தவறான கருத்தால் தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிலோ ரூ.15க்கு விற்ற தர்பூசணி தற்போது கிலோ ரூ.3 ஆக குறைந்துவிட்டது. விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ஏக்கருக்கு தலா ரூ. 50ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கான இழப்பீடு வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு' என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 

இந்தநிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். அந்த போராட்டத்தில், தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். குத்தகை விவசாயிகள் சாகுபடி உரிமையை உறுதிப்படுத்தி அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து