எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஐ.பி.எல்.-2025 சீசனின் 18-வது ஆட்டம் நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி 32-வது வெற்றியைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு அதிக வெற்றிகளை தேடித் தந்த கேப்டன் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார். இதற்கு முன் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஷேன் வார்னே 31 ஆட்டங்களில் அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்து சாதனை படைத்திருந்தார்.
_____________________________________________________________________________________
இஷாந்த் சர்மாவுக்கு அபராதம்
தெலங்கானாவில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் நடைபெற்ற போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் போது ஆட்டத்தின் நடத்தை விதிகளை மீறிய குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இஷாந்த் சர்மா அவர் மீதான லெவல் 1 குற்றத்தை ஒப்புக்கொண்டதால், கள நடுவரின் முடிவே இறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல்.லின் சட்டவிதிகள் 2.2-ன் படி, மைதானத்தில் இருக்கும் பொருள்கள் அல்லது கிரிக்கெட் உபகரணங்களை தேவையின்றி சேதப்படுத்துவதற்கு இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.
_____________________________________________________________________________________
பாகிஸ்தானுக்கு அபராதம்
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் மௌண்ட் மாங்கனுவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் வழக்கமான நேரத்தைவிட பாகிஸ்தான் அணி ஒரு ஓவர் மெதுவாக பந்து வீசியதற்காக, அந்த அணி வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுவதாக எலைட் பேனல் நடுவர் ஜெஃப் க்ரோவ் தெரிவித்தார்.
ஐ.சி.சி. சட்டவிதி 2.22-ன் படி மெதுவாக பந்துவீசும் அணிக்கு 5 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும். களநடுவர்கள் கிறிஸ் பிரவுன் மற்றும் பால் ரீஃபல் இருவரும் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கேப்டன் முகமது ரிஸ்வான் இதை ஒப்புக்கொண்டார். முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
_____________________________________________________________________________________
பாட்மின்டன் பயிற்சியாளர் கைது
பெங்களூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி இரு ஆண்டுகளாக ஹுலிமாவு பகுதியில் பாட்மின்டன் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில், அங்கு பயிற்சியாளராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாலாஜி சுரேஷ் (26) அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு கூடுதல் பயிற்சி தருவதாகக் கூறி பலமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவரை வன்கொடுமை செய்த பாலாஜி சுரேஷ், இதனை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், பாலாஜி அந்தச் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கடந்த மார்ச் 30 அன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த நிலையில் தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்ற சிறுமி, பாலாஜி வற்புறுத்தியதால் பாட்டியின் போனில் இருந்து தனது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அந்த புகைப்படங்களை போனில் பார்த்தபின் சிறுமியிடம் இதுபற்றி விசாரித்த அவரது பாட்டி, சிறுமியின் பெற்றோருக்கு உடனடியாக இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பாலாஜி சுரேஷை காவல்துறையினர் கைது செய்தனர் அவர்மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
_____________________________________________________________________________________
இங்கிலாந்துக்கு புதிய கேப்டன்
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக (ஒருநாள் + டி20) பட்லர் செயல்பட்டு வந்தார். அவரது தலைமையில் இங்கிலாந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.
இதனையடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து பட்லர் விலகுவதாக அறிவித்தார். அதன தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு கேப்டன் யார் என்பது குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகியதை அடுத்து இங்கிலாந்தின் புதிய கேப்டனாக (ஒருநாள் + டி20) ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
_____________________________________________________________________________________
பிராவோவின் வித்தியாசமான செயல்
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக லக்னோ அணி கொல்கத்தாவிற்கு சென்றுள்ளது. அங்கு இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இதுவரை 4 போட்டிகளில் ஆடி 201 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றி உள்ளார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் பயிற்சியை மேற்கொண்டு வரும் நிக்கோலஸ் பூரனின் கால்களை, நகைச்சுவைக்கு பெயர் பெற்ற பிராவோ தொட்டு வணங்கி உள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட்டில் சகோதரத்துவத்தின் நட்பு மற்றும் மரியாதைக்குரிய தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும் நகைச்சுவையாகத் தோன்றும் இந்த சைகை, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
_____________________________________________________________________________________
ஜெசிகா பெகுலா சாம்பியன்
பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சார்லஸ்டன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றைய பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), சக நாட்டவரான சோபியா கெனின் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா பெகுலா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சோபியா கெனினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
_____________________________________________________________________________________
அணியில் வங்காளதேச வீரர்
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான நசீர் ஹொசைன் 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தார். அந்த கால கட்டங்களில் 115 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 சதங்கள் மற்றும் 14 அரை சதங்கள் அடித்துள்ளார். இதனிடையே கடந்த 2023-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதற்காக நசீர் ஹொசைன் 6 மாத இடைநீக்கத்துடன் 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டார்.
அதன் காரணமாக அவர் உள்ளூர் தொடர்கள் உள்பட எந்த கிரிக்கெட்டிலும் களமிறங்கவில்லை. இந்நிலையில் அவரது தடை காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. எனவே அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்கலாம் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-04-2025.
07 Apr 2025 -
திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலம்
07 Apr 2025திருவாரூர் : ஆரூரா தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
-
டெஸ்ட் விமர்சனம்
07 Apr 2025நட்சத்திர கிரிக்கெட் வீரரான சித்தார்தை அணியில் இருந்து நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்கிறது. அதனால், ஓய்வு அறிவிப்பை வெளியிட அவரை வற்புறுத்துகிறது.
-
5 ஆயிரம் கனஅடியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு
07 Apr 2025தருமபுரி : 5 ஆயிரம் கனஅடியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
ஜப்பானில் விபத்து: 3 பேர் பலி
07 Apr 2025டோக்கியோ : ஜப்பானில் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் டாக்டர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மீ்ண்டும் இணைந்த பிரஷாந்த்-ஹரி கூட்டணி
07 Apr 2025நடிகர் பிரஷாந்தை வைத்து கடந்த 2002 ஆம் ஆண்டு ஹரி இயக்கிய, தமிழ் என்ற படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலை வாரியது.
-
வரி விதிப்பை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை : அதிபர் ட்ரம்ப் திட்டவட்டம்
07 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
-
அ.தி.மு.க. எப்போதுமே நொந்து நுலாகி போனது கிடையாது: இ.பி.எஸ். பதிலடி
07 Apr 2025சென்னை, அ.தி.மு.க. எப்போதுமே நொந்து நுலாகி போனது கிடையாது. நான் மட்டுமல்ல அ.தி.மு.க.
-
இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சி
07 Apr 2025மும்பை : இந்திய பங்கு சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியில் பா.ஜ.க. தீவிரம்
07 Apr 2025புதுடெல்லி : புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது.
-
க.மு க.பி விமர்சனம்
07 Apr 2025காதலர்கள், திருமணத்துக்கு பிறகு சிறு சிறு பிரச்சனைகளைக்கூட கடக்க முடியாமல் விவாகரத்துக்கு சொல்லும் நிலையைச் சொல்லும் படம் தான் க.மு - க.பி.
-
தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளியேற்றம் : செங்கோட்டையனுக்கு மட்டும் பேச அனுமதி
07 Apr 2025சென்னை : பேரவையிலிருந்து அ.தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் உள்ளே உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டது.
-
தமிழக டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம்
07 Apr 2025சென்னை, டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென கேட்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.
-
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்
07 Apr 2025சென்னை, மீனவர் விடுதலை-கச்சத் தீவு விவகாரத்தில் பெரிய அளவில் எந்த முன்னெடுப்புகளும் இல்லை என்றும் பிரதமர் மோடியின் இலங்கை
-
அமெரிக்க வருவாய் துறையில் 20,000 ஊழியர்கள் பணிநீக்கம் : அதிபர் டிரம்பின் அடுத்த நடவடிக்கை
07 Apr 2025அமெரிக்கா : அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
-
இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம்: ராகுல்
07 Apr 2025பெகுசராய், பீகார் இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
இஎம்ஐ விமர்சனம்
07 Apr 2025மாத தவனைத் திட்டத்தின் (EMI) கீழ் பொருட்களை வாங்கியவர்கள் என்ன என்ன இன்னலுக்கு ஆளாகிறார்கள் என்பதை எச்சரிக்கையாக சொல்லும் படம் தான் இஎம்ஐ.
-
டி.ஐ.ஜி. வருண்குமாா் தொடர்ந்த வழக்கில் சீமான் இன்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
07 Apr 2025திருச்சி : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட
-
கலால் வரியால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பா? - மத்திய அரசு பதில்
07 Apr 2025புது தில்லி : கலால் வரி உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
-
சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
07 Apr 2025சென்னை, தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.
-
நான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலையை இழக்க மாட்டார்கள: மம்தா
07 Apr 2025கொல்கத்தா, உச்ச நீதிமன்ற உத்தரவால் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் வேலை பாதுகாக்கப்படும் என்றும் தான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலையை இழக்க மாட்டார்கள் என்
-
வக்பு சட்டம் தொடர்பாக அமளி: ஜம்மு-காஷ்மீர் சட்டசபை ஒத்திவைப்பு
07 Apr 2025ஜம்மு, வக்பு சட்டம் தொடர்பாக விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்திவைக்க சபாநாயகர் மறுத்ததை அடுத்து, ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ
-
ஐ.பி.எல்.லில் இருந்து ஓய்வா? - எம்.எஸ். டோனி பதில்
07 Apr 2025சென்னை : ஐ.பி.எல்.-லிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி மனம் திறந்துள்ளார்.
-
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தியது மத்திய அரசு : நாடு முழுவதும் இன்று முதல் அமல்
07 Apr 2025புதுடில்லி : நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
-
ஜனாதிபதி போர்ச்சுக்கல் பயணம்
07 Apr 2025புதுடெல்லி : அரசுமுறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு போர்ச்சுக்கல் சென்றடைந்தார்.