எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : நமக்குள்ளே ஏற்பட்டிருக்கின்ற முற்போக்கு, சமத்துவ எண்ணங்களும், சிந்தனைகளும் எல்லோரிடமும் ஏற்படவேண்டும். அதற்காக நாம் ஓயாமல் உழைக்கவேண்டும். வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது, ஆற்றல் வாய்ந்தது என்று நான் உளப்பூர்வமாக நம்புகிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த விழாவுக்கு வருவதற்கு முன்னால், சைதாப்பேட்டையில் தமிழகத்தின் தனிப்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கிய எம்.சி.ராஜா பெயரில் அமைந்திருக்கும் மாணவர் விடுதியை திறந்து வைத்துவிட்டு நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.
சகோதரர் திருமாவளவன் அந்த விடுதியில் தங்கிப் படித்தவர்தான். அதை திறந்து வைத்துவிட்டு அந்தக் கட்டிடத்தை சுற்றிப்பார்த்தோம். சுற்றிப்பார்த்த நேரத்தில் தன்னையே மறந்து அவர் சொன்னார், இங்கே தங்கி, மீண்டும் ஒரு ஐந்து வருடங்கள் படிக்கலாம் போல தோன்றுகிறது என்றார். இன்றைக்கு எல்லாருக்கும் அரசியல், சமூக அறிவியல் பாடம் சொல்லித் தருகின்ற சிந்தனையாளராக, கொள்கை பிடிப்புமிக்க அரசியல் தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார்.
இத்தகைய பெருமைக்குரிய விடுதியை திறந்து வைத்திருக்கின்ற இந்த நாளில், அந்த விடுதியில் முகப்புறத்தில் எம்.சி.ராஜாவின் மார்பளவு சிலை மிக விரைவில் வைக்கப்படும் என்பதை நான் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கிறேன். சென்னையில் இருக்கின்ற பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றுவரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த மாணவர்களுக்கு இந்த எம்.சி.ராஜா விடுதி பேருதவியாக நிச்சயமாக இருக்கும்.
ஆதிதிராவிடர்களுக்கு நலத்திட்ட உதவி செய்வதோடு நம்முடைய அரசினுடைய கடமை முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. சுயமரியாதை சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்று இதைத்தான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். நம்முடைய பாதையும், பயணமும் மிக நீண்டது. என்னைப் பொறுத்தவரைக்கும், சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவச் சமுதாயத்தை அமைக்க வேண்டும்.
இதற்கான மாற்றம் தனிமனிதர்களில் தொடங்கி, சமூகத்தின் ஒட்டுமொத்த எண்ணமாக வெளிப்படவேண்டும். அப்போதுதான், ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணிலேயும், மக்களுடைய எண்ணத்திலேயும் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்க முடியும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்ட வரலாற்றை கடந்து நூறு, இருநூறு ஆண்டுகளாக நாம் அடைந்திருக்கின்ற வளர்ச்சியும், வெற்றியும், சமூக மாற்றமும், கொஞ்சம்தான்.
நமக்குள்ளே ஏற்பட்டிருக்கின்ற முற்போக்கு, சமத்துவ எண்ணங்களும், சிந்தனைகளும் எல்லோரிடமும் ஏற்படவேண்டும். அதற்காக நாம் ஓயாமல் உழைக்கவேண்டும். வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது, ஆற்றல் வாய்ந்தது என்று நான் உளப்பூர்வமாக நம்புகிறேன். தமிழ், தமிழர் என்ற உணர்வுதான் நம்மை ஒன்றிணைக்கும். நம்முடைய பாதையில் இடர்கள் ஏற்படும், ஏற்படுத்தப்படும். அதையெல்லாம் உணர்ந்துதான் நம்முடைய உழைப்பைக் கொடுக்க வேண்டும். அதைத்தான் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் முதலானோர் செய்தார்கள்.
எதிரிகளையும் - எதிரிகளின் பரப்புரைகளையும் அடையாளம் கண்டு கொண்டாலே, அந்தத் தடைகளை உடைப்பது எளிதாகிவிடும். இந்தச் சமூகத்தில் ஆங்காங்கே நடைபெறுகின்ற ஒரு சில பிற்போக்குத்தனமான செயல்களைக் காட்டி, இதுதான், பெரியார் மண்ணா? இதுதான், அம்பேத்கர் மண்ணா? என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறவர்களின் எண்ணம் என்ன தெரியுமா? இந்த மண்ணில் இந்தக் கொடுமைகள் இன்னும் தொடர்கின்றதே என்ற கவலை கிடையாது.
அவர்களுடைய எண்ணம் “நீங்கள் மாற்றத்தை விதைத்துவிட்டதாக, பண்படுத்திவிட்டதாக பெருமைப்படுகின்ற மண்ணில் இன்னமும் எங்களுடைய பழமைவாதமும், பிற்போக்குத்தனமும், அடக்குமுறையும் இருக்கிறது” என்று காண்பிக்கின்ற ஆணவம்தான் அந்த பேச்சு. நம்முடைய உழைப்பால், சமூகத்தில் எஞ்சியிருக்கின்ற அந்தக் கொடுமைகளையும் நிச்சயம் களையெடுப்போம். சமூகப் பணிகளாலும், சட்டப் பணிகளாலும் சமத்துவத்தை நோக்கிய நகர்வுகளை நாம் சாத்தியப்படுத்தி ஆகவேண்டும்.
அதற்கு, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட மானிட சமுதாயத் தலைவர்கள் தந்திருக்கும் அறிவொளியில், மக்களோடு பயணிப்போம். பொது உடைமை, சமத்துவம், சமூகநீதி கொண்ட சமுதாயத்தை உருவாக்க அம்பேத்கர் பிறந்தநாளில் மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
சீனாவில் பரவும் காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
15 Apr 2025பெய்ஜிங் : சீனாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
சீனாவை மிரட்டும் சூறாவளி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
15 Apr 2025பெய்ஜிங் : சீனாவில் கடுமையான சூறாவளிக் காற்று வீசிவரும் நிலையில், மக்களின் பாதுகாப்புக்காக, அங்கு பொதுமுடக்கம் போன்ற கடுமையான காட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
நயினார் பா.ஜ.க. தேசியத் தலைவராகவே ஆகலாம்: தங்கம் தென்னரசு கிண்டல்
15 Apr 2025சென்னை : பழமொழிப் புலவரான நயினார் பா.ஜ.க. தேசியத் தலைவராகவே ஆகலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டலடித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-04-2025
15 Apr 2025 -
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது
15 Apr 2025ராமேஸ்வரம், தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது.
-
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்
15 Apr 2025திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
15 Apr 2025டெல்அவிவ் : காஸா நகரத்திலுள்ள மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், மருத்துவப் பணியாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.
-
இந்திய ராணுவத்தில் வீரர்கள் பற்றாக்குறை : பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்
15 Apr 2025புதுடெல்லி : இந்திய ராணுவம் தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு நான் பொறுப்பல்ல : அமெரிக்க அதிபர் விளக்கம்
15 Apr 2025வாஷிங்டன் : ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு நான் பொறுப்பல்ல என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மேற்கு வங்கம் பற்றி எரிகிறது, முதல்வர் அமைதி காக்கிறார்: யோகி கடும் தாக்கு
15 Apr 2025ஹர்தோய் (உ.பி), மேற்கு வங்கம் பற்றி எரிகிறது.
-
நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்..!
15 Apr 2025மும்பை : நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குஜராத்தைச் சேர்ந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
குட் பேட் அக்லி படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்
15 Apr 2025சென்னை, குட் பேட் அக்லி படக்குழுவிடன் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது
15 Apr 2025புதுடில்லி, 2025-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது.
-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
15 Apr 2025சென்னை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
பா.ம.க.விற்குள் இருந்த சலசலப்பு சரியாகி விட்டது: ஜி.கே. மணி பேட்டி
15 Apr 2025சென்னை, பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிய உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
-
போராட்டங்களுக்கு தடை விதிக்க மறுப்பு: ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான மானியங்களை நிறுத்தினார் ட்ரம்ப்..!
15 Apr 2025வாஷிங்டன், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு தடை விதிக்க நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததையடுத்து 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர்
-
அமலாக்கத்துறை சம்மன் பழிவாங்கல் நடவடிக்கை : ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு
15 Apr 2025புதுடெல்லி : குருகிராம் நிலமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தொழிலதிபர் ராபர்ட் வதேரா தெரிவித்துள
-
மே 2-ல் அ.தி.மு.க. செயற்குழுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
15 Apr 2025சென்னை, வரும் மே.2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அ.தி.மு.க.
-
பத்தாம் வகுப்பு தோ்வு நிறைவு: மே 19-ல் முடிவுகள் வெளியாகிறது
15 Apr 2025சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நிறைவு பெற்ற நிலையில் மே 19-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.
-
நாம் முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
15 Apr 2025சென்னை, நாம் முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கடந்த 4 ஆண்டுகளில் 37 அரசுக்கல்லூரிகள் திறப்பு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Apr 2025சென்னை, தி.மு.க.
-
வெப்ப அலை பாதிப்பால் உயிரிழந்தால் ரூ.4 லட்சம்: தெலங்கானா அரசு அறிவிப்பு
15 Apr 2025ஐதராபாத், வெப்ப அலை மற்றும் வெயில் தாக்க பாதிப்புகளை மாநில பேரிடராக அறிவித்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை மாநில உரிமைகள் நாளாக அறிவிக்க வி.சி.க. எம்.எல்.ஏ. கோரிக்கை
15 Apr 2025சென்னை : கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை மாநில உரிமைகள் நாளாக அறிவிக்க வி.சி.க. எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார்.
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி: காசாவில் பலி 51 ஆயிரமாக உயர்வு
15 Apr 2025காசா சிட்டி : இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக இதுவரை காசாவில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
-
விருத்தாசலம் பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.90 லட்சம்: அமைச்சர் தகவல்
15 Apr 2025சென்னை : விருத்தாசலம் பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் கே.என்.நேரு, விருத்தாசலத்தில் பழைய பேருந்து ந