எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1000 பழங்குடியினர் குடியிருப்புகளை திறந்து வைத்து 49,542 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:- இன்று (நேற்று) வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்த சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை தீண்டாமை குற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக முழங்கி வரலாற்றை மாற்றிய புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள். அதனால்தான் திராவிட மாடல் ஆட்சியிலே தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாகவும், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தோம்.
இன்று (நேற்று) காலையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளோம். சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் வேகமாக நகர வேண்டும். இந்த மண்ணில் இருக்கிற ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் மாற்றத்திற்கான சிந்தனை வலுப்பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளோம்.
புரட்சியாளர் அம்பேத்கரை உயர்த்தி பிடித்துக் கொண்டாடும் இயக்கம் தான் திராவிட இயக்கம். அவர் எழுதிய சாதிய ஒழிக்க வழி என்ற நூலை 1930-ம் ஆண்டே தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார். புரட்சியாளர் அம்பேத்கர் நமக்கான அடையாளம் என்று தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கிறோம்.
சமூக நீதி, சமத்துவம், தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் புரட்சியாளர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் மக்களவையில் 2 முறையும், மாநிலங்களவையில் ஒரு முறையும் பங்கெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்தவர். அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆதிதிராவிடர், பழங்குடியினரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் சமூக நீதி மற்றும் சமத்துவ சிந்தனை குறித்து 6,977 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாள் அன்று டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் 174 மாணவர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஏனென்றால் இது திராவிட மாடல் அரசின் சாதனை.
மாணவர்களின் கல்விக்காக பல திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமல்ல, அதிக எண்ணிக்கையில் விடுதிகளையும் கட்டி இருக்கிறோம். மாணவர்களின் முன்னேற்றம் என்பது கண்கள் மாதிரி என்றால், பெண்களின் முன்னேற்றம் என்பது இதயத்துடிப்பு மாதிரி. அதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அந்த சமூகத்தின் பெண்கள் முன்னேற்றத்தை வைத்து அளவிடுகிறேன் என்று சொன்னார்.
அதனால்தான் பெரிதும் விவசாய தொழிலாளர்களாக இருக்கிற ஆதிதிராவிட மகளிரை நில உடமையாளராக மாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு 'நன்னி லம்' என்ற மகளிருக்கான நிலம் வாங்கும் திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். அண்ணல் அம்பேத்கரின் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 3,950 தொழில்முனைவோருக்கு ரூ.630 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் தொல் குடி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நான் உறுதியோடு சொல்லிக் கொள்ள விரும்புவது ஆதிதிராவிட மக்களின் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு எப்போதும் துணை நிற்கும். சாதியின் பெயரால் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது, கோவிலுக்குள் நுழையக் கூடாது என்பதை எல்லாம் நம்முடைய கொள்கைகளால் போராட்டங்களால் இடைவிடாத பரப்புரைகளால் உடைத்து நொறுக்கி விட்டோம். கல்வியும், படிப்பும், வேலையும், பதவியும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கையில் அதிகாரம் செலுத்தும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்தி இருக்க கூடிய மாற்றம்.
சாதிதான் பிளவுபடுத்தும் முதலாவது சக்தி. அந்த ஆயிரம் ஆண்டு அழுக்கை ஒழிக்கத்தான் நாம் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் தமிழர்கள் என்று உணர வைப்பதற்கு தான் இன்று பாடுபடுகிறோம். இந்த ஆட்சிதான் பொற்காலம். நமது பாதையும், பயணமும் மிக நீண்டது. என்னைப் பொறுத்தவரைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவச் சமுதாயம் அமைய வேண்டும். வெறுப்பு அரசியலை விட, அன்பை விதைக்க கூடிய அரசியல்தான் வலுவானது. ஆற்றல் வாய்ந்தது என்று நான் நம்புகிறேன். தமிழ், தமிழர் என்ற ஒன்றுதான் நம்மை ஒன்றிணைக்கும். சமூக நீதி, பொதுவுடமை சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க புரட்சியாளர் பிறந்தநாளில் மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம். ஜெய்பீம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
சீனாவில் பரவும் காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
15 Apr 2025பெய்ஜிங் : சீனாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
சீனாவை மிரட்டும் சூறாவளி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
15 Apr 2025பெய்ஜிங் : சீனாவில் கடுமையான சூறாவளிக் காற்று வீசிவரும் நிலையில், மக்களின் பாதுகாப்புக்காக, அங்கு பொதுமுடக்கம் போன்ற கடுமையான காட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
நயினார் பா.ஜ.க. தேசியத் தலைவராகவே ஆகலாம்: தங்கம் தென்னரசு கிண்டல்
15 Apr 2025சென்னை : பழமொழிப் புலவரான நயினார் பா.ஜ.க. தேசியத் தலைவராகவே ஆகலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டலடித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-04-2025
15 Apr 2025 -
காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
15 Apr 2025டெல்அவிவ் : காஸா நகரத்திலுள்ள மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், மருத்துவப் பணியாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.
-
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு நான் பொறுப்பல்ல : அமெரிக்க அதிபர் விளக்கம்
15 Apr 2025வாஷிங்டன் : ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு நான் பொறுப்பல்ல என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மேற்கு வங்கம் பற்றி எரிகிறது, முதல்வர் அமைதி காக்கிறார்: யோகி கடும் தாக்கு
15 Apr 2025ஹர்தோய் (உ.பி), மேற்கு வங்கம் பற்றி எரிகிறது.
-
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது
15 Apr 2025ராமேஸ்வரம், தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது.
-
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்
15 Apr 2025திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
இந்திய ராணுவத்தில் வீரர்கள் பற்றாக்குறை : பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்
15 Apr 2025புதுடெல்லி : இந்திய ராணுவம் தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்..!
15 Apr 2025மும்பை : நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குஜராத்தைச் சேர்ந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
பா.ம.க.விற்குள் இருந்த சலசலப்பு சரியாகி விட்டது: ஜி.கே. மணி பேட்டி
15 Apr 2025சென்னை, பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிய உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
-
குட் பேட் அக்லி படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்
15 Apr 2025சென்னை, குட் பேட் அக்லி படக்குழுவிடன் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை சேனலுக்கும் தொடர்பில்லை: சீமான் பரபரப்பு அறிக்கை
15 Apr 2025சென்னை : நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை யூடியூப் சேனலுக்கும் தொடர்பில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
-
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது
15 Apr 2025புதுடில்லி, 2025-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது.
-
போராட்டங்களுக்கு தடை விதிக்க மறுப்பு: ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான மானியங்களை நிறுத்தினார் ட்ரம்ப்..!
15 Apr 2025வாஷிங்டன், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு தடை விதிக்க நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததையடுத்து 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர்
-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
15 Apr 2025சென்னை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
அமலாக்கத்துறை சம்மன் பழிவாங்கல் நடவடிக்கை : ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு
15 Apr 2025புதுடெல்லி : குருகிராம் நிலமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தொழிலதிபர் ராபர்ட் வதேரா தெரிவித்துள
-
டோனிக்கு கிளார்க் புகழாரம்
15 Apr 2025லக்னோவில் நடைபெற்ற போட்டியில் சி.எஸ்.கே. அணி த்ரில் வெற்றி பெற்றது.
-
விருதுநகர் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Apr 2025சென்னை : விருதுநகர் அருகே காரிசேரி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
மே 2-ல் அ.தி.மு.க. செயற்குழுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
15 Apr 2025சென்னை, வரும் மே.2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அ.தி.மு.க.
-
பத்தாம் வகுப்பு தோ்வு நிறைவு: மே 19-ல் முடிவுகள் வெளியாகிறது
15 Apr 2025சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நிறைவு பெற்ற நிலையில் மே 19-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.
-
வெப்ப அலை பாதிப்பால் உயிரிழந்தால் ரூ.4 லட்சம்: தெலங்கானா அரசு அறிவிப்பு
15 Apr 2025ஐதராபாத், வெப்ப அலை மற்றும் வெயில் தாக்க பாதிப்புகளை மாநில பேரிடராக அறிவித்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
15 Apr 2025லக்னோ : தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
-
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
15 Apr 2025சென்னை : டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு போலீசார், மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட