முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காட்டுமன்னார்கோவில் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

சென்னை : காட்டுமன்னார்கோவில் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற 3 சிறுவா்கள் நீரில் மூழ்கி திங்கள்கிழமை(ஏப். 14) உயிரிழந்தனா். இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு. க. ஸ்டாலின், அவர்தம் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள வடக்கு கொளக்குடியைச் சோ்ந்த முஜிபுல்லா மகன் உபயதுல்லா (8), ஜாபா் சாதிக் மகன் முகமது அபில் (10), சாதிக் பாட்ஷா மகன் ஷேக் அப்துல் ரஹ்மான் (13) ஆகியோர் ஓடையில் தமது நண்பர்களுடன் சேர்ந்து திங்கள்கிழமை மாலை குளிக்கச் சென்றனா். அப்போது, ஓடையில் பள்ளமான பகுதியில் மேற்கண்ட மூன்று சிறுவா்களும் தவறி விழுந்ததில் உயிரிழந்தனர். இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து