எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரும் 23-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது டாஸ்மாக் சார்பில், மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி மற்றும் தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். இந்த வாதத்தின்போது, “அமலாக்கத் துறை எப்போதும் வெளிப்படையாக இருந்ததில்லை. வெளிப்படையாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் அமலாக்கத்துறை ஒளிந்து கொண்டுள்ளது.
எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை கருதுகிறது? எதற்காக சோதனை செய்கிறோம்? என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும். அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு முதல் 2021 வரை ஆண்டு வரை முறைகேடு கூறப்படும் நிலையில், தற்போது தான் ஞானம் வந்தது போல விசாரணை நடத்துவது ஏன்? .இன்றைக்கு டாஸ்மாக் குறிவைக்கப்படுகிறது. நாளை ஒவ்வொரு துறையாக குறிவைக்கப்படும். விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகளை அடைத்து வைத்து நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பியது சரியான நடத்தையா?” என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.
அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, “மாநில காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. முறைகேடு நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத் துறை விசாரணை நடத்தலாம். டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. சிலர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளது.” என்று வாதிட்டிருந்தார்.
தொடர்ந்து இந்த வழக்கில் இறுதி விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ்சிங் நேற்று தனது பதில் வாதத்தில், “அமலாக்கத் துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பு இல்லை. மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத் துறை எவ்வாறு சொல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வரும் 23-ம் தேதி (நாளை), இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை கூட்டம் : இன்று மீண்டும் கூடுகிறது
20 Apr 2025சென்னை, 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது.
-
14 வயது வீரர் குறித்து சுந்தர் பிச்சை கூறியது?
20 Apr 2025ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 36-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் ஜெய்பூரில் மோதின.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-04-2025
21 Apr 2025 -
தோல்விக்கு நானே பொறுப்பு: ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்
20 Apr 2025ஜெய்ப்பூர், தோல்விக்கான பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று ராஜஸ்தான் பொறுப்பு கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
-
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக 'இன்டர்போல்' உதவியை நாடிய வங்காளதேச அரசு
20 Apr 2025டாக்கா, ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 11,753 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: சமூக நலத்துறை தகவல்
20 Apr 2025சென்னை, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 11,753 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
-
கல்விக்கட்டண நிர்ணய விண்ணப்பம்: தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Apr 2025சென்னை, புதிய கல்விக் கட்டண நிர்ணய விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் மே 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது
20 Apr 2025அகர்தலா, இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்காளதேச பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
ஆவேஷ் கானாகவே இருக்க விரும்புகிறேன்: லக்னோ வீரர்
20 Apr 2025ஜெய்பூர், நான் ஆவேஷ் கானாகவே இருக்க விரும்புகிறேன் என்று லக்னோ வீரர் ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.
திரில் வெற்றி...
-
இன்று இந்தியா வருகிறார் அமெரிக்கா துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
20 Apr 2025புதுடில்லி, அமெரிக்க துணை அதிபா் ஜெ. டி. வான்ஸ் தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு ஏப்ரல் 21 முதல் 24 வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.
-
இந்தி திணிப்புக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வென்று காட்டுவோம்: துணை முதல்வர் உதயநிதி உறுதி
20 Apr 2025சென்னை, இந்தி திணிப்புக்கு எதிரான போரில் மக்கள் ஆதரவோடு வென்று காட்டுவோம் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழர் பண்பாட்டைக் காக்கும் இனப் போராட்டமா
-
கோவை த.வெ.க. பூத் கமிட்டி மாநாட்டில் விஜய் பங்கேற்கிறார்?
20 Apr 2025கோவை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கோவையில் நடைபெற உள்ள முதல் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித
-
படிக்கல், விராட் கோலி அசத்தல்: பஞ்சாபை வீழ்த்தியது பெங்களூரு
20 Apr 2025முல்லான்பூர், படிக்கல், விராட் அசத்தல் ஆட்டத்தால் பஞ்சாப் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
-
டெல்லி, ராஜஸ்தானுக்கு மதுரை, நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
20 Apr 2025சென்னை, டெல்லி, ராஜஸ்தானுக்கு மதுரை, நெல்லையில் இருந்து இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
-
ஐ.பி.எல்.லில் அதிவேக 200 சிக்சர்கள்: கே.எல். ராகுல் சாதனை
20 Apr 2025அகமதாபாத், ஐ.பி.எல். வரலாற்றில் வேகமாக 200 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல். ராகுல் பெற்றார்.
-
மெதுவாக பந்து வீச்சு: சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
20 Apr 2025அகமதாபாத், மெதுவாக பந்து வீசியதாக குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
பெல்ஜியம் கார் ரேஸில் 2-ம் இடம் பிடித்த அஜித் அணிக்கு பிரபலங்கள் வாழ்த்துகள்
21 Apr 2025சென்னை : பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சூரி நாயகனாக நடிக்கும் மண்டாடி
21 Apr 2025’மண்டாடி’ படத்தின் அறிமுக விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
-
தக் லைஃப் இசை வெளியீடு
21 Apr 2025உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தக் லைஃப்' திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
நாங்கள் விமர்சனம்
21 Apr 2025விவகாரத்தில் தாய் தந்தை பிரிய அவர்களின் மூன்று மகன்கள் கண்டிப்பான தந்தையுடன் வளர்கிறார்கள்.
-
இந்தியாவில் 30 கோடி மக்களை நிலநடுக்கம் தாக்கும் அபாயம் : அதிர்ச்சி தகவல் வெளியீடு
21 Apr 2025வாஷிங்டன் : உலகில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக இமயமலை உள்ளது.
-
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியான சச்சின்
21 Apr 2025விஜய் நடித்த சச்சின் படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரீ ரிலிஸாகியுள்ளது.
-
டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை ஐகோர்ட் தீர்ப்பு
21 Apr 2025சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரும் 23-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்த
-
கர்நாடக காவல்துறையின் முன்னாள் டி.ஜி.பி. கொலையில் தாயாரை சந்தேகிக்கும் மகன்..!
21 Apr 2025பெங்களூரு : கர்நாடக காவல்துறையின் முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
-
பிரதமர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத்தை முன்னிறுத்தும் திட்டம் இருந்தது: அகிலேஷ்
21 Apr 2025பிரயாக்ராஜ் : சமீபத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டம் இருந்ததாக சமாஜ்வாதி கட்சித்