முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய- வடகொரிய அதிபர்கள் அடுத்த வாரம் சந்திப்பு?

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

 சியோல், வரலாற்றில் முதல்முறையாக ரஷ்ய அதிபர் புடினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்து பேசினர். இதையடுத்து வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன. இதற்கிடையில், டிரம்ப் - கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பி விடுமோ என்கிற அச்சம் எழுந்தது. இது குறித்து பேசி தீர்வுகாண 3-வது உச்சி மாநாட்டுக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வரலாற்றில் முதல்முறையாக ரஷ்ய அதிபர் புடினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 24-ம் தேதி புடின் வடகொரியா செல்கிறார் என்றும், அந்த பயணத்தின் போது இரு நாட்டு தலைவர்கள் இடையிலான சந்திப்பு நடைபெறும் என்றும் தென்கொரியா அரசு ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இந்த தகவலை ரஷ்யாவோ, வடகொரியாவோ உறுதிப்படுத்தவில்லை

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து