முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பேருந்தை திருடி ஊர் திரும்ப முயன்ற வாலிபர் கைது

சனிக்கிழமை, 23 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : ஊரடங்கிற்கு முன் பெங்களூருவில் இருந்து ஆந்திரா வந்தவர் ஊர் திரும்ப முடியாததால் அரசு பேருந்தை திருடிச் சென்று பிடிப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் விஜயபுராவை சேர்ந்தவர் முசாமில் கான் என்ற இளைஞர். ஊரடங்குக்கு முன்பு ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருக்கிறார். நீண்ட நாட்களாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த அவர், நேற்று முன்தினம் நடந்தே ஊருக்கு திரும்பி செல்லலாம் என முடிவு செய்து, அனந்தபுரத்தில் இருந்து தர்மவரம் வரை நடந்து வந்துள்ளார்.

அங்குள்ள பணிமலையில் பேருந்து ஒன்று சாவியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்ட அவர், சட்டென யோசித்து பேருந்தை திருடிக் கொண்டு பெங்களூரு செல்ல முடிவெடுத்தார்.பேருந்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்வதை பார்த்த பணிமனை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அனந்தபுரத்தில் உள்ள தனியார் கார் தொழிற்சாலை அருகே வந்த பேருந்தை தடுத்து நிறுத்தி, பேருந்தை கடத்தி வந்த முசாமில் கானை கைது செய்தனர். சொந்த ஊர் செல்ல நினைத்தவர் தற்போது சிறை சென்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து