எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன், 30 - லாபத்தில் இயங்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கத் துடிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்தும், என்.எல். சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும்பட்சத்தில், தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கேட்டதற்கு, சாதகமான முடிவு எதையும் எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும்; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அரசு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் பிரச்சனை பல்லாண்டு காலமாக நிலவி வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு
2004-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ் நாட்டின் மின்சாரத் தேவையைப்
பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கினை வகிக்கக் கூடியதும், லாபத்தில் இயங்கக் கூடியதுமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப்பதில் குறியாக இருந்து வருகிறது. 2006-ஆம் ஆண்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின்
10 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்த போது, மத்திய அரசின் முடிவைக் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதனையடுத்து
மத்திய அரசு தனது முடிவை கைவிட்டது.
பின்னர், 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிந்து பதவி ஏற்ற காங்கிரஸ் கூட்டணி அரசு ஒரு சில நாட்களிலேயே, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 10 விழுக்காடு பங்குகளை விற்க முடிவு எடுத்த போது அதற்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தேன். பின்னர் மத்திய அரசின் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.
தற்போது மீண்டும் அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தவுடன், இதற்கு தமிழ்நாடு அரசின் எதிர்ப்பினை தெரிவித்ததோடு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப்பதால் ஏற்படக் கூடிய விளைவுகளையும், பாதிப்புகளையும் கோடிட்டுக் காட்டி, இந்த முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு பாரதப் பிரதமருக்கு 23.5.2013 அன்று கடிதம் எழுதி இருந்தேன். இதனை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று பாரதப் பிரதமர் அவர்கள் 8.6.2013 அன்று எனக்கு பதில் கடிதம் எழுதியிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவிற்கு ஒப்புதல் அளித்துள்ள தகவல் எனக்கு கிடைக்கப் பெற்றவுடன், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 22.6.2013 அன்று பாரதப் பிரதமருக்கு நான் மீண்டும் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவு தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகளை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழக மக்களின் மனதில் கவலையையும், நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது என்று நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.
அதனையடுத்து, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடர்ந்து பொதுத் துறை நிறுவனமாக இயங்க வேண்டும் என்ற நோக்கத்திலும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் கவலையைப் போக்கும் வகையிலும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்றும் 25.6.2013 அன்று பாரதப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் நான் தெளிவாக குறிப்பிட்டு இருந்தேன். இது குறித்து எவ்வித சாதகமான முடிவினையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை. இதற்கிடையில், நெய்வேலி பங்கு விற்பனை உறுதி என்று மத்திய நிலக்கரி துறை அமைச்சர் திரு. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
இந்தப் பிரச்சனை குறித்து முதலில் ஓர் அறிக்கை விடுத்த தி.மு.க. தலைவர்
திரு. கருணாநிதி, 'கனி'மொழிக்கு பதவி கிடைத்ததும் நிலக்'கரி'யை மறந்துவிட்டார்.
இந்தப் பிரச்சனை குறித்து சாதகமான முடிவினை மத்திய அரசு தெரிவிக்காவிட்டால், 3.7.2013-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, லாபத்தில் இயங்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கத் துடிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்தும்; பங்குகளை விற்கும்பட்சத்தில், தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கேட்டதற்கு, சாதகமான முடிவு எதையும் எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும்; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2.7.2013 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11 மணி அளவில், அரசு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
மாவட்ட வாரியாக நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை ஏற்போர் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்கள் முன்னிலையில் நடைபெறும். மேலும் இந்த ஆர்ப்பாட்டங்களில் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட மத்திய அரசு அலுவலகம் முன்பு நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை, கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து நடத்த வேண்டும்.
தொழிலாளர்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், கழக உடன்பிறப்புகளும், தொழிலாளர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 5 days ago |
-
3 போட்டிகள் கொண்ட தொடர்: இந்தியா - வங்காளதேசம் இன்று முதல் டி-20 போட்டியில் மோதல்
05 Oct 2024குவாலியர் : சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் வெல்லுமா?
-
சென்னையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட பணிக்கு 65 சதவீத நிதி வழங்க முடிவு: மத்திய அரசு அறிவிப்பு
05 Oct 2024டெல்லி, சென்னையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட பணிக்கு மொத்த மதிப்பீட்டில் 65 சதவீத நிதியை வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
ஒரே கட்டமாக 90 தொகுதிகளில் நடந்தது: அரியானா சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
05 Oct 2024சண்டிகார், அரியானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று 90 சட்டசபை தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் நடந்த வாக்குப்பதிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
-
தேர்தல் பத்திரங்கள் திட்டம்: தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
05 Oct 2024புதுடெல்லி : தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.
-
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
05 Oct 2024சென்னை : தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
05 Oct 2024சென்னை : தங்கம் விலை நேற்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது.
-
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
05 Oct 2024சென்னை : ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை
-
மெரினா கடற்கரையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி : சிறப்பு பேருந்துகள் இயக்கம்
05 Oct 2024சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பினார் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
05 Oct 2024நாகை : முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் சென்ற கார் நேற்று இ.சி.ஆர். சாலையில் உள்ள கோயில் மதில் சுவற்றில் மோதியது.
-
மராட்டியத்தில் ரூ.23,300 கோடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
05 Oct 2024மும்பை : மராட்டிய மாநிலத்தில் ரூ. 23,300 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
-
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு
05 Oct 2024தருமபுரி : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
-
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கைது
05 Oct 2024சென்னை : சென்னையில் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
தொழில்நுட்பக் கோளாறால் விமான சேவைகள் பாதிப்பு : இண்டிகோ நிறுவனம் விளக்கம்
05 Oct 2024புதுடெல்லி : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தங்களது விமான நிலைய குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக இண்டிகோ விளக்கம்
-
எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100-வது நாள்: ராகுல் காந்திக்கு காங். தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து
05 Oct 2024சென்னை : நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில் ராகுல் காந்திக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார
-
தமிழகத்தின் வட பகுதிகளில் அதிக மழைக்கு வாய்ப்பு: வடகிழக்கு பருவமழை 15-ம் தேதி தொடக்கம் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Oct 2024புதுடெல்லி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 15-ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மைசூரில் இளைஞர் தசரா விழா இன்று தொடக்கம் : பாதுகாப்பு பணியில் 1,239 போலீசார்
05 Oct 2024மைசூரு : மைசூரில் இளைஞர் தசரா இன்று துவங்குகிறது. பாதுகாப்புக்காக 1,239 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
-
தொடரும் போராட்டம்: சாம்சங் தொழிலாளர்கள், நிறுவனத்துடன் 3 தமிழக அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை
05 Oct 2024சென்னை, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் விரைந்து தீர்வு காண முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து நாளை 3 தமிழக அமைச்சர்கள் சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்
-
டிசம்பரில் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம்
05 Oct 2024புதுடெல்லி : சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் டிசம்பரில் நடைபெற உள்ளது.
-
மோசடி வழக்கில் கைதானவருக்கு த.வெ.க. கட்சியுடன் தொடர்பா? - கரூர் மாவட்ட தலைவர் விளக்கம்
05 Oct 2024கரூர் : மோசடி வழக்கில் கைதானவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கரூர் மாவட்ட தலைவர் விளக்கமளித்துள்ளார்.
-
பெண்கள் டி20 உலகக் கோப்பை லீக்: ஆஸ்திரேலியா அபார வெற்றி
05 Oct 2024ஷார்ஜா : பெண்கள் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
மின்நுகர்வோர் சேவை மையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு
05 Oct 2024சென்னை : சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு
-
தொழில்நுட்ப பராமரிப்பு பணி: பாஸ்போர்ட் இணையதளம் நாளை வரை செயல்படாது
05 Oct 2024புதுடெல்லி : பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
-
லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் பலி
05 Oct 2024பெரூட் : லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.
-
வாக்களித்த மனு பாக்கர்
05 Oct 20242024 பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார் மனு பாக்கர்.
-
நாடு முழுவதும் 5 மாநிலங்களில் 22 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
05 Oct 2024புதுடெல்லி, நாடு முழுவதும் 5 மாநிலங்களில் 22 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.