எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாஸ்கோ : இந்தியா - ரஷியா இடையேயான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா சென்றடைந்தார் பிரதமர் மோடி. மாஸ்கோ விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாஸ்கோ விமான நிலையத்தில், பிரதமர் மோடியை ரஷியாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் வரவேற்றார். அங்கிருந்து கார் மூலம் தி கார்ல்டன் நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நட்சத்திர விடுதி வாயிலிலும், இசைக் கருவிகள் இசைக்க பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தூதர அதிகாரிகளும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி ரஷியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு நேற்று (திங்கள்கிழமை) முதல் 3 நாள்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா - ரஷியா இடையிலான 22-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் விடுத்த அழைப்பின்பேரில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷியா சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது, ரஷிய அதிபர் புதினுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியா, ரஷியா இடையே இதுவரை 21 வருடாந்திர உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளிலும் ஒன்றுவிட்டு ஒன்றாக இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன. கடைசியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு தில்லியில் இந்திய-ரஷியா உச்சி மாநாடு நடைபெற்றது. ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவுக்கு வந்திருந்தார். அதன்பின் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இப்போது 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ரஷியாவில் நடைபெறும் மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த பிறகு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான மோடி ரஷியாவுக்கு செல்வதை உலக நாடுகள் அனைத்துமே மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. உக்ரைன் மீதான தாக்குதலை ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்றே ரஷியா கூறி வருகிறது.
ரஷியாவில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஆஸ்திரியா செல்லவிருக்கிறார் பிரதமர், அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் வான் டெர் பெல்லன், பிரதமர் கார்ல் நெகமர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தனது பயணத்தின்போது, ரஷிய தலைநகர் மாஸ்கோ மற்றும் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 6 days ago |
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு
06 Oct 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரத்து 713 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
உ.பி.யில் நாளை முதல் நவ. 8 வரை போலீசாருக்கான விடுமுறை ரத்து
06 Oct 2024லக்னோ : உத்தரபிரதேசத்தில் துர்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி நாளை 8-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை போலீசார் விடுமுறை எடுப்பதற்கு தடை வ
-
டெல்லியில் ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் வேடமிட்டு நடித்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு
06 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் வேடமிட்டவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கர்நாடகாவில் தொழிலதிபர் மாயம்: சேதமடைந்த நிலையில் கார் கண்டுபிடிப்பு
06 Oct 2024மங்களூரு : கர்நாடகாவில் தொழிலதிபர் மாயமான நிலையில் அவரது கார் சேதமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கனடாவில் உணவகத்தில் வெயிட்டர் வேலைக்காக குவிந்த இந்திய மாணவர்கள்
06 Oct 2024ஒட்டாவா : கனடா ஓட்டல் ஒன்றில் வெயிட்டர் மற்றும் சர்வர் வேலைக்காக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் வரிசையில் காத்திருந்த வீடியோ வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
-
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்க மாட்டோம்: பிரான்ஸ் அதிபர்
06 Oct 2024பாரிஸ் : இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தியதாகவும் மற்ற நாடுகளும் ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித
-
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
06 Oct 2024சென்னை : இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
-
காலாண்டு விடுமுறை: திருச்செந்தூரில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
06 Oct 2024திருச்செந்தூர் : விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் கோவிலில் நேற்று குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-10-2024
06 Oct 2024 -
மனைவியுடன் விமான சாகசத்தை கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின்
06 Oct 2024சென்னை : விமான சாகச நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுடன் மெரினா கடற்கரை பகுதிக்கு சென்று கண்டுகளித்தார்.
-
விமான சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்
06 Oct 2024சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமஆன சாகச நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மயக்க
-
அ.தி.மு.க. துவக்க விழா குறித்து வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
06 Oct 2024சென்னை : அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாணுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
-
லெபனானில் 250 மீ. நீள சுரங்கத்தை தகர்த்து விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு
06 Oct 2024டெல் அவிவ் : லெபனானின் தெற்கே அமைந்துள்ள சுரங்கத்தின் 250 மீட்டர் பகுதியை தகர்த்து விட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.
-
பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்கிறேன் : கெஜ்ரிவால் விதித்த நிபந்தனை
06 Oct 2024புதுடெல்லி : பா.ஜ.க.
-
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன : ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
06 Oct 2024புதுடெல்லி : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருப்பதாகவும், வரும் காலங்களில் இது இந்தியாவின் வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகளை பெரிய அளவில் பாதிக்கு
-
மும்பையில் குடியிருப்பு கட்டிடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
06 Oct 2024மும்பை : மராட்டிய மாநிலம் மும்பையின் செம்பூர் பகுதியில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
-
பாலியல் புகார்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக இன்று ஆஜராகிறார் நடிகர் சித்திக்
06 Oct 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக இன்று நடிகர் சித்திக் ஆஜராக உள்ளார்.
-
மண்டல, மகரவிளக்கு சீசனில் தினமும் சபரிமலைக்கு 80 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதி : கேரள முதல்வர் பினராய் விஜயன் தகவல்
06 Oct 2024திருவனந்தபுரம் : நடப்பு சபரிமலை சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள முதல்வர
-
நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட 8 மாநில முதல்வர்களுடன் இன்று அமித்ஷா ஆலோசனை
06 Oct 2024புதுடெல்லி : நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (7-ம் தேதி) ஆலோசனை நடத்துகிறார்.
-
முல்லைப்பெரியாறில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
06 Oct 2024சென்னை : முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் வானில் வர்ணஜாலம் புரிந்த விமானங்கள் : லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது
06 Oct 2024சென்னை : இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமானப் படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
-
விஜய் கட்சி மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் சிந்திப்போம்: புதுவை முதல்வர்
06 Oct 2024புதுச்சேரி : நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் சிந்திப்போம் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
-
சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவங்கிய மே.வங்க ஜூனியர் டாக்டர்கள்
06 Oct 2024கொல்கத்தா : கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் மேற்கு வங்கத்தில் ஜூனியர் டாக்டர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
-
யாருடன் விருந்து சாப்பிட பிடிக்கும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
06 Oct 2024புதுடெல்லி : வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அல்லது அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸ் ஆகியோரில் யார் ஒருவருடன் விருந்து சாப்பிட விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு மத்தி
-
நெசவாளர்களுக்கு மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்
06 Oct 2024சென்னை : நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய மானியத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்