எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டெல்லி: 27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கமான ஆணையுடன் டெல்லியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் பா.ஜ.க. அரசு தில்லியில் பல புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது
டெல்லியின் ஒன்பதாவது முதல்வராக பா.ஜ.க.வின் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் ரேகா குப்தா பதவியேற்றுள்ளார். சுஷ்மா ஸ்ராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு நான்காவது பெண் முதல்வர் என்கிற பெருமையையும் ரேகா குப்தா பெறுகிறார். மேலும் டெல்லியில் முதல்வர் பதவி வகித்த பாஜக தலைவர்களான மதன் லால் குரானா, சாஹிப் சிங் வர்மா, சுஷ்மா ஸ்ராஜ் ஆகியோருக்குப் பிறகு நான்காவது பாஜக முதல்வராகும் பெருமையையும் இவர் பெறுகிறார்.டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசுக்கு பல்வேறு புதிய சவால்கள் காத்திருக்கின்றன.
தேசிய தலைநகரின் நிதி நிலையைக் கண்காணிக்கும் அதே வேளையில், முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, முந்தைய அரசின் நலத்திட்டங்களைத் தொடர்வது, நகரத்தின் மாசுபாடு மற்றும் உள்கட்டமைப்பு பிரச்னைகளை சரிசெய்வது மற்றும் யமுனையைச் சுத்தம் செய்வதை உறுதி செய்வது போன்றவற்றை பாஜக அரசு நிறைவேற்ற வேண்டியக் கட்டாயத்தில் உள்ளது. தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி உருவானதிலிருந்து டெல்லியில் ஒருபோதும் தனது அதிகாரத்தை இழந்ததில்லை. சமீபத்தில் முடிவடைந்த 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 48 இடங்களுடன் பெரும்பாண்மையுடன் வெற்றியைக் கைப்பற்றியது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி 22 இடங்களை வென்றது, தலைநகரில் ஆம் ஆத்மியின் பத்தாண்டுக் கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது பா.ஜ.க.
பாஜகவால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரியாணாவைச் சேர்ந்த ரேகா குப்தாவின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றுதான்.. டெல்லி பெண்களுக்கு மாதாந்திரமாக ரூ. 2,500 கௌரவ ஊதியம் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகும். இது கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஒரு முக்கிய வாக்குறுதியாகும். அதேசமயம் ஆம் ஆத்மி கட்சியின் ரூ. 2,100 என்ற வாக்குறுதியை விட, பெண்களுக்கு மாதாந்திரமாக வழங்கப்படும் கௌரவ ஊதியத்தை பாஜக அதிகரித்தது. பாஜகவுக்கு மற்றொரு பெரிய சவாலாக இருப்பது.. 200 யூனிட் வரை இலவச மின்சாரம், இலவச தண்ணீர் இணைப்பு மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட ஆம் ஆத்மி அரசு தொடங்கிய நலத்திட்டங்களைத் தொடர்வதும் அடங்கும். இந்த சலுகைகள் நிறுத்தப்படாது என்று பாஜக வாக்காளர்களுக்கு உறுதியளித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி தலைவர்கள் கட்சியின் நீண்டகால உறுதிப்பாடு குறித்து அக்கட்சியின் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்திய சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இலவசத் திட்டங்கள் தொடரும், ஆனால் அத்தகைய திட்டங்களில் ஊழல் ஒழிக்கப்படும் என்று வாக்காளர்களுக்கு உறுதியளித்தனர்.
டெல்லியில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக பாஜக உறுதியளித்திருந்தது, தற்போது அது தேர்தல் பிரச்னையாக மாறியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சையை வழங்குகிறது, கூடுதலாக ரூ.5 லட்சம் மாநில அரசால் வழங்கப்படுகிறது. டெல்லியின் தற்போதைய சுகாதார அமைப்பு சிறந்ததாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதாகக் கூறி ஆம் ஆத்மி அரசு, ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டைச் செயல்படுத்த மறுத்துவிட்டது. அதேசமயம் தேர்தலில் வெற்றி பெற்றால் டெல்லியின் மொஹல்லா கிளினிக்குகளை சீர்திருத்துவதாக பாஜக உறுதியளித்துள்ளது. கடந்த 5-ம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பாஜகவின் வெற்றி கொண்டாட்டங்களின் போது, பிரதமர் மோடி, நதியைச் சுத்தம் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
டெல்லியில் யமுனை நதியின் 57 கி.மீ நீளமுள்ள பகுதியில் குப்பைகளை அகற்றும் பணிக்காகக் குப்பைகளை அகற்றும் கருவிகள், களை அறுவடை செய்யும் கருவிகள் மற்றும் தூர்வாரும் கருவிகளை நிர்வாகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. கூடுதலாக, டெல்லியின் சீரழிந்து வரும் சாலைகள் மற்றும் கழிவுநீர் அமைப்பை மேம்படுத்தவும் பாஜக உறுதியளித்துள்ளது. மேலும், உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகரங்களில் ஒன்றான டெல்லிக்கு, மாசுபாடு மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாக உள்ளது. 2020-ல் ஆம் ஆத்மி கட்சி செயல்படுத்திய பிறகு திருத்தத் தவறிய மின்சார வாகன கொள்கையைப் புதுப்பிப்பது உள்பட ஒரு பயனுள்ள மாசுக் கட்டுப்பாட்டு உத்தியைச் செயல்படுத்த பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். அதோடு தில்லியில் நிலையான தலைமையைப் பராமரிப்பது பாஜகவுக்கு மற்றொரு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 4 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்பதை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்: கமல்ஹாசன்
21 Feb 2025சென்னை : ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்பதை எனது அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் என்று கமல்ஹாசன் கூறினார்
-
பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி
21 Feb 2025ராமேசுவரம் : பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் வழியாக 9 மாதங்களுக்கு பிறகு கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
-
இந்தியாவுக்கு அமெரிக்கா நிதி: மத்திய வெளியுறவுத்துறை கவலை
21 Feb 2025புதுடெல்லி : இந்தியாவில் 'வாக்கு சதவீதத்தை அதிகரிக்க' அமெரிக்க அரசு 21 மில்லியன் டாலர் நிதியளித்ததாகக் கூறப்படும் செய்திகள் மிகவும் கவலை அளிக்கின்றன என்று வெளியுறவுத் த
-
சாஹல் - தனஸ்ரீ தம்பதி விவாகரத்து
21 Feb 2025மும்பை : இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
-
அதிகார துஷ்பிரயோகம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இயக்குநர் ஷங்கர் கண்டனம்
21 Feb 2025சென்னை : எந்திரன் திரைப்படத்தின் கதை தொடர்பான மதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ், சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம் என்று இயக்கு
-
பொன்முடி மீது சேறு வீசிய வழக்கு: 80 நாட்களுக்குப் பின் ஒருவர் கைது
21 Feb 2025விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசூர் கூட்டுச்சாலையில் பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற அமைச்சர் பொன்முடி, அப்போதையை கலெக்டர்
-
போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை
21 Feb 2025புதுடெல்லி : பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், மத்திய அ
-
74 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி கோப்பை இறுதிக்கு முன்னேறியது கேரள அணி
21 Feb 2025அகமதாபாத் : 74 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு கேரள அணி தேர்வாகியுள்ளது.
-
எதிர்கால சிந்தனைக்கு தயாராக இருப்பவர்கள் நமக்கு தேவை : பிரதமர் மோடி வலியுறுத்தல்
21 Feb 2025புதுடில்லி : 'உலகளாவிய சிக்கல்களைத் தீர்க்க நெருக்கடி மேலாண்மை மற்றும் எதிர்கால சிந்தனைக்கு எப்போதும் தயாராக இருப்பவர்கள் தேவை என்று பிரதமர் மோடி கூறினார்.
-
மும்பையை வீழ்த்தி ரஞ்சி கோப்பை இறுதிக்கு முன்னேறிய விதர்பா அணி
21 Feb 2025நாக்பூர், : ரஞ்சி கோப்பை அரையிறுதியில் விதர்பா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
-
ரயில்களில் பொது பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு: பயணிகள் கடும் அதிருப்தி
21 Feb 2025சென்னை : நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளதற்கு பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்..
-
சாதனையை முறியடித்த ஷமி
21 Feb 2025சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, வங்கதேசம் அணிகள் நேற்று முன்தினம் மோதின. இதில் முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-02-2025.
22 Feb 2025 -
வரும் 26-ம்தேதி ஈஷா மகா சிவராத்திரி விழா: அமித்ஷா, டி.கே.சிவகுமார் பங்கேற்பு
22 Feb 2025கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா இம்மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது.
-
பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எப்.பி.ஐ. புதிய இயக்குநராக பதவியேற்றார் காஷ் படேல்
22 Feb 2025அமெரிக்கா : அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார்.
-
ஹமாஸ் ஒப்படைத்தது இஸ்ரேலிய பெண் பணய கைதியின் சடலம்தான் : உறுதி செய்த குடும்பத்தினர்
22 Feb 2025இஸ்ரேல் : ஹமாஸ் படையினர் ஒப்படைத்தது இஸ்ரெலிய பெண்ணின் சடலம் தான் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
திருட்டு வழக்குகளில் ஞானசேகரன் கைது
22 Feb 2025சென்னை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் கைது செய்து 3 நாள் காவலில் எடுத்து பள்ளி
-
ஆளும் ‘பிக்பாஸ்’களுக்காக உழைப்பவர்: கமல்ஹாசன் மீது த.வெ.க. கடும் விமர்சனம்
22 Feb 2025சென்னை, இனியாவது ஆளும் ‘பிக்பாஸ்’களுக்காக உழைக்காமல் மக்களுக்கு உண்மையாக உழையுங்கள் என ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனை த.வெ.க.
-
கேரளத்தில் தாமரை மலரும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை
22 Feb 2025கொச்சி : கேரளத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
-
தியாகராஜர் பாகவர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மரியாதை : இ.பி.எஸ். அறிவிப்பு
22 Feb 2025சென்னை : மறைந்த நடிகரும் பழம்பெரும் பாடகருான எம்.கே.தியாகராய பாகவதரின 116 வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்படும் என்று அ.தி.மு.க.
-
நா.த.க.வில் இருந்து காளியம்மாள் விலகல்?
22 Feb 2025சென்னை, நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்
22 Feb 2025நாகப்பட்டினம், நாகை - இலங்கை இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
-
பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை
22 Feb 2025இஸ்லமாபாத், பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
22 Feb 2025சென்னை : விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
த.வெ.க. ஆண்டு விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி..?
22 Feb 2025சென்னை, சென்னையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆண்டு விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.