எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தமிழக மீனவர்கள் நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை மீட்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இலங்கை செல்லும் பிரதமர் மோடி இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் மற்றும் அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேற்று முன்தினம் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேறியது.
இந்த நிலையில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் நேற்று (நேற்று முன்தினம்) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 1974-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தம் (கச்சத்தீவு ஒப்பந்தம்) தான் நீடிக்கும் இப்பிரச்சனைக்கு அடிப்படையாக உள்ளது.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிர்த்து வந்துள்ளது. 1974-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போது கடுமையாக எதிர்த்தனர். 28.06.1974 அன்று மத்திய அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தில் மாநில அரசின் இசைவின்றி கையெழுத்திட்ட பிறகு, அப்போதைய முதல்வர் கலைஞர் உடனடியாக மறுநாளே 29.06.1974 அன்று தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய தினமே அப்போதைய இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
அதனைத் தொடர்ந்து, கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசின் முடிவை வன்மையாக எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் 21.08.1974 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க, கச்சத்தீவினை திரும்பப் பெற வேண்டும் என்ற நிலையான கோரிக்கையை வலியுறுத்தி, 03.10.1991, 03.05.2013, 05.12.2014 ஆகிய நாட்களில் தமிழ்நாடு சட்டசபை இதே போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
நமது மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதாலும், அவர்களது படகுகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்படுவதாலும், கடலோர மீனவ சமுதாயத்தினரின் வாழ்க்கை மிகுந்த கவலையிலும், துயரத்திலும் ஆழ்ந்துள்ளது. கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளால் மீனவர்களின் வாழ்வாதாரமும் நிலையற்றதாக மாறியுள்ளது. தான் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியுடன் 17.06.2021 அன்று நடைபெற்ற முதல் சந்திப்பின்போது, இப்பிரச்சினையை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். மேலும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முந்தைய கோரிக்கைகளை அடுத்தடுத்த சந்திப்பின் போதும் வலியுறுத்தினேன்.
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவது குறித்து 2021-ம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், பிரதமர் மோடிக்கும் பலமுறை கடிதங்கள் எழுதியுள்ளேன். 2024-ம் ஆண்டில், 530 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 2025-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 147 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நமது மீனவர்களுக்கு அதிகபட்ச சிறைத்தண்டனையும், பெருந்தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விடப்படுகிறது.
இலங்கையின் இத்தகைய தீவிர நடவடிக்கைகள் நமது மீனவர்களை வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளியுள்ளதால், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு ஒரே வழி கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து, கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.
மேலும் அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டுவர வேண்டும். நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
மறைந்த குமரி அனந்தனுக்கு தமிழக தலைவர்கள் புகழஞ்சலி
09 Apr 2025சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 23 பேர் உயிரிழப்பு
09 Apr 2025காஸா : காஸா நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டதாக அந்நகரத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்
-
குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் - இ.பி.எஸ். அஞ்சலி
09 Apr 2025சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் மறைவையடுத்து அவரது உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி செலுத்தினார்.
-
காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் வழிப்பாதை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
09 Apr 2025டெல்லி : காட்பாடி - திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரெயில் வழிப்பாதையை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்
09 Apr 2025சென்னை : நடிகர் தர்ஷனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக அடைக்கலம் : இந்தோனேசி அதிபர் அறிவிப்பு
09 Apr 2025காஸா : காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு இந்தோனேசியா அரசு தற்காலிக அடைக்கலம் அளிக்கும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
-
மேற்குவங்கத்தில் வக்பு வாரிய திருத்த மசோதா அமல்படுத்தப்படாது: மம்தா
09 Apr 2025கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் வக்பு வாரிய திருத்த மசோதா அமல்படுத்தப்படாது என்று முதல்வர் மமதா பானர்ஜி கூறினார்.
-
ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
09 Apr 2025ஜம்மு : ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
கான்வே மோசமான சாதனை
09 Apr 2025ஐ.பி.எல் தொடரில் முல்லன்பூரில் நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
-
சென்னைக்கு எதிராக சதம்: பிரியன்ஷ்-க்கு ஷ்ரேயாஸ் புகழாரம்
09 Apr 2025சண்டிகர் : ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த பேட்டிங் என்றும், சதமடித்த பிரியன்ஷ் ஆர்யாவுக்கு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
மேலும் 3 தமிழக மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை
09 Apr 2025ராமேசுவரம் : தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
-
சி.எஸ்.கே. தொடர் தோல்விகள்: பயிற்சியாளர் பிளெமிங் விளக்கம்
09 Apr 2025முல்லன்பூர் : சி.எஸ்.கே. தொடர் தோல்விகள் குறித்து பயிற்சியாளர் பிளெமிங் விளக்கமளித்துள்ளார்.
புள்ளிப்பட்டியல்....
-
தண்ணீர் தொட்டியில் வீசி குழந்தையை கொன்ற தாயை கைது
09 Apr 2025காந்திநகர் : அழுது கொண்டு இருந்த குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
-
நடத்தை விதியை மீறியதற்காக பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு 25 சதவீதம் அபராதம்: பி.சி.சி.ஐ.
09 Apr 2025சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-04-2025
10 Apr 2025 -
பாட்டியாலா நீதிமன்றத்தில் ராணா ஆஜர்: நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு
10 Apr 2025புதுடெல்லி, மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த போல
-
வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்குகள்: வரும் 16-ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
10 Apr 2025புதுடெல்லி, வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்களை வரும் 16-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது.
-
சென்னை பனையூரில் விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
10 Apr 2025சென்னை, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
-
அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை ஏன்? மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்
10 Apr 2025சென்னை, அமித்ஷாவின் தமிழக வருகை குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: 2 நாட்களில் ஒரு சவரன் விலை ரூ. 2,680 உயர்வு
10 Apr 2025சென்னை, தங்கம் விலை நேற்று (ஏப்.10) ஒரு பவுன் மீண்டும் ரூ.68,000-ஐ கடந்துள்ளது. இரண்டு நாள்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.
-
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
10 Apr 2025சென்னை, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு "சமத்துவம் காண்போம்" போட்டிகள்: தமிழக அரசு அழைப்பு
10 Apr 2025சென்னை, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மையம் வாயிலாக "சமத்துவம் காண்போம்" என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில் பல்வேறு போட்டிகள்
-
காகிதமில்லா சட்டசபையாக புதுச்சேரி அறிவிப்பு
10 Apr 2025புதுச்சேரி, புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதமில்லா சட்டப் பேரவையாக அறிவித்து துவக்கவிழாவுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரை அழைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது
-
தமிழக பா.ஜ.க. தலைவர் தேர்வு: அமித்ஷா இன்று ஆலோசனை
10 Apr 2025சென்னை, தமிழக பா.ஜ.க. தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
-
அக்காள்-தங்கை விஷம் குடித்த விவகாரம்: இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
10 Apr 2025தஞ்சாவூர், போலீஸ் நிலையம் முன்பு அக்காள்-தங்கை விஷம் குடித்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சர்மிளா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.