எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஐதராபாத்: அபிஷேக் சர்மா அதிரடியால் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
பஞ்சாப் அதிரடி...
முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். பஞ்சாப் அணி 66 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. பிரியன்ஷ் ஆர்யா சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் 36 ரன்களில் (2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் அசத்தல்...
அதன் பின், பிரப்சிம்ரன் சிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 23 பந்துகளில் 42 ரன்கள் (7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். நேஹல் வதேரா 27 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 36 பந்துகளில் 82 ரன்கள் (6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள்) எடுத்து ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஸ்டாய்னிஸ் அதிரடி...
இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 11 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். அதில், முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸ் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 4 ஓவர்கள் வீசிய முகமது ஷமி விக்கெட் ஏதும் எடுக்காமல் 75 ரன்களை வாரி வழங்கினார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், ஈசன் மலிங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ராக்கெட் வேகத்தில்...
பின்னர், 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ஆட்டம் தொடங்கியது முதலே பஞ்சாப் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். இருவரும் காட்டிய அதிரடியில் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் இருவரும் இணைந்து 83 ரன்களை சேர்த்தனர். அபிஷேக் சர்மா கொடுத்த பல கேட்ச் வாய்ப்புகளை பஞ்சாப் வீரர்கள் பிடிக்கத் தவறினர். இதனால், ரன் வேகமாக ஏறியது. 19 பந்துகளில் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா அசத்தினார். அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு கொடுத்த டிராவிஸ் ஹெட்டும் அரைசதம் விளாசினார்.
நங்கூரமிட்ட அபிஷேக்...
பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 8 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில், முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்ததும், ட்ராவிஸ் ஹெட் 66 ரன்களில் (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) பஞ்சாப் வீரர் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் வெளியேறினாலும், மற்றொரு முனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் விளையாடி பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்த அபிஷேக் சர்மா 40 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
அபார வெற்றி...
ஐதராபாத் அணி 222 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் (14 பவுண்டரி, 10 சிக்ஸர்) எடுத்து அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவருக்குப் பின்னர் வந்த கிளாசன் 21 ரன்களும், இஷன் கிஷன் 9 ரன்களும் எடுத்து ஐதராபாத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். முடிவில், 18.3 ஓவர்களில் ஐதராபாத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்ச சேஸிங்...
ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது அதிகபட்ச சேஸிங்காகவும் இது அமைந்தது. 6 போட்டிகளில் விளையாடிய ஐதராபாத் அணிக்கு இது 2வது வெற்றியாகும். 5-வது போட்டியில் விளையாடிய பஞ்சாப் அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.
அபிஷேக் சர்மா சாதனை...
இதற்கு முன்னதாக, ஐதராபாத் அணிக்கு அதிக ரன்கள் அடித்தவரான முன்னாள் கேப்டன் டேவிட் வார்னரின் (126 ரன்கள்) சாதனையையும், இந்தியர்களில் அதிக ரன் அடித்தவரான கேஎல். ராகுலின் (132 ரன்கள்) சாதனையையும் முறியடித்தார் அபிஷேக் சர்மா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
விருதுநகர் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Apr 2025சென்னை : விருதுநகர் அருகே காரிசேரி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை சேனலுக்கும் தொடர்பில்லை: சீமான் பரபரப்பு அறிக்கை
15 Apr 2025சென்னை : நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை யூடியூப் சேனலுக்கும் தொடர்பில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
-
ஏப். 21 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு
15 Apr 2025சென்னை : தமிழகத்தில் ஏப்ரல் 17 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
15 Apr 2025லக்னோ : தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
-
டோனிக்கு கிளார்க் புகழாரம்
15 Apr 2025லக்னோவில் நடைபெற்ற போட்டியில் சி.எஸ்.கே. அணி த்ரில் வெற்றி பெற்றது.
-
சுப்ரீம் கோர்ட்டில் வக்ப் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை
15 Apr 2025புதுடெல்லி : வக்ப் வாரிய திருத்தச்சட்டத்துக்கு எதிரான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (ஏப். 16) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
-
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
15 Apr 2025சென்னை : டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு போலீசார், மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட
-
ஐ.சி.சி.யின் மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு
15 Apr 2025துபாய் : ஐ.சி.சி.யின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளார்.
-
ரூ.70,000-க்கும் கீழ் குறைந்த ஒரு சவரன் தங்கம் விலை..!
15 Apr 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.70,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது
15 Apr 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.
-
மாநில உரிமைகளை பாதுகாக்க உயர் நிலைக்குழு அமைப்பு : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Apr 2025சென்னை : அடுத்தடுத்து மாநில பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய மத்
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
15 Apr 2025புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக
-
கட்சி வேறுபாடுகளை கடந்து தமிழ்நாட்டு உரிமைகளில் அனைவரும் ஓரணியில் சேர்ந்து செயலாற்ற வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Apr 2025சென்னை : தமிழ்நாட்டு உரிமைகள் என்று வருகிறதோ அந்த நிலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சி வேறுபாடுகளை கடந்து ஓரணியில் சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்று சட்டசபையில் ம
-
மாநில சுயாட்சி தீர்மானம்: பா.ம.க. ஆதரவு - அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க. எதிர்ப்பு - வெளிநடப்பு
15 Apr 2025சென்னை : மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு பா.ம.க. ஆதரவு தெரிவித்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்து அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.
-
மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
15 Apr 2025சென்னை : மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-04-2025
16 Apr 2025 -
201 விக்கெட்களை வீழ்த்தி கீப்பிங்கில் டோனி புதிய சாதனை
15 Apr 2025சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம். எஸ். டோனி ஐ.பி.எல். போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்
16 Apr 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.
-
43 வயதில் ஆட்டநாயகன் விருது: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எம்.எஸ்.டோனியின் சாதனைகள்
15 Apr 2025சென்னை : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
-
சேஸிங்கில் 30 முறை நாட் அவுட்: டோனிக்கு சிறப்பு போஸ்டர் வெளியீடு
15 Apr 2025மும்பை : ஐ.பி.எல். வரலாற்றில் டோனி படைத்த சாதனைக்கு ஐ.பி.எல். சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
ஆட்ட நாயகன்...
-
புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகம்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
16 Apr 2025சென்னை : புதுப்பிக்கப்பட்டுள்ள மெரினா கிளை நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கருத்தடை செய்த பிறகும் குழந்தை: இழப்பீடு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு
16 Apr 2025மதுரை : கருத்தடை செய்த பிறகும் குழந்தை பிறந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க. தேசிய இளைஞர் பிரிவு தலைவராகிறாரா அண்ணாமலை?
16 Apr 2025சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் பா.ஜ.க.
-
எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.டி.எம். எந்திரம்; சோதனை முயற்சியாக நடவடிக்கை
16 Apr 2025மும்பை : எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.டி.எம். எந்திரம் வைத்து சோதனை முயற்சியாக ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
-
எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் ரூ. 3 கோடி மதிப்பில் கலைஞர் திரைக்கருவூலம் அமைக்கப்படும் : அமைச்சர் சாமிநாதன் தகவல்
16 Apr 2025சென்னை : சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆா். திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ.