எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களும் கொழும்புவில் நடக்கிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.
இந்நிலையில், இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சமாரி அத்தபத்து கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி விவரம்: சமாரி அத்தபத்து (கேப்டன்), விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்ரமா, நிலாக்ஷி சில்வா, கவிஷா தில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, ஹாசினி பெரேரா, பியூமி வத்சலா, மனுடு நாணயக்காரா, டெவ்மி விஹங்கா, இனோகா ரனவீரா, இனோஷி பெர்னாண்டோ, ஹன்சிமா கருணாரத்னே, ராஷ்மிகா செவ்வந்தி, மல்கி மதரா, சுகந்திகா குமாரி, அச்சினி குல்சூரியா.
___________________________________________________________________________________________
ஐ.பி.எல். குறித்து திலக் வர்மா
நடப்பு ஐபிஎல் தொடரில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் லீக் சுற்றின் 41-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் திலக் வர்மா தனியார் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியில் பேசுகையில், நான் ரோஹித் சர்மாவுக்கும் சூர்யகுமார் யாதவுக்கும் அடிக்கடி சொல்வது ஒன்றுதான். நான் இன்னும் கோப்பை வென்ற உணர்வை அனுபவிக்கவே இல்லை. இந்த ஆண்டு நாங்கள் முழு மனதோடு போராட தயாராக இருக்கிறோம்.
ஹார்திக் பாண்டியா உடன் நல்ல நட்புறவு இருக்கிறது. டி20 அறிமுகத்தின் போது அவரிடமிருந்து தொப்பியைப் பெற்றது மறக்கமுடியாத தருணம். நான் 2022 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸில் சேர்ந்தேன். இது எனக்கு நான்காவது சீசன். பல மூத்த வீரர்களுடனும், உள்நாட்டு வீரர்களுடனும் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அது நம்பிக்கையை அதிகரிக்கிறது. ஐ.பி.எல்.லில் சர்வதேச தரத்தில் இருக்கும் பலரை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றார்..
___________________________________________________________________________________________
பஹல்காம் சம்பவம் குறித்து கோலி
ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல்களையும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்தத் தாக்குதல் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “பெஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அமைதியும், வலிமையும் கிடைக்க வேண்டும் எனவும் இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். இதேபோன்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ள பதிவில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நினைத்துக்கூட பார்க்க முடியாத வேதனையை அனுபவித்து வருகின்றனர். இந்த மாதிரியான நேரத்தில் நாம் அவர்களுடன் துணை நிற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
___________________________________________________________________________________________
ஐ.பி.எல்: பட்டாசுகள் வெடிக்க தடை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற மும்பை - ஐதராபாத் இடையிலான லீக் ஆட்டத்தின் போது பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரர்கள், நடுவர்கள் என அனைவரும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்க வேண்டும் என பி.சி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த போட்டியின் போது, சியர்லீடர்கள் நடனமாடக்கூடாது எனவும், பட்டாசுகள் வெடிக்கக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
___________________________________________________________________________________________
ஆர்.சி.பி. அணி புதிய சாதனை
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் (இன்ஸ்டாகிராம், எக்ஸ்) புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றன. இதன் காரணமாக அணிகளின் சமூக வலைத்தள பக்கங்களை ரசிகர்கள் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 19 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆர்.சி.பி. அணி படைத்துள்ளது. அந்த அணிக்கு அடுத்தபடியாக 18.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் சிஎஸ்கே அணி 2-வது இடத்திலும், 17 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 16 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது: தங்கம் விலை திடீர் சரிவு
23 Apr 2025சென்னை : தங்கம் விலை நேற்று (ஏப்.23) பவுனுக்கு ரூ.2,200 என குறைந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-04-2025
23 Apr 2025 -
பஹல்காம் தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கடற்படை அதிகாரி பலி
23 Apr 2025கர்னால் (ஹரியானா) : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் , திருமணமாகி ஏழு நாட்களேயான ஹரியானா மாநிலம் கர்னாலைச் சேர்ந்த 26 வயதான இந்திய கடற்படை அதிகார
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: அமெரிக்கா, ரஷ்யா கண்டனம்
23 Apr 2025வாஷிங்டன் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் அமெரிக்கா, ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது: மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
23 Apr 2025ஸ்ரீநகர் : பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது என்று
-
ஆனைமலையாறு, நல்லாறு விவகாரம்: சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்
23 Apr 2025சென்னை : ஆனைமலையாறு, நல்லாறு பேச்சுவார்த்தையில் கேரளா அரசு மெத்தனமாக உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
காஷ்மீர் தாக்குதலில் தொடர்பா? - பாகிஸ்தான் அமைச்சர் மறுப்பு
23 Apr 2025இஸ்லாமாபாத் : காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
-
வெளியேறும் சுற்றுலா பயணிகள்: காஷ்மீர் முதல்வர் உமர் வருத்தம்
23 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதால் மு
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
23 Apr 2025சென்னை : தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம் போன்று எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் : சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
23 Apr 2025சென்னை : பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்து பத்திரமாக அழைத்து வ
-
சென்னை விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ விரிவாக்க திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அனுமதி
23 Apr 2025சென்னை : சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
இலங்கைக்கு கடத்த முயன்ற அலுமினிய முலாம் பூசிய 8 கிலோ தங்கம் பறிமுதல்
23 Apr 2025கொழும்பு : இலங்கைக்கு கடத்த முயன்ற அலுமினிய முலாம் பூசிய 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 2 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
-
உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும் : உலக புத்தக நாளில் முதல்வர் ஸ்டாலினின் பதிவு
23 Apr 2025சென்னை : புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தை நேரில் ஆய்வு செய்த அமித்ஷா
23 Apr 2025ஜம்மு : ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக
-
டெல்டா பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்
23 Apr 2025சென்னை : டெல்டா பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சாலைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம்: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்
23 Apr 2025ஜெருசலேம் : காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இரு
-
காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் தொடர்புடைய 4 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு
23 Apr 2025ஜம்மு : பஹல்காம் தாக்குதல் தொடர்புடையதாக கருதப்படும் 4 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமரின் கான்பூர் பயணம் ரத்து
23 Apr 2025புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
4.3 ரிக்டர் அளவில் குஜராத்தில் நிலநடுக்கம்
23 Apr 2025காந்திநகர் : குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
-
பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் பிரதமருக்கு சொல்லியனுப்பிய செய்தி
23 Apr 2025ஸ்ரீநகர் : பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மனைவி மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பயங்கரவாதிகள் செய்தி அனுப்பியுள்ளனர்.
-
தமிழ்நாடு அரசுடன் அதிகார மோதல் இல்லை: கவர்னர் மாளிகை விளக்கம்
23 Apr 2025சென்னை : துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எந்தவித அதிகார மோதலும் இல்லை என கவர்னர் மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது.
-
யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் நான் முதல்வன் திட்ட பயனாளிகள் அதிகளவில் வெற்றி : துணை முதல்வர் உதயநிதி நெகிழ்ச்சி
23 Apr 2025சென்னை : தமிழகத்திலிருந்து யு.பி.எஸ்.சி.
-
பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
23 Apr 2025புதுடெல்லி : பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்
-
வேங்கைவயல் வழக்கு விசாரணை வரும் மே 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
23 Apr 2025புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 68 தமிழர்கள் பத்திரமாக மீட்பு
23 Apr 2025சென்னை : பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்த பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்ற 68 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.