முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக் மசூதி தற்கொலைப் படை தாக்குதலில் 21 பேர் பலி

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், அக்.21 - ஈராக்கில் ஷியா பிரிவு மக்களை குறிவைத்து மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஷியா பிரிவு மக்கள் மீது தொடர்ச்சியாக சன்னிப் பிரிவு ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைநகர் பாக்தாதில் ஷியா பிரிவு மக்கள் வழிபடும் அபாஸ் அல் அத்லி மசூதியை குறிவைத்து வந்த மர்ம நபர் அங்கு தொழுகை முடிந்தவுடன் தான் நிறப்பி வந்த வெடிப் பொருட்களை வெடிக்கச் செய்தார். இந்த பயங்கர தாக்குதலில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்