எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதிப்பும், மரியாதையும் மிக்கது மருத்துவப்பணி. மாணவர்களின் கனவுக்கல்வி எம்.பி.பி.எஸ்! பிளஸ்-2 உயிரியல் பாடப்பிரிவு படித்தவர்கள் இப்படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். எம்.எஸ்., எம்.டி. போன்ற முதுகலை மருத்துவ படிப்புகளும் உள்ளன. இதற்கு தனி நுழைவுத் தேர்வு இருக்கிறது. இத்தேர்வு எழுதாதவர்கள் எச்.ஐ.வி., நியூட்ரிஷியன், அவசர கால மருத்துவம், கிளினிகல் ரிசர்ச் போன்ற ஓராண்டு படிப்புகளை படிக்கலாம். பயோடெக்னாலஜி, மெடிக்கல்நானோ டெக்னாலஜி போன்ற பாடப்பிரிவுகளில் எம்.டெக். படிப்பும் இருக்கிறது. படித்தவுடன் ஏராளமான பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
பல் மருத்துவ படிப்பு (பி.டி.எஸ்.) மருத்துவம் சார்ந்த படிப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இது 5 ஆண்டுகால படிப்பு. பல் மருத்துவம், பல் அழகுபடுத்துதல் இதில் முக்கியமானது. இவர்களுக்கு நல்ல பணிவாய்ப்பு இருக்கிறது. படித்து முடித்தவர்கள் சொந்தமாக கிளினிக் நடத்தவும் தகுதி வாய்ந்தவர்கள் ஆகிறார்கள். டென்டல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், ஆய்வுக் கூடம், மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகள் கிடைக்கும்.
நர்சிங் (செவிலியர்) பணிக்கும் உலகம் முழுவதும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஜெனரல் நர்சிங் (3 ஆண்டு), பி.எஸ்சி. (4 ஆண்டு) பட்டப்படிப்புகளை படிக்கலாம். படித்துவிட்டு சிலகால அனுபவத்துக்கு பிறகு கார்டியோ தெரபிக் நர்சிங், சைக்கார்டிஸ்டிக் நர்சிங், பிசிசியன் அசிஸ்ட் போன்ற முதுநிலை பட்டப்படிப்பை படிக்கலாம். மாநில நர்சிங் கவுன்சிலில் பதிந்து வைத்தால் அரசுப்பணியும் பெறலாம். முதுநிலை நர்சிங் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பும், வருமானமும் உண்டு.
ஒரு மருந்தின் தன்மை, அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், அதன் குணாதிசயம், பக்க விளைவு பற்றி படிப்பது பார்மஸி (மருந்தாளுனர்). 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு, 4 ஆண்டு பட்டப்படிப்பு இருக்கிறது. மருத்துவத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த படிப்பை படிப்பவர்களுக்கு மருத்துவமனை, ஆராய்ச்சிக்கூடங்கள், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. முதுநிலை பட்டப்படிப்பு முடித்தால் வாய்ப்புகள் ஏராளம். மெடிக்கல் ஷாப் வைப்பதற்கு பார்மஸி படித்திருக்க வேண்டும்.
இந்தியாவின் இயற்கை மருத்துவத்தைப் பற்றிய படிப்பு சித்தமருத்துவம். உணவுப்பொருளை மருந்தாகப் பயன்படுத்தும் சிறப்பு மருத்துவமுறை இது. தற்போது மதிப்பு பெருகும் மருத்துவமாக இது உள்ளது.
பி.எஸ்.எம்.எஸ். என குறிப்பிடப்பட்டு இம்மருத்துவ பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. தாம்பரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட்டில் முதுநிலை சித்தமருத்துவம் படிக்கலாம். இவர்களுக்கும் பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன. சொந்தமாக மருந்து தயாரித்தும் விற்கலாம்.
பி.ஏ.எம்.எஸ். எனப்படும் ஆயுர்வேதமும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவம். பக்க விளைவற்ற இம்மருத்துவ முறைக்கு மவுசு அதிகரித்துள்ளது. 5 ஆண்டு பட்டப்படிப்பு, ஆயுர்வேதிக் பார்மசி என்ற டிப்ளமோ (2 ஆண்டு) படிப்பு இருக்கிறது. நெல்லை, சென்னை அரசு கல்லூரிகளில் படிக்கலாம். ஜெய்ப்பூரில் ஹஆயுர்வேதா நர்சிங் அண்ட் பார்மசி' என்ற ஒன்றரை வருட டிப்ளமோ படிப்பும், ராஜஸ்தான் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் ஹடிப்ளமோ இன் ஹெர்பல் மெடிசின்' என்ற ஓராண்டு படிப்பும் கற்பிக்கப்படுகிறது.
மனநிலை சார்ந்த உடலியல் கோளாறுகளை சரி செய்வது ஆக்குபேஷனல் தெரபி. மனிதனின் செயல்பாடுகள் மாறிப்போவதன் மர்மத்தை ஆராய்ந்து சிகிச்சை அளிப்பது இதன் பணி. எந்திரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய மனித சமுதாயத்துக்கு ஆக்குபேஷனல் தெரபி படித்தவர்களின் சேவை நிறையவே தேவைப்படுகிறது.
கண் குறைபாடுகளை அறிவதும், களைவதும் பற்றி படிப்பது ஆப்டோமெட்ரி. இதில் 2 ஆண்டு டிப்ளமோ மற்றும் 4 ஆண்டு இளநிலைப் படிப்புகள் உள்ளன. பணிவாய்ப்புகளும் தாராளம். பேச்சு மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவ படிப்பு ஆடியாலஜி. இது 3 ஆண்டு பட்டப்படிப்பு. பேச்சை மேம் படுத்தி முறைப்படுத்தும் ஹஸ்பீச் தெரபி' படிப்பும் உள்ளது. உடலின் உட்புறங்களை ஆராயும் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், அல்ட்ராசவுண்ட்ஸ், ஆன்ஜியோகிராம் போன்றவற்றை அறிவது ரேடியோகிராபி படிப்பு. ரேடியோ தெரபியில் சில பட்டப்படிப்புகள் (3 ஆண்டு) உள்ளன. டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.
மெடிக்கல் லேப் டெக்னாலஜி மருத்துவ துறையில் முக்கியமான படிப்பு. நோயை கண்டறிதல், பகுத்து ஆராய்தல், நோயை தடுக்க ஆய்வு செய்வது மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜிஸ்ட் பணி. உடலில் உள்ள நீர், ரத்தம், ரசாயன அளவு பற்றி கற்றுத்தரப்படும். இதில் டிப்ளமோ (டி.எம்.எல்.டி.), பட்டப்படிப்பு (பி.எம்.எல்.டி.) கள் உள்ளன. மருத்துவமனைகள், ஆய்வு மையங்கள், மெடிக்கல் லேப்களில் பணிவாய்ப்புகள் ஏராளம் இருக்கிறது.
இவை தவிர மருத்துவதுறையில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு சான்றிதழ் படிப்புகள் ஏராளம் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.