எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் அரக்கோணம் நகராட்சி டி.என்.எச்.பி. காலணியில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டேக்வாண்டோ உள் விளையாட்டு அரங்க கட்டிடத்தை பள்ளி கல்வி,; விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி விழா சிறப்புiயாற்றினார்கள்.இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சி.அ.ராமன். தலைமை தாங்கினார்.இந்த விழாவிற்கு சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் என்.ஜி.பார்த்தீபன், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி அவர்களும் முன்னிலை வகித்தனர்.
ஊக்கத்தொகை
பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விழாவில் பேசியதாவது. மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இந்த டேக்வோண்டோ உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மறைந்த முதலவர் அம்மா இந்தியாவிலேயே தமிழகம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கவேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களையும், இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கணைகளுக்கு நிதியுதவிகளை வழங்கி அவர்களுக்கு ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தி தந்துள்ளார்கள். மறைந்த முதல்வர் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில்தான் விளையாட்டுத்துறைக்கு என்று தனியாக ஒரு பல்கலைகழகத்தை உருவாக்கி விளையாட்டு துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு விளையாட்டுத்துறையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் ரூ.4.80 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையினை வழங்கியுள்ளது. மேலும் மறைந்த முதல்வர் அம்மா சர்வதேச அளவிலான நேரு விளையாட்டரங்கினை அமைத்து தமிழகத்திற்கு பெருமையை சேர்த்தார்கள்.
வேலூர் மாவட்டம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குகிறது. இந்த மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் தேசிய அளவில் வெற்றி பெற்று சாதனையை படைத்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் விளையாட்டு துறையை மேலும் மேம்படுத்தும் விதத்தில் ரூ5.0 கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய விளையாட்டரங்கமும், ரூ.1.0 கோடி மதிப்பில் அரக்கோணத்தில் ஒரு விளையாட்டரங்கமும் விரைவில் கட்டப்படும். இந்த விளையாட்டரங்கம் தமிழக அரசின் தன்னிறைவு திட்டத்தில் ரூ.70 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் ரூ24 இலட்சம் தனியார் பங்களிப்பும் உள்ளது அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் வேலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி மாவட்டம் மூன்று கல்வி மாவட்டமாக உருவாக்கப்படும் இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறன் மேம்படும் இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டு போட்டியில் வெற்றியும் தோல்வியும் சகஐமான ஒன்று. தோல்வி என்பது வெற்றிக்கான படிகட்டுகள் மேலும் இளைஞர்கள் முயன்றால் முடியாதது ஏதுமில்லை. மூச்சு நின்றால்தான் மரணம் அல்ல முயற்சி செய்யவில்லை என்றாலும் அது வெற்றி கிடைப்பதில் ஏற்படும் மரணம் ஆகும். ஆகவே மாணவர்களும் இளைஞர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். இந்த அரக்கோணம் டோக்வோண்டோ விளையாட்டு மூலம் இப்பகுதியல் உள்ள பல இளைஞர்கள் பயனடைந்துள்ளனர் எதிர் வரும் காலங்களிலும் இந்த விளையாட்டை மாணவர்கள் சிறந்;;த முறையில் கற்று வெற்றி பெற்று தமிழகத்திற்கும் இந்தயாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று வாழ்த்தி விழாவில் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு பதவியேற்று 100 நாட்களில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள் அடங்கிய 100 நாள் சாதனை கையேட்டினை பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களும், வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களும் வெளியிட்டார்கள். மேலும் வருவாய் துறையின் மூலம் 120 இருளர் இனத்தை சார்ந்தவர்களுக்கு இருளர் இன சான்றிதழ்களையும், 44 பயனாளிகளுக்கு ரூ.5.இலட்சத்து 10ஆயிரம் மதிப்பிலான முதியோர் உதவி, திருமண நிதியுதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் விபத்து நிவாரண நிதியுதவித்தொகையினையும் அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எ.ஜி.விஜயன், அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், வேக்வாண்டோ சங்கத் தலைவர் மரு.சி.எஸ்.சந்திரமௌலி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் துரைகுப்புசாமி, செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை கே.ராமமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஜி.கமலகுமாரி, நகராட்சி பொறியாளர் எம்.சண்முகம், அரக்கோணம் வட்டாட்சியர் பாஸ்கரன், அல்ட்ராடெக் நிர்வாக அலுவலர் ஜி.உதயகுமார், கிளைத் தலைவர் பிரசாந்த்ரஸ்தோகி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கேரளாவில் வாக்குப்பதிவின் போது மயங்கி விழுந்து 4 பேர் உயிரிழப்பு
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.