முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதாரணயம் ஒன்றியம், செம்போடை-புஸ்பவனம் இணைப்புப் பாலத்தின் அணுகு சாலை சீரமைக்கும் பணி கலெக்டர் சீ.சுரேஸ்குமார் நேரில் பார்வையிட்டார்

புதன்கிழமை, 19 ஜூலை 2017      நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், செம்போடை-புஸ்பவனம் இணைப்புப் பாலத்தின் அணுகு சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்திற்கு இடையூராக இருந்தது. இந்த பழுதை சரிசெய்திடக் கோரி வாட்சப் செயலியில்   மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு கோரிக்கை வரப்பெற்றது. அதனடிப்படையில் பாலத்தின் அணுகு சாலையில் ஏற்பட்டுள்ள பழுதை உடனடியாக சரிசெய்திட தடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஸ்குமார் உத்தரவிட்டார்.

 நேரில் ஆய்வு

அதனடிப்படையில் தொடங்கி நடைபெற்று வரும் பாலத்தின் சீரமைப்புப் பணிகளை மாவட்ட கலெக்டர்  முனைவர்.சீ.சுரேஸ்குமார்,  நேரில் ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து