முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி சாகும்வரை உண்ணாவிரதம் அன்னா ஹசாரே அறிவிப்பு

சனிக்கிழமை, 6 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

பெல்லாகவி: லோக்பால் மசோதா உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி டெல்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு கெஜ்ரிவாலையும், கிரண்பேடியையும் எனது இயக்கத்தில் சேர்த்தது நான் இருவருமே சுயநலவாதிகள் .
- அன்னா ஹசாரே

இதுகுறித்து அன்னா ஹசாரே கூறுகையில் 'தற்போதைய பிரதமர் மோடி லோக்பால் மசோதாவை கண்டுகொள்ளவி்ல்லை என்றும் ஊழலற்ற ஆட்சி அமைப்பேன் என்று பொய் கூறிவருகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். லோக்பால் மசோதா, லோக் ஆயுக்தா, தேர்தல் சீர்திருத்தம் ஆகிய மூன்றையும் வலியுறுத்தியும், ‛‛செய் அல்லது செத்துமடி '' என்பதற்கேற்ப வரும் 23ம் தேதி டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு கெஜ்ரிவாலையும், கிரண்பேடியையும் எனது இயக்கத்தில் சேர்த்தது நான் இருவருமே சுயநலவாதிகள் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து