எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையை கலக்கிய ரவுடிகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தேடப்பட்டு வந்த பிரபல தாதா பினு, என்கவுன்ட்டர் பயத்தில் தானாக அம்பத்தூர் துணை ஆணையர் முன் சரணடைந்தார்.
போலீசுக்கு தகவல்....
கடந்த 6-ம் தேதி போலீஸார் வாகனச்சோதனையில் எதேச்சையாக ஏ-பிளஸ் பிரிவு ரவுடி மதன் (எ) பல்லுமதன் போலீசாரிடம் சிக்க, அவர் கொடுத்த தகவலின் பேரில் தாதா பினு தனது பிறந்தநாளை கொண்டாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனது பிறந்த நாள் விழாவில் 'ஜிகர்தண்டா' படப் பாணியில் கேக் வெட்டிய தாதா பினுவுடன் 150-க்கும் மேற்பட்ட சென்னையின் ஏ-பிளஸ் மற்றும் ஏ, பி, சி பிரிவு ரவுடிகள் கலந்துக்கொண்டனர். சில ஆர்வக்கோளாறு இளைஞர்களும் கலந்துகொண்டனர்.
சுற்றி வளைத்த....
தமிழக போலீஸ் வரலாற்றில் இது போன்ற மெகா ரவுடிகள் வேட்டை நடந்ததில்லை. சினிமாவை மிஞ்சும் அனைத்துக் காட்சிகளும் அன்று நடந்தன. பூந்தமல்லியில் ஒதுக்குபுறமான லாரி ஷெட் ஒன்றில் மொத்தமாக கூடிய ரவுடிகள் மது அருந்தி, கும்மாளமிட்டு கேக் வெட்டினர். அப்போது பிறந்த நாள் கொண்டாடிய தாதா பினு அரிவாளால் கேக்கை வெட்டினார். பின்னர் வேறொரு இடத்தில் பிரியாணி விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்குள் போலீஸார் சுற்றி வளைத்து விட்டனர். இதில் பிறந்த நாள் கொண்டாடிய பினு உள்ளிட்டோர் தப்பிச் சென்றனர். 150 ரவுடிகளில் 73 பேர் மட்டுமே பிடிபட்டனர். மீதி ஆட்கள் தப்பிச் சென்றனர். இதில் பினுவும் தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
தாதா பினு சரண்...
இந்நிலையில் சென்னையில் ஆட்டம் போட்ட ரவுடிகள் பினு, அவரது கூட்டாளி விக்கி(எ) விக்னேஷ், நாகு (எ) நாகராஜ், அவர்களது பரம எதிரியான சி.டி.மணி அவரது கூட்டாளியும் பினுவின் சாம்ராஜ்யத்தை கைப்பற்றியவருமான அரும்பாக்கம் ராதா (எ) ராதாகிருஷ்ணன் ஆகியோரை எப்படியாவது பிடிக்கவேண்டும் என காவல்துறை மேலிடம் உத்தரவிட்டது. தேவைப்பட்டால் சுட்டும் பிடிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டதாக தகவல் பரவியது. பின்னர் போலீஸாரின் தேடுதல் வேட்டையில் தப்பி ஓடிய ரவுடிகளில் சிலர் பிடிபட்டனர்.
இதையடுத்து நேற்று காலை முதலே ரவுடி ராதாகிருஷ்ணன் சரண் என்ற தகவல் பரவிய நிலையில் திடீரென தாதா பினு அம்பத்தூர் துணை ஆணையர் முன் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பினுவின் கூட்டாளிகள் குறித்து விசாரணை நடக்கிறது. இந்நிலையில் என்கவுன்ட்டருக்கு பயந்து மற்றவர்களும் சரணடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பினு வாக்குமூலம்...
சரணடைந்த ரவுடி பினுவின் வாக்கும்மூலம் வீடியோவாக வெளியாகி உள்ளது. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது., “ஐயா என் பேர் பினு, நான் பிறந்தது சென்னை, பிறந்து, வளர்ந்தது எல்லாம் சூளைமேட்டில் தான். எனக்கு வயசு 50 ஆகுது. சுகர் பேஷண்ட். நான் கெட்ட சகவாசம் சேர்ந்து நிறைய ரவுடித்தனம் செய்து, நிறைய ஜெயில் வாசம் அனுபவித்து விட்டேன்.
வெளியில் வந்து திருந்தி வாழணும்னு ஓடி தலை மறைவாகிவிட்டேன். 3 வருஷமா தலைமறைவாக இருந்தேன். கரூரில் நான் இருந்த இடம் என் தம்பிக்கு மட்டும்தான் தெரியும். அவன் உனக்கு 50-வது பிறந்த நாள் வருது, நீ கொஞ்சம் சென்னைக்கு வா அண்ணா என்று கூப்பிட்டான். அவன் கூப்பிட்டதை வைத்து நானும் சென்னைக்கு வந்தேன். வந்த இடத்தில் இவன் சேர்த்து வச்ச ஆட்கள், மூன்று வருடம் ஆச்சே என்னைப்பார்த்து என்று எல்லோரும், எல்லா ரவுடிப்பசங்களும் வந்தார்கள். நான் கூட தம்பியிடம் ஏண்டா இப்படி செய்கிறாய்? என்று கேட்டேன்.
அப்ப என் தம்பி ஒன்றுமில்லை, அண்ணா நீ கேக் மட்டும் வெட்டி விட்டு போய்விடு என்று கூறினான். நான் அதை நம்பி கேக்கை வெட்டிட்டு, கிளம்பலாம் என்று முடிவு செய்யும் போதுதான் போலீஸ் ரவுண்டப் செய்து விட்டார்கள். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை, நான் என்ன செய்வது என்று தெரியாமல், குதித்து எஸ்கேப் ஆகி ஓடிவிட்டேன்.
ஆனால் சென்னை போலீஸ் என்னை ரவுண்டப் செய்து எங்கே போனாலும் என்னை விடுவதாயில்லை. அதனால் என்னால் எதுவும் பண்ணமுடியல, அதனால் நானே இங்க நேரா வந்துட்டேன். எனக்கு மன்னிப்பு கொடுத்து விடுங்க. நீங்க நினைக்கிற மாதிரி நான் அவ்வளவு பெரிய ரவுடியெல்லாம் கிடையாது.” என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
கேரளாவில் வாக்குப்பதிவின் போது மயங்கி விழுந்து 4 பேர் உயிரிழப்பு
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.