முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வங்கிகளின் வழக்கு செலவு ரூ. 1.8 கோடியை செலுத்த வேண்டும் மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

லண்டன்: இந்திய வங்கிகளுக்கான வழக்கு செலவுத் தொகையாக குறைந்த பட்சம் ரூ.1.8 கோடியை செலுத்துமாறு தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று விட்டு, அதனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் மல்லையா, லண்டனில் தஞ்சமடைந்து விட்டார். பின்னர், பல்வேறு நாடுகளில் உள்ள தனது சொத்துகள் முடக்கப்பட்டதற்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளித்த நீதிபதி ஆண்ட்ரியூ ஹென்ஷா, மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவரது சொத்துகளை முடக்க இந்திய கடன் மீட்பு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தார்.

மேலும் இந்த தீர்ப்பின் ஒரு பகுதியாக, இந்திய வங்கிகளுக்கான வழக்கு செலவுத் தொகையாக குறைந்தபட்சம் ரூ.1.8 கோடியை செலுத்த மல்லையாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், முழுத் தொகையை இறுதி செய்வதற்காக, சிறப்பு நீதிபதி தலைமையில் தனியாக விசாரணை நடைபெறவுள்ளது.

இதனிடையே, தன்னை நாடு கடத்த கோரி இந்தியா சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையையும் மல்லையா எதிர்கொண்டு வருகிறார். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் அடுத்த மாதம் 31-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து