முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

300 கிலோ மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: கடத்தல்காரர் ஒருவர் கைது.

வியாழக்கிழமை, 12 ஜூலை 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,-  ராமேசுவரம் கடல்பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக சிமெண்ட் சாக்கு பையில் சேகரித்து வைத்திருந்த 300 கிலோ மதிப்பிலான  கடல் அட்டைகளை ராமேசுவரம் கடலோரப்பாதுகாப்பு போலீஸார்கள் நேற்று  கைப்பற்றினர்.
  தனுஸ்கோடி கடல் வழியாக  இலங்கைக்கு கள்ளத் தோணியில் உயிருடன் கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக ராமேசுவரம் கடலோரப்பாதுகாப்பு குழுமம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீஸார்கள் ராமேசுவரம் சேராங்கோட்டை  கடலோரப் பகுதிகளில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அப்பகுதியில்  சிமெண்ட் சாக்கு பையில் கடல் அட்டைகளை  ராமேசுவரம் பகுதியை சேர்ந்த போஸ் என்பவர் சேகரித்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பின்னர்  போலீஸார்கள் கடல் அட்டையை பறிமுதல் செய்து,போஸை கைது  செய்து பின்னர் புதுரோடு பகுதியிலுள்ள கடலோரப்பாதுகாப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.அங்கு கடல் அட்டையை மதிப்பீடு செய்ததில் 300 கிலோ எடையளவும்,இதன் மதிப்பு ரூபாய் 60 ஆயிரம் இருக்கும் என தெரியவந்தது. அதன் பேரில் போலீஸார்  இது குறித்து வழக்கு பதிந்து போஸ் என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து