முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைந்தார் சுவாமி பரிபூர்ணானந்தா

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஹிந்து வாஹினி அமைப்பின் தலைவர் சுவாமி பரிபூர்ணானந்தா பாஜகவில்  இணைந்தார்.

இதுகுறித்து பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியதாவது:

தென்னிந்தியாவில் சமூக சேவை மற்றும் மத ரீதியிலான நடவடிக்கைகளுக்கு அதிக பங்களிப்பை வழங்கியவர் பரிபூர்ணானந்தா.

இவர் பாஜகவில் இணைந்ததன் மூலம் கட்சிக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. அத்துடன், தெலங்கானா மற்றும் ஆந்திரத்தில் பாஜக மேலும் வலிமை பெற்றுள்ளது என்றார் அமித் ஷா.

பாஜகவில் ஒரு சேவகரை போன்று செயல்படுவேன்; எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. தென்னிந்தியாவுக்கு கட்சியின் கருத்துகளை எடுத்துச் செல்வேன் என்று பரிபூர்ணானந்தா தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவளித்து வருபவரான பரிபூர்ணானந்தா, தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலங்கானாவில் டிசம்பர் 7-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து