முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வு ஆகாது: பாக். நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் பேச்சு

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வு ஆகாது என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் பேசினார்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில்  எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பிரதமர் இம்ரான்கான் குறுக்கிட்டார். அப்போது அவர் மன்னிப்பு கேட்டவாறு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சமாதானத்துக்கான நமது விருப்பத்தில், நல்லெண்ண அடிப்படையில் நம்மிடம் காவலில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரி விடுதலை செய்யப்படுவது அமைதி பேச்சுவார்த்தைக்கான முதல் படி ஆகும். எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வு அல்ல. எனவே இந்திய தலைமை பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்.

அதே நேரத்தில், பதற்றம் வேண்டாம் என்னும் பாகிஸ்தானின் விருப்பத்தை பலவீனம் என தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த பிராந்தியத்தில் அமைதி தவழ வேண்டும். இதுதான் பாகிஸ்தானின் விருப்பம். பதற்றம், பாகிஸ்தானின் நலன்களுக்கானது அல்ல, இந்தியாவின் நலன்களுக்கானதும் அல்ல. எனவேதான் இந்திய பிரதமருடன் தொலைபேசியில் பேசுவதற்கு நான் முயற்சித்தேன். பிராந்தியத்தில் சமாதானமும், ஸ்திரத்தன்மையும் நிலவுவதற்கு பதற்றத்தை தணிப்பதில் சர்வதேச சமூகம் பங்களிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து