முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழையால் போட்டி தடைபட்டால்.... ‘ரிசர்வ் டே’ என்பது மிகவும் சிக்கலான ஒன்று: ஐ.சி.சி.

புதன்கிழமை, 12 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : நீண்ட நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய உலகக்கோப்பை தொடரில் ‘ரிசர்வ் டே’ என்பது மிகவும் சிக்கலான ஒன்று என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

போட்டி அட்டவணை...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. பொதுவாக போட்டியை நடத்தும் நாட்டின் கோடைக்காலத்தை கணக்கில் கொண்டுதான் போட்டியின் அட்டவணை தயாரிக்கப்படும். அதன்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் ஜூன் முதல் ஜூலை மாதம் வரை கோடைக்காலமாகும்.

மழையால் பாதிப்பு...

இதனால் போட்டி அட்டவணை மே மாதம் 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் பருவமற்ற கால மழையால் பிரிஸ்டோல், சவுத்தாம்ப்டன் போட்டிகளில் சில தடைபட்டுள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் விளையாட இருந்த இரண்டு ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டுள்ளன தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் வங்காள தேச அணிகளுக்கு தலா ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. இதனால் மழையால் போட்டி தடைபட்டால் அடுத்த நாள் போட்டியை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

சிக்கலான ஒன்று...

இந்நிலையில் ‘ரிசர்வ் டே’ என்பது மிகவும் சிக்கலான ஒன்று என ஐசிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி-யின் தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ஒவ்வொரு போட்டிக்கும் ‘ரிசர்வ் டே’ உண்டு என்றால், முக்கியத்துவம் வாய்ந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நீண்டு கொண்டே செல்லும். நடைமுறையில் அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து