முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தலாக் தடை மசோதா ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : முத்தலாக் தடை மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே முத்தலாக் தடை மசோதா நேற்று முன்தினம் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்தனர். உடனடியாக மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை கிரிமினல் குற்றமாக்க வழிசெய்யும் இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்நிலையில் முத்தலாக் தடை மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஜனாதிபதியின் ஒப்புதலைத் தொடர்ந்து முத்தலாக் தடைச் சட்டம் அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து