எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பரமக்குடி - நடிகர் கமலஹாசனின் 65 வது பிறந்த நாள் விழா, அவரது தந்தை விடுதலை போராட்ட வீரர் வக்கீல் சீனிவாசன் சிலை திறப்பு விழா மற்றும் மய்யம் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா ஆகியவை பரமக்குடி அருகேயுள்ள தெளிச்சாத்தநல்லூரில் நடந்தது.
விழாவில் நடிகர் கமலஹாசன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.விழாவின் தொடக்கமாக மரக் கன்றை நட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியினை நடிகர் கமலஹாசன் ஏற்றி வைத்தார்.கட்சியின் மாநில துனைத் தலைவர் மகேந்திரன் வரவேற்றார்.பின்பு, நடிகர் பிரபு, கட்சியின் பொதுச் செயலாளர் குமாரவேல், பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் கமலஹாசனை வாழ்த்திப் பேசினர்.
அதனைத் தொடர்ந்து நடிகை சுகாசினி கமலஹாசனின் குடும்ப உறுப்பினர்களான அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து கமலஹாசனின் சிறுவயதில் தூக்கி வளர்த்த தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரையும் ,கமல் தந்தை சீனிவாசன் சிலையினை வடிவமைத்த வேன்ஸ் என்பவரையும் கமலஹாசன் கவுரவித்தார்.பின்பு ஒரிஸ்ஸா பல்கலைக் கழகத்துடன் இணைந்து தெளிச்சாத்தநல்லூரில் தொடங்கப் படவுள்ள மய்யம் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அதனை தொடர்ந்து, நடிகர் கமலஹாசன் அவரது தந்தை சீனிவாசனின் உருவச்சிலையினை திறந்து வைத்து மலர்மாலை அணிவித்து வணங்கினார்.பின்னர் குடும்பத்தினர் அனைவரும் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
விழாவில், நடிகர் கமலஹாசன் பேசியதாவது :-
எனது பிறந்த நாளும்,தந்தை மறைந்த நாளும் ஒன்றாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்.நான் நன்றாக வருவேன் என எனக்காக பல திட்டங்களை தினமும் தீட்டிக் கொண்டிருந்தார் எனது தந்தை.பின்பு காலேஜில் சேர்ந்து ஐ.ஏ.எஸ் .படிக்கச் சொன்னார். உடனே நான் முதலில் எஸ்.எஸ்.எல்.சி.பாஸ் பண்ண வேண்டும்.பின்பு படிக்க வேண்டும். இயக்குநர் பாலச்சந்தர் காட்டிய வழியில் செல்கிறேன் என கூறினேன்.எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் திறமையானவர்கள்.அற்புதமான குடும்பம்.தலைமை பொறுப்பிற்கு தகுதியாக திகழ்ந்தவர் எங்கள் அப்பா.
எனக்கு அவரது ரெளத்திரமும் பிடிக்கும், நகைச்சுவையும் பிடிக்கும்.அது என்னுடன் வந்திருப்பது மகிழ்ச்சி.அவர் விட்ட விதை அவர் காட்டிய வழிதான் இங்கு திறன் மேம்பாட்டு பயிற்சியாக வந்துள்ளது.
சென்னை சென்ற எனக்கு நிழலாக இருந்த பாலச்சந்தருக்கு சென்னையில் அலுவலகத்தில் சிலை திறக்கவுள்ளேன். இது பூஜைக்கான உருவம் அல்ல. பின்தொடர வேண்டிய உருவங்கள்.எனக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசான்கள் எல்லாம் மெல்ல மெல்ல தகப்பனார்களாக மாறிவிட்டனர்.
கமலஹாசன் என்ன படித்திருக்கிறார்? என்று சொல்வதற்கெல்லாம் ஒன்றுமில்லை.இரண்டு மூன்று ஸ்கில் தெரியும்.அதை வைத்துதான் பேசுகிறேன்.
அரசியல் பக்கம் செல்ல எங்கள் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை.ஒரே ஒருவர் தான் அதை பல காலமாக சொல்லி பேசிக் கொண்டிருப்பார்.அதை நாங்கள் பேச்சை மாற்ற உதாசினப் படுத்திக் கொண்டிருப்போம்.தற்போது அவரது ஆசையும் நிறைவேறியுள்ளது.
நீங்கள் எல்லாம் சுதந்திர போராட்டம் செய்ய வேண்டியிருந்தது. நாட்டிற்கே தேவையாக இருந்தது. அதனால் செய்தீர்கள். நான் ஏன் அரசியலுக்கு போக வேண்டும் என்றேன்.அப்படி ஒரு போராட்டம் மறுபடியும் வந்தால் என கேட்டார்.கிட்டத்தட்ட தற்போது அந்தநிலை வந்துள்ளது.அதனால் தான் நான் அரசியலுக்கு வந்தேன்.போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை.
இங்கு அமைக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி பரமக்குடி மக்களுக்காக எங்கள்குடும்பத்தின் சார்பில் நாங்கள் தரும் அன்பு பரிசு. கூலி வேலை செய்து கஷ்டப் பட்டு படித்து வேலை இல்லாத நிலை நம் நாட்டில் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 61 லட்சம் மாணவர்கள் ஆரம்ப பள்ளிக்கு செல்கின்றனர். நடுநிலைக்கு வரும்பொழுது 58 லட்சமாக குறைகிறது.எஸ்.எஸ்.எல்.சி.க்கு வரும்போது 11 லட்சமாக குறைகிறது. டிகிரிக்கு வரும்போது 3 லட்சம் பேர் தான் போகிறார்கள்.மீதமுள்ள இளைஞர்களின் நிலை என்ன? அந்த கமலஹாசன்களின் நிலை என்ன? அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் என்ன?துப்புரவு பணிக்கு பி.கெச்.டி.படித்தவர்கள் விண்ணப்பிக்கும் அவலநிலை இங்கு வந்துள்ளது.
அதற்கு காரணம் நமது திறமைகளை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை.வேலை வாய்ப்புக்காக இடம் பெயர்ந்து செல்லக்கூடாது என்பதுதான் எங்களது ஆசை.அதற்காகத் தான் இதை செய்கிறோம்.இது ஒரு திறமை வளர்ப்பு பஞ்சாயத்தாக ஆக வேண்டும் என்பது தான் எனது ஆசை.இங்கிருந்தே பல தொழில்களை தேர்ந்தெடுக்கலாம் என்ற நிலை உருவாக வேண்டும்.நான் பணக்கார வீட்டு பையன் திமிருக்காக விளையாடி பார்க்கிறேன் என நினைப்பார்கள். நான் சலூனில் ஒன்றரை மாதம் வேலை செய்துள்ளேன். பின்பு அங்கிருந்த ஓனர் போட்டு கொடுத்து விட்டார்.அங்கு கிடைத்த பாடம் தான் எனக்கு பிற தொழில்களுக்கு பாடமாக இருந்தது.அப்படி இல்லையென்றால் நான் எடிட்டிங்பற்றியோ,கேமராவை பற்றியோ நினைத்திருக்க மாட்டேன்.எந்த தொழிலும் நமக்கு கீழானது இல்லை என்பதை உணர்ந்தால் வாழ்க்கை தரமும் உயரும்.
ஒரே இன்சீனியராக,வக்கீல்களாக இல்லாமல் ஒரு ஊரில் ஓரே தென்னை மரங்களாக இல்லாமல் வெவ்வேறு பயிர்களாக இருந்தால் செழிப்பான நாடு என தோன்றும்.அதைப்போல் இங்குள்ளவர்கள் திறமையான தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் தொழில் விற்பனர்களாகி வேலை வாய்ப்பை அளிக்கும் முதலாளிகளாக மாற வேண்டும்.
சத்தியாகிரக போராட்டத்திற்கு பிறகு இந்தியா திறமை வளர்ப்பு போராட்டத்தில் தமிழகம் இன்னும் முழுமையாக இறங்காமல் உள்ளது என்பது கண்கூடாக தெரியும் உண்மை.மற்ற மாநிலங்களில் இந்த நிலை செயல் வடிவத்திற்கு வந்து நடந்து கொண்டிருக்கிறது. வேலை வாய்ப்புக்களை உருவாக்க பல்கலை கழகங்கள் மட்டும் இருந்தால் போதாது.பட்டாளத்திற்குசென்று இறப்பவர்களின் எண்ணிக்கையை விட சாலை விபத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.எந்த வேலை கிடைக்கிறதோ அதை வைத்து முன்னேற வேண்டும்.இலவசத்தை கொடுத்தால் வாங்குங்கள்.ஆனால் அது 3 மாதங்கள்தான் இருக்கும்.அதுகோளாறு ஆகிவிட்டால் அதை சரிசெய்ய எங்கள் மய்யத்தில் இருந்து தான் வரவேண்டும். நாங்கள் தருவது வாழ்நாள் முழுவதும் தங்கும்.5 வயதில் பரமக்குடியில் எனது அண்ணி பிறந்த நாள் கொண்டாடினார்.அப்போது எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது.சினிமாவிற்கு வந்தபோதும் பிறந்தநாள் கொண்டாடியதும் சந்தோஷம் இல்லை.ஆனால் தற்போது கொண்டாடுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.இது பல வாழ்க்கைக்கு ஆரம்பம்.அதை வெற்றி பெறச் செய்வது நமது கடமையாகும் இவ்வாறு பேசினார். ராமநாதபுரம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
கேரளாவில் வாக்குப்பதிவின் போது மயங்கி விழுந்து 4 பேர் உயிரிழப்பு
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.