முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் வெற்ரி பெற்றுள்ள எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கு பாராட்டு தெரிவித்த சஜித் பிரேமதாசா, தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், அதிபராக தேவையான 50 சதவீத வாக்குகளை கோத்தபய ராஜபக்சே பெற்றார். இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பாராட்டுகிறேன். மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து