முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியை ஒழிக்கவே அ.தி.மு.க.வுடன் கூட்டணி - விஜயகாந்த்

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

செஞ்சி, மார்ச். 26 - தி.மு.க. வின் ஊழல் ஆட்சியை ஒழிக்கவே அ.தி.மு.க. வுடன் சேர்ந் தேன் என்று தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவரான விஜயகாந்த் செஞ்சி தேர்தல் பிரசாரத்தின் போது கூறினார். 

செஞ்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சிவாவை ஆதரித்து பிரசார ம் செய்ய விஜயகாந்த் நேற்று மதியம் 11.30 மணியளவில் செஞ்சி வந் தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சுட்டெரிக்கும் வெயிலையும், பொருட்படுத்தாமல் விஜயகாந்த்தை பார்க்க சுமார் 5 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். சுமார் 15 நிமிட நேரம் விஜயகாந்த் அவர்களிடேயே பேசினார். 

அப்போது அவர் இங்குள்ள மக்களின் குறைகளை தீர்க்கவே உள்ளூர் வேட்பாளராகிய சிவாவை தேர்ந்தெடுத்ததாகக் கூறினார். அவர் பே சிய போது, பொதுமக்களும், ரசிகர்களும் கரவொலி எழுப்பி தங்கள து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

விழுப்புரம் தி.மு.க. மாவட் ட செயலாளரும், மந்திரியுமான பொன். முடி விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை. ஆனால் பல கோடிக்கு சொத்து சம்பாதித்து விட்டார். 

சிகாமணி என்ற பெயரை அவர் பொன் முடி என மாற்றிக் கொண்டா ர். தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது குடும்பத்துடன் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளார். அவர்களின் குடும்ப ஊழல் ஆட்சியை ஒழிக்கவே அ.தி. மு.க. வுடன் கூட்டு சேர்ந்ததாகக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்