முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாவின் வளர்ப்பு மகன் மரணம்: முதல்வர் இரங்கல்

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.7 -  பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் சி.என்.எ இளங்கோவன் உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் மரணமடைந்ததையொட்டி, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் சி.என்.ஏ இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

இளங்கோவனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அதனைத்தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் சார்பாக நேற்று காலை  கட்சியின் பொருளாளரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அமைப்பு செயலாளர் ஈ.வெ.கி சுலோச்சனா சம்பத், தென் சென்னை மாவட்ட செயலாளவும், செய்தி - சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சருமான செந்தமிழன் ஆகியோர் சென்னை பட்டினப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள சி.என்.ஏ இளங்கோவனுடைய பூத உடலுக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். அப்போது,  இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை இணை செயலாளவும், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.ராஜலட்சுமி உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்