எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - ரஜினிகாந்த் 65-வது பிறந்தநாளை ரசிகர்கள் நேற்று முன் தீனம் உற்சாகமாக கொண்டாடினர். பிரதமர் நரேந்திரமோடி, கருணாநிதி, வைகோ, மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
‘சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ரஜினிகாந்த் நேற்று முன் தீனம் 65-வது பிறந்தநாளை கொண்டாடினார். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு முதல் முறையாக அவரது பிறந்தநாளில் ‘லிங்கா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதிகாலை 1 மணிக்கு ‘லிங்கா’ படத்தின் முதல் காட்சி சென்னை தியேட்டர்களில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் நள்ளிரவு முதலே கடும் குளிரையும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தியேட்டர்களில் கூடியிருந்தனர். அதிகாலை 1 மணிக்கு தியேட்டர்களில் கேக் வெட்டி ரஜினி பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
4 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் நேரடி படம் வெளியானதால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் திரண்டு இருந்தது. இதனால் தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டு இருந்தது. தியேட்டர்களில் வைக்கப்பட்டு இருந்த ரஜினி பேனருக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர்.
பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்த்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், ரஜினிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நலமுடன், நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டை அவர் தமிழில் பதிவு செய்து இருக்கிறார்.
பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் நிதின்கட்கரி ஆகியோரும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தொலைபேசி மூலம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் தனது முகநூலில், ‘ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தேன். சூப்பர் ஸ்டார் நீண்ட ஆரோக்கியமான வாழ்வை பெற வாழ்த்துவதோடு அவர் தொடர்ந்து இன்னும் பல ஆண்டுகள் தன்னுடைய ரசிகர்களை ஊக்குவித்து மகிழ்விக்க வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் இருந்த தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘தமிழகத்தின் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ பார்ப்பதற்கும், பழகுவதற்கும் மிகவும் எளிமையானவர். அவருக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அவர் நீண்ட காலம் வாழ்ந்து, தொடர்ந்து தமிழகத்திற்கு தொண்டாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர்கள் அமிதாப்பச்சன் டுவிட்டரிலும், கமல்ஹாசன் வீடியோ மூலமும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். லிங்கா படம் வெற்றி பெறவும் அவர் வாழ்த்தியுள்ளார். நடிகர் மோகன்லால், தனுஷ், நடிகை அசின் ஆகியோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் பார்த்திபன் முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில், ரஜினிகாந்த் வீட்டுக்கு நள்ளிரவு 11.59 மணிக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய், ரஜினிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘எனது ரசிகர்கள் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் சமூக வலைதளங்களில் இல்லை. அதனால் அவரது சார்பில் அவரது ரசிகர்கள் கவனித்து வரும் டுவிட்டர் கணக்கில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். லிங்கா வெற்றி பெற வாழ்த்துக்கள். நீங்கள் நலமுடன், மகிழ்ச்சியாக வாழ பிரார்த்திக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடந்தது.
திருபோரூர் அருகில் உள்ள அனுமந்தபுரம் வீரபத்ரசுவாமி கோவிலில் மதிய உணவு 65 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலப்பன்சாவடி ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.