முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிணைக்கைதிகாக பெண் தீவிரவாதியை விடுவிக்கிறது ஜோர்டான்

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

அம்மான் - சிரியாவில் தங்கியிருந்த ஜப்பானியர்கள் ஹருணாயுகாவா, கெஞ்சி கோடா ஆகியோரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணை கைதிகளாக பிடித்தனர். அவர்கள் கேட்ட பிணை தொகையை ஜப்பான் அரசு வழங்காததால் ஹருணா யுகாவை தலை துண்டித்து கொலை செய்தனர். ஜோர்டானை சேர்ந்த விமானி மாஷ் அல் கசாபேயையும் பிடித்து பிணைக் கைதியாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஜப்பானின் மற்றொரு பிணைக் கைதி கெஞ்சிகோடோ மற்றும் விமானி கசாபே ஆகியோரை விடுவிக்க ஜோர்டான் சிறையில் மரண தண்டனை கைதியாக இருக்கும் ஐ.எஸ். பெண் தீவிரவாதி சஜிதா அல் ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும். அதுவும் 24 மணி நேரத்துக்குள் இது நடக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அதை தொடர்ந்து பெண் தீவிரவாதி சஜிதாவை விடுவிக்கும்படி ஜோர்டானிடம் ஜப்பானின் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தங்களது மகன்களை உயிருடன் விடும்படி பிணை கைதிகளின் தாய்மார்கள் தீவிரவாதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஜோர்டான் சிறையில் மரண தண்டனை கைதியாக இருக்கும் பெண் தீவிரவாதி சஜிதா அல் ரிஷாவியை விடுதலை செய்ய ஜோர்டான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஜோர்டான் விமானி மாஷ் அல் கசாபேயை துன்புறுத்தாமல் விடுதலை செய்ய வேண்டும் என  நிபந்தனை விதித்துள்ளது.  இந்த தகவலை டெலிவிஷனில் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து