முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை தடுப்போம்: சிவசேனா

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

மும்பை - விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்துவதற்கு வழிவகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இதற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெறுவதற்காக மக்களவையில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது பாராளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தது. அதோடு டெல்லியில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டமும் நடந்தது.

இதற்கிடையே நிலம் கையகப்படுத்தும் மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என்றும், ஏழைகளின் நலனுக்கு விரோதமானது என்றும் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தையும் புறக்கணித்தது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எந்த விலை கொடுத்தாவது தடுப்போம் என்று அந்த கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் கூறியிருப்பதாவது,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத்தால் ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். இது கொடூரமான சட்டம். விவசாயிகளின் வாழ்க்கையை முடித்து விடும். இந்த சட்டத்தை ஆதரிப்பது என்பது ஹசாரே தலைமையில் டெல்லி ஜந்தர்மந்தரில் இருந்து பாராளுமன்றம் வரை போராட்டம் நடத்திய விவசாயிகளை கேவலப்படுத்துவதாகும். இதனால் எந்த சூழ்நிலையிலும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு சிவசேனா ஆதரவு தராது. எந்த விலை கொடுத்தாவது அந்த சட்டத்தை நாங்கள் தடுப்போம். விவசாயிகளின் நலனை எந்த வகையிலும் பாதிக்க விட மாட்டோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து