முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குனி உத்திர திருவிழா: பழனிக்கு 3–ந்தேதி 500 சிறப்பு பஸ்கள்

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை - பங்குனி உத்திர திருவிழா வருகிற 3–ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. முருகன் கோவில்களில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும். குறிப்பாக பழனி முருகன் கோவிலில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்.பங்குனி உத்திரத்தையொட்டி பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், கரூர், கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், ஊட்டி ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து இயக்கப்படுகிறது.
அந்தந்த மாவட்டங்களில் பக்தர்கள் சிரமமின்றி உடனுக்குடன் பயணம் செய்யும் வகையில் விரிவான ஏற்பாடுகளை செய்யும்படி அனைத்து கோட்டங்களுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

இதே போல் பழனியில் இருந்து திரும்புவதற்கும் தேவையான அளவுக்கு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் கூட்டம் அதிகரித்தால் தேவைக்கேற்ப பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து