முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் அலுவலகத்தின் கவுரவத்தை மீட்டுள்ளோம் - அமித் ஷா பேட்டி

சனிக்கிழமை, 23 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பிரதமர் அலுவலகத்தின் கவுரவத்தை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம் என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறினார். பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று ஒரு ஆண்டு ஆகிறது.இதனை யொட்டி ஆஜ் தக் தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. டஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜ தலைவர் அமித் ஷா பாஜக அரசு பல்வேறு துறைகளில்மேற் கொண்ட சாதனைகளை பேசி உள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

எங்களது பாஜக அரசு ஆட்சிக்கு வந்த ஓராண்டில் நாட்டின் சூழலை வெகுவாக மாற்றியுள்ளது.ஒருஆண்டிற்கு முன்னர் இளைஞர்கள் மனப்புழுக்கம் அடைந்து வீதிகளில் போராட்டம் நடத்தினார்கள்.கடந்த 2014ம்ஆண்டு மோடி தலைமையில் நாங்கள் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தோம்.முந்தைய ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் மோடியின் பேரணியில் பெருமளவு கலந்து கொண்டார்கள்.இளைஞர்களின் ஆதரவு எங்களுக்கு கிடைத்தது.இதனால் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

10ஆண்டுகளுக்கு பின்னர் பிரதமர் அலுவலகத்தின் கவுரவத்தை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஒவ்வொரு அமைச்சரும் தங்களை பிரதமராக கருதினர்.கொள்கை விவகாரத்தில் மாநிலங்களின் பங்களிப்பை நாங்கள் மேற்கொண்டோம்.எங்களது பாஜக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதால் ஊழற்ற ஆட்சி நடத்துகிறோம்.பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா மிகப்பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக் கை இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து