எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, இந்திய ரெயில்வேக்கு 50 ஆயிரமாவது ரெயில் பெட்டியைத் தயாரித்து சென்னை ஐ.சி.எப். (இணைப்புப் பெட்டி தொழிற்சாலை) சாதனை படைத்துள்ளது.
மின்சார பயன்பாட்டை குறைக்க சூரிய ஒளி தகடுகளுடன் ரெயில் பெட்டி தயாரிக்கப்படும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். கடந்த 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்தொழிற்சாலையில் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மண்டல ரெயில்வேக்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. ஐ.சி.எப். தற்போது 50 ஆயிரமாவது ரெயில் பெட்டியை (3–ம் வகுப்பு ஏ.சி.) தயாரித்துள்ளது.
இந்த ரெயில் பெட்டி தொடக்க விழா மற்றும் துருப்பிடிக்காத இரும்பு மூலம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் புதிய பிரிவு அர்ப்பணிக்கும் விழா ஆகியவற்றை மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு புதுடெல்லியில் உள்ள ரெயில்வே வாரிய அலுவலகத்தில் இருந்தப்படியே வீடியோ கான்பரன்சிங் (காணொலி காட்சி) மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதே சமயத்தில் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். பணிமனையில் நடைபெற்ற விழாவில் ரெயில்வே வாரிய உறுப்பினர் (மெக்கானிக்கல்) ஹேமந்த் குமார், நிதி ஆயோக் (திட்ட கமிஷன்) உறுப்பினர் வி.கே.சரஸ்வத், ஐ.சி.எப். பொதுமேலாளர் அசோக் அகர்வால், ரெயில் பெட்டி தொழிற்சாலையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு கொடி அசைத்து இதன் ஓட்டத்தை துவக்கினர்.
50 ஆயிரமாவது ரெயில் பெட்டியில் பயணிகள் உள்ளே நுழையும் இரண்டு வாசல்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் ரெயில் பெட்டியின் உள்ளே நுழையும் நபர்களை படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவிடும். இதனால் குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாது.விழாவில் மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது:–-
ரெயில்வே வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஐ.சி.எப். தயாரித்த முதல் பெட்டிக்கும், தற்போது தயாரிக்கப்பட்ட 50 ஆயிரமாவது ரெயில் பெட்டிக்கும் தரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் உள்ளன. மாற்றங்களை கொண்டுவரும் ஐ.சி.எப். ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஐ.சி.எப்.பிற்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
50 ஆயிரமாவது பெட்டி தயாரித்த இந்த வேளையில் ஒரு லட்சமாவது பெட்டி எப்படி இருக்கும் என்ற கற்பனை செய்துபார்க்கிறோம். அந்த பெட்டி தயாரிப்பதற்கு தேவையான தொழில்நுட்பத்தை பெறுவதற்கு இப்போதில் இருந்தே திட்டமிட்டு வருகிறோம். ரெயில் பெட்டிகளை தயாரிப்பதற்கு மூலப்பொருள் மேலாண்மை அவசியம்.மூலப்பொருள்களின் தன்மைகளை ஆராய்வதற்காக பனாரசஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று உற்பத்தி பிரிவினை மேம்படுத்துவதற்கு திட்டக் கமிஷன் உறுப்பினர், ரெயில்வே வாரிய உறுப்பினர்கள், அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மேல்புறமாக இருக்கைகளுக்கு ஏறி செல்லும் படிகள், குப்பை தொட்டிகள், கழிவறைகள் உள்பட ரெயில் பெட்டியின் உள்புற கட்டமைப்புகள் பயணிகளுக்கு சுமுகமானதாக அமையும் வகையில் மாற்றம் செய்யப்படும். இதற்காக தேசிய வடிவமைப்பு நிறுவனத்துடன் ரெயில்வே அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.மின்சார தேவைப்பாட்டை கணிசமாக குறைக்கும் வகையில் ரெயிலுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் கொடுக்கப்பட உள்ளது. இதற்காக இந்திய அறிவியல் கழகத்தோடு (ஐ.ஐ.எஸ்.) இணைந்து ரெயில் பெட்டியில் சூரிய ஒளி தகடுகள் பொருத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.
ரெயில்வே நிதி நெருக்கடியில் உள்ளது. இருந்தபோதிலும் மக்கள் கட்டணம் செலுத்த தயாராக இருந்தால் உலக தரம் வாய்ந்த சேவைகளை கொடுப்பதற்கு ரெயில்வே தயாராக இருக்கிறது. துருப்பிடிக்காத இரும்புகள் மூலம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பிரிவு இந்த ஆண்டு ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. இதில் 100 ரெயில் பெட்டிகள் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஐ.சி.எப். வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கடந்த நிதியாண்டில் மட்டும் ஐ.சி.எப். 1,704 ரெயில் பெட்டிகளைத் தயாரித்து வழங்கியுள்ளது. இந்த இலக்கை ஐ.சி.எப். தனது வரலாற்றில் முதல் முறையாக எட்டியது.
ரெயில்வே வாரியத்தின் வழிக்காட்டுதலின்படி துருப்பிடிக்காத ரெயில் பெட்டிகளைத் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகள்
தொடங்கப்பட்டுவிட்டன. மேலும் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய, எடைக் குறைவான- நீளமான பெட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை பெட்டிகள் தயாரிப்பதன் மூலம் ஒரு பெட்டியில் அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்ய முடியும். இந்தப் பெட்டிகள் எடைக் குறைவாக இருப்பதால் மணிக்கு 160 கி.மீ. முதல் 200 கி.மீ. வேகம் வரை ரெயில்களை இயக்க முடியும். கடந்த நிதியாண்டின் முடிவில் 65 எடை குறைந்த பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு 300 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துருப் பிடிக்காத பெட்டி தயாரிக்க ரெயில்வே வாரியம் ரூ. 327 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மின்மயமாக்கப்படாத வழித்தடங்களில் இயங்கும் டீசல் – எலக்ட்ரிக் ரெயில்களைத் அதிக அளவில் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட தேவை அதிகம் இருப்பதால், 360 டீசல் – எலக்ட்ரிக் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல