எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சி திட்டங்களால் தமிழ்நாட்டில் 12 ஸ்மார்ட் சிட்டிகளும் இந்தியாவிலேயே மிகச் சிறப்பான சீர்மிகு நகரங்களாக மாறும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். தமிழ்நாட்டில் சீர்மிகு நகரங்கள் அமைப்பது குறித்து சென்னையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கை துவக்கி வைத்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:–
தமிழ்நாட்டை, இந்திய மாநிலங்களிலேயே, சிறந்த ஆளுகை கொண்ட, முதன்மை மாநிலமாக” திகழச் செய்யும், தொலை நோக்குடன், முதலமைச்சர் ஜெயலலிதாவினால், தொலைநோக்குத் திட்டம் 2023 ஆவணம்” வெளியிடப்பட்டது. தமிழகத்தின் 10 நகரங்களை, உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்த, முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலை நோக்குத் திட்டம் -2023 வலியுறுத்துகிறது.
மாநிலத்திலுள்ள அனைத்து பிற பகுதிகளும், சமச்சீர் உட்கட்டமைப்பு மேம்பாட்டின் மூலம், பொருளாதார வளர்ச்சி அடைய, இந்நகரங்கள் ஒரு முன் மாதிரியாக அமைந்திடவும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும், உரிய அழுத்தத்துடன் குழாய்கள் மூலம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், வாரத்தின் ஏழு நாட்களிலும், 24 மணி நேரமும், தொடர்ந்து வழங்குதலை உறுதி செய்திடவும், முதலமைச்சர் ஜெயலலிதாவின், தொலைநோக்குத் திட்டம்- 2023, வழிவகை செய்கிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்திய நாடே வியக்கும் வகையில் நடத்தி, 2,42,160 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை ஈர்த்து மகத்தான சாதனை படைத்துள்ளார். மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா அனைவரும் பாராட்டும் வகையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குறுகிய காலத்தில் உலகத்தரத்திலான சாலைகளை அமைத்து சாதனை படைத்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா, நகர்ப்புரங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், இரண்டு மாபெரும் புதிய நிதி திட்டங்களை, செயல்படுத்தி வருகிறார். சென்னை மற்றும் அதனைச் சார்ந்த புற நகர் பகுதிகளுக்காக, சென்னைப் பெருநகர வளர்ச்சித் திட்டம் மற்றும் இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு கூடுதல் நிதி வழங்கும், ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டம் ஆகிய இரண்டு மாபெரும் திட்டங்களின் வாயிலாக, குடிநீர் வழங்கல், சாலைகள், கழிவு நீர் வடிகால் மற்றும் சுகாதாரப் பணிகள், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், திடக்கழிவு மேலாண்மை, பேருந்து நிலையங்கள் மேம்பாடு, வாகனங்கள் நிறுத்துமிடம், ஆகிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள், நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த நான்காண்டுகளில், சென்னைப் பெருநகர வளர்ச்சித் திட்டத்திற்கு 2000 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்திற்கு 3000 கோடி ரூபாயும், நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதாவின், சீரிய சிந்தனையில் உருவான இத்திட்டத்தைப் பின்பற்றி, மத்திய அரசு, ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ருத் ஆகிய இரு நகர்புர வளர்ச்சித் திட்டங்களை, இந்தியா முழுமையும் செயல்படுத்துகிறது. இத்திட்டம், பிரதமரால், 25.6.2015 அன்று துவங்கப்பட்டு, இதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின்படி, மக்களுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அதில் நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த நகரங்களை, மக்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு, அனைத்து வசதிகளுடன் நிர்மானிப்பதை, குறிக்கோளாகக் கொண்டு இந்தியாவில் மொத்தம் 100 சீர்மிகு நகரங்களை, 5 ஆண்டுகளுக்குள் உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2015-–16ம் நிதியாண்டில், இந்தியா முழுவதும் இத்திட்டத்தினை, 20 நகரங்களில் அமல்படுத்துவதும், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில், ஆண்டு ஒன்றுக்கு 40 நகரங்களை, இத்திட்டத்தின் கீழ் இணைப்பதும், மத்திய அரசின் திட்டம் ஆகும். முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவின் மிகப்பெரும் மாநிலமான, உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டிற்குத் தான் 12 சீர்மிகு நகரங்களை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு ஆண்டொன்றுக்கு, மாநகர் ஒன்றுக்கு சராசரியாக 100 கோடி ரூபாய் வீதம், ஐந்தாண்டுகளில் 6000 கோடி ரூபாய் அளவுக்கு, இத்திட்டத்திற்கு நிதியுதவி மத்திய அரசு வழங்கவுள்ளது. மத்திய அரசுக்கு இணையாக, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசும், சராசரியாக ஐந்து ஆண்டுகளில், 6000 கோடி ரூபாயை வழங்கவுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இத் திட்டத்தின் கீழ் போதிய குடிநீர்வழங்குதல்,உறுதியளிக்கப்பட்ட மின்சக்தி வழங்குதல்,திடக்கழிவு மேலாண்மை உட்பட துப்புரவு செய்தல், நகர்ப்புற போக்குவரத்து மற்றும் மக்கள் போக்குவரத்து ஆகியவற்றுக்கான செம்மையான ஏற்பாடு செய்தல்,மக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்கு கட்டுபடியாகிற விலையில் வீட்டுவசதி ஏற்படுத்துதல், வலுவான தகவல் தொழில் நுட்ப இணைப்பு வசதி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல், சிறந்த ஆளுகை, குறிப்பாக மின் ஆளுகை மற்றும் மக்கள் பங்கேற்பு,நீடித்த தன்மை வாய்ந்த சுற்றுச் சூழல்,மக்களின், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பு, உடல் நலன் மற்றும் கல்வி ஆகிய உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இத்திட்டம், அடுத்த ஐந்தாண்டுகளில் அதாவது, 2015–-16 முதல் 2019-–20ஆம் நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்.
சீர்மிகு நகரங்களை உருவாக்கத் தேவையான செயல் திட்டங்களைத் தயாரிப்பதில், மாநகராட்சிக்கு உதவிட 7 கலந்தாலோசனை நிறுவனங்கள் நியமிக்கப்பட்டு, இந்திய அரசு வலைதளம் மற்றும் சமூக வலைதளங்களில் விரிவாக அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு, பொது மக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, 100 நாட்களுக்குள் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட வேண்டியுள்ளதால், பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில், சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் உட்கூறுகள் அனைத்தும், மிகவும் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு, இந்தியாவிலேயே மிகச் சிறப்பான சீர்மிகு நகரங்களைக் கொண்டதாக தமிழகம் அமையும் என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் வேலுமணி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.