எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கும்பகோணம் - கும்பகோண மகாமகம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் நேற்று மகாமகம் குளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். தென்னகத்தின் கும்பமேளா என்று அழைக்கப்படும் மகாமக திருவிழா கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. மகாமகத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் மகாமகம் குளத்தில் புனித நீராடுவார்கள். இதற்கு முன் 2004–ம் ஆண்டு மகாமகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மகாமகம் வருகிற 22–ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கில் பக்தர்கள் புனித நீராடுகிறார்கள். இதையொட்டி நேற்று கும்பகோணத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
அபிமுகேஸ்வரர் கோவிலில் முதலில் கொடியேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆதி கும்பேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர், காளகஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர் கோவில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆதிகும்பேஸ்வரர் கோவில் அருகில் மகாமகம் குளம் அமைந்துள்ளது. குளத்தைச் சுற்றிலும் 16 சோடச லிங்கங்கள் அமைந்துள்ளன. 16 தானங்களை நினைவுபடுத்தும் வகையில் 16 சிவலிங்கங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. குளத்தின் உள்ளே 20 தீர்த்த கிணறுகள் உள்ளன.
இங்கு மகாமகத்தின்போது புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் மகாமகத்தின்போது குளத்தில் புனித நீராட ஆர்வம் காட்டுகிறார்கள். 22–ந்தேதி தான் மகாமகம் என்றாலும் கொடியேற்றம் தொடங்கிய இன்றே பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டார்கள். இதையடுத்து இன்றே லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணம் வந்து குவிந்தனர். கொடியேற்றப்பட்டதும் வெளியூர் பக்தர்களும், உள்ளூர் பக்தர்களும் மகாமக குளத்தில் புனித நீராட தொடங்கினார்கள். தொடர்ந்து ஆயிரக்காணக்கான பக்தர்கள் அணி அணியாக புனித நீராடி வருகிறார்கள். கொடியேற்றத்தையொட்டி நேற்று 20 நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மகாமக குளத்தில் விடப்பட்டது.
ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் இருந்து அமிர்த நீர் கலசம் கண்ணாடி பல்லக்கில் வைக்கப்பட்டு யானை முன்னே செல்ல மேள தாளம் முழங்க மகாமக குளத்தை அடைந்தது. அமிர்த நீர் கலசத்தை சிவசங்கர சிவாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர்கள் மகாமகம் குளத்துக்குள் எடுத்துச் சென்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு குளத்து நீரில் கலக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மகாமக குளத்து நீரை கலசத்தில் எடுத்து கண்ணாடி பல்லக்கில் மீண்டும் ஊர்வலமாக ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் நெரிசல் இன்றி புனித நீராடுவதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மகாமக குளத்திற்கு 4 வழிபாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பாதை வழியாக முக்கிய பிரமுகர்களும், மற்றொரு பாதை வழியாக முதியோர், மாற்றுத்திறனாளிகள் செல்லவும், மற்ற பாதைகளில் அனைத்து பக்தர்களும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக கும்பகோணத்திற்கு முக்கிய நகரங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் ஏராளமான சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்துக்கழகங்கள் இயக்கி வருகிறது. சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
கும்பகோணத்தை சுற்றி 7 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், சுகாதார வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளது. அவசர உதவிக்காக 30 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் உள்ளன. தீயணைப்பு வாகனங்கள் பல்வேறு மாவட்டங்களில் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும் குறுகலான தெருக்களில் செல்லும் வகையில் உள்ள 5 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. 3 ஆயிரம் ஊர்க்காவல் படையினரும் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அறநிலையத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாமக விழாவையொட்டி கும்பகோணம் விழாக்கோலம் கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல