முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மான் கொம்பு குத்தி ஊழியர் உயிரிழப்பு: முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி

திங்கட்கிழமை, 30 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - மான் கொம்பு குத்தி உயிரிழந்த பல்லுயிர் பூங்கா ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,  '28.5.2016 அன்று கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், புலியூர்குறிச்சியில் அமைந்துள்ள உதயகிரி கோட்டை பல்லுயிர் பூங்காவில் மான்களுக்கு உணவு அளிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பத்மனாபபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி பிள்ளை என்பவரின் மகன் மாதவன்பிள்ளை.

  இவர் மான் கொம்பினால் குத்தப்பட்டு படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்த நான் மிகவும் துயரம் அடைந்தேன்.  மான் கொம்பு குத்தியதில் உயிரிழந்த மாதவன்பிள்ளையின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்த மாதவன்பிள்ளையின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் வனத் துறை மூலம் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்