எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்திடும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
''காவிரி நடுவர் மன்றம் பிப்ரவரி 5, 2007ல் இறுதித் தீர்ப்பை வழங்கியவுடன், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்புடைய இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தவையா என்பது குறித்து முதலில் முடிவெடுப்பதாகக் கூறியது. மேலும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டது.
காவிரி நதி நீர் பங்கீடு :
மத்திய அரசு சார்பில் அக்டோபர் 27, 2016 இல் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ''காவிரி நதி நீர் பங்கீடு குறித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அல்லாத அதற்கென தனி அமைப்பு விசாரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி நியமிக்கப்படுகிறார். எனவே, நடுவர் மன்றம் அளிக்கும் தீர்ப்பையே இறுதியானதாகக் கருத வேண்டும். அத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாநிலங்கள் மேல்முறையீடு செய்ய அரசியலமைப்பு விதிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யும் மனுக்களை மீண்டும் உச்ச நீதிமன்றத்திமே விசாரிக்க அரசியலமைப்புச் சட்ட விதிகளில் இடம் இல்லை. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 262(2) ன் படி, நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளித்த பிறகு அதில் உச்ச நீதிமன்றமோ, வேறு நீதிமன்றமோ தலையிட முடியாது; நாடாளுமன்றம் மட்டுமே தலையிட முடியும். எனவே இது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல'' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் வாதம் :
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அபிதவராய், ஏ.என்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தமிழகத்தின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, ''காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாநில அரசுகளுக்கு முழு உரிமை உள்ளது. 1956 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீட்டுச் சட்டப் பிரிவு 6 (2)ன் கீழ் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்'' என்று எடுத்துரைத்தார்.
அதிகாரம் உண்டு :
உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளா மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் அரசியல் சாசன அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு என்று டிசம்பர் 9 ஆம் தேதி வரவேற்கத்தக்க தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், மாநில அரசுகள் தொடுத்த மேல்முறையீட்டு மனுக்களை அரசியல் சாசனம் 136 ஆவது பிரிவின்படி உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என்று அறிவித்ததோடு, கர்நாடக மாநில அரசு, வினாடிக்கு இரண்டாயிரம் கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.
காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையுடன் நடந்துகொள்வதுடன், இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றம் அறிவித்தபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பாசனப் பகுதியில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகிவிட்டதால் நடப்பு ஆண்டில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி முற்றாக அழிந்துவிட்டது. பருவமழை பொய்த்து, நீரின்றி பயிர்கள் காய்ந்து போனதால் 12 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட துயரம் நிகழ்ந்தது.
மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்:
இந்நிலையில் தமிழகத்தின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் முதலில் பிறப்பித்த உத்தரவை ஏற்று, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்திடும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க தேவையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்'' என்று வைகோ கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைவு
01 May 2024சென்னை : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
01 May 2024ஈரோடு : சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.