எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் நலனை பேணி பாதுகாத்து வருகிறார்கள்.குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிப்பதற்கும், அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் உறுதுணையாக திகழ்ந்து வருகிறார்கள். அந்தவகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பை அரசின் சார்பில் நடத்தப்பட வேண்டும் என கடந்த 2013 ஆம் ஆண்டு ஆணையிடப்பட்டு அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய அளவில் சமூதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகி;றது.இதன் மூலம் கர்ப்பிணி பெண்கள் மனதளவிலும்,உடல் அளவிலும் மகிழ்ச்சியும் , மன அமைதியும் அடைகிறார்கள். பிறக்கப் போகும் குழந்தை நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் பிறப்பதற்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் வளர்ச்சிகள் மற்றும் கேட்கும் திறன் வயிற்றில் இருக்கும் போதே உருவாகி விடுவதால் அறிவு வளர்ச்சி, சமூதாய வளர்ச்சி ஆகியவை ஏற்படுவதற்கு இந்த சமூதாய வளைகாப்பு விழா மிகச் சிறந்தவையாக உள்ளது. குறிப்பாக அனைத்து கர்ப்பணிகளையும் ஒன்றாக வைத்து சமூதாய வளைகாப்பு விழா நடைபெறுகின்ற போது ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி சமூதாய உறவும் மேம்படுகிறது. தமிழகத்தில் கர்ப்பணி பெண்கள் உடல் ஆரோக்கியதுடன் இருக்க குழந்தை பிறப்பதற்கு முன்பு 6 ஆயிரமும், குழந்தை பிறந்த பிறகு 6 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.12 ஆயிரம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பெறு நிதியுதிவி திட்டத்தின் கீழ் கர்ப்பணி பெண்களுக்கு வழங்கப்படுகிறது.தற்போது கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.12 ஆயிரம் என்பதை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கி ஆணைப் பிறப்பித்துள்ளார்கள். திருவாரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 10 வட்டாரங்களில் 34 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு தொகுதிக்கு 40 நபர்கள் வீதம் 1360 நபர்களுக்கு ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் செலவிடப்பட்டு உரிய சீர்வரிசைகளுடன் சமூதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.இவ்விழாவில் கர்ப்பிணி பெண்கள் மனமகிழந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆணைக்குப்பத்தை சேர்ந்த சாந்தி திட்டம் குறித்து கூறுகையில் என்னை போன்று வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் கர்ப்பகாலத்தில் சமுதாய வளைகாப்பு செய்வது மனதிர்க்கு மகிழ்ச்சியாகவும், தாய் இல்லாத ஏக்கத்தை போக்குவதாகவும் இருக்கிறது. சாதி, மத , பேதமின்றி அனைவரும் ஒன்றாக இணைத்து சமூதாய வளைகாப்பு செய்வது சமூக நல்லிணகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.சமூதாய வளைகாப்பு நடத்திட ஆணையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார். திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியை சேர்ந்த சௌந்தர்யா திட்டம் குறித்து கூறுகையில் . வளைகாப்பு என்பது ஒரு பெண்ணுக்கு மனதளவில் மகிழ்ச்சியையும், உடலளவில் ஆரோக்கியத்தையும் தரக்கூடியதாகும். வாழ்வில் முக்கிய ஒர் நிகழ்வாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா சமூதாய வளைகாப்பு விழா நடத்த வேண்டும் என ஆணையிட்டார்கள். அதன்படி சாதி, மதி பேதமின்றி கர்ப்பணி பெண்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சமூதாய வளைகாப்பு விழா நடத்தினார்கள்.இந்த வளைகாப்பு விழாவானாது ஒரு தாய் வீட்டில் நடக்கின்ற வளைகாப்பு போல் மிக சிறப்பாக நடத்தப்பட்டது.முறையாக அனைத்து சீர்வரிசைகளுடன் வளைகாப்பு அனிவித்தது .என் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் ராயுபுரத்தை சேர்ந்த ராதிகா திட்டம் குறித்து கூறுகையில் சமுதாய வளைகாப்பு விழா என்பது உளவியல் ரீதியாக ஒவ்வொரு கர்ப்பிணியும் தன்னுடைய கர்ப்ப காலத்தில் மனதளவில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தால் பிறக்கப் போகும் குழந்தை மிகுந்த ஆரோக்கியத்துடனும், முழு வளர்ச்சியுடன் குழந்தை பிறக்கும் என்பதை உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா தாய் இருந்து சமூதாய வளைகாப்பு நடத்திட ஆணைப்பிறப்பித்தார்கள். இதனால் குறிப்பிட்ட நாளில் கர்ப்பிணி பெண்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து எந்தவித சமூக வேறுபாடின்றி பூ,மஞ்சள், பழங்கள், புடவை, வளையல்களுடன் வளைகாப்பு நடத்தப்படுவது. என் போன்ற கர்ப்பிணி பெண்களுக்கு மற்ற கர்ப்பணி பெண்களுடன் சேர்த்து வளைகாப்பு நடத்த ஆணைப்பிறப்பிதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் என உளமார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல