எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2016-17) அரசு பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களில் அரையாண்டுத் தேர்வில் 10ம் வகுப்பு மாணவர்களில் 4 அல்லது 5 பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் 12ம் வகுப்பில் 5 அல்லது 6 பாடங்களில் தேர்ச்சி பெற்றிடாத மாணவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து விருதுநகர், திருவில்லிப்புத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்களிலும் 4 மையங்களை ஏற்படுத்தி சிறப்பு பயிற்சி அளித்து அம்மாணவர்களை விடுதி போல் உணவு வழங்கி அங்கேயே தங்க வைத்து இப்பயிற்சி நடத்தப்படுகின்றது. இதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு அவர்கள் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் மிகுந்த சிரமத்திற்கும் பணிச்சுமைக்கும் இடையில் இச்சீரிய முயற்சியை தமிழகத்திலேயே முதன் முறையாக விருதுநகர் மாவட்டத்தில் எடுத்துள்ளார்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் டாக்டர் ஏ.புகழேந்தி அவர்கள்.
நோக்கம்
பள்ளிகளில் இம்மாணவர்களுக்கு இதுமாதிரியான கடைசி நேரத்தில் தனிக்கவனம் செலுத்துவதில் உள்ள சிரமங்களை அறிந்து இம்மாணவர்களுக்கு தன்நம்பிக்கையை ஊட்டி, ஆர்வத்தை கூட்டி கவனத்தை படிப்பின் மீது செலுத்த தேவையான சூழலை உருவாக்கி அம்மாணவர்கள் அரசு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கையை எடுப்பது அதன்மூலம் அம்மாணவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உயர் கல்வியை தொடர வைத்து, இடைநிற்றல் இல்லா மாவட்டமாக இம்மாவட்டத்தை மாற்றவும் அம்மாணவர்கள் வாழ்வில் வளம் பெற வைப்பது தான் முக்கிய நோக்கமாகும் மேலும் இப்பயிற்சி மூலம் மாணவர்களுக்கு எளிமையான முறையில் திறன் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்கி அம்மாணவர்களின் தேர்ச்சியை உறுதிப்படுத்துவதன் மூலம் மாவட்டத் தேர்ச்சியையும் உயர்த்துவது என்பதும் அடிப்படை நோக்கமாகும்.
பயிற்சிக்கான இடங்கள்
விருதுநகர் மாவட்டம் விருதுநகர், திருவில்லிப்புத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்களை கொண்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளி மாணவர்களையும் ஒரே இடத்தில் தங்க வைப்பதில் உள்ள சிரமங்களை உணர்ந்த முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள், மாவட்டத்தில் 4 இடங்களில் இப்பயிற்சியை ஆரம்பித்திருக்கின்றார்கள். அதாவது திருவில்லிப்புத்தூர் கல்வி மாவட்டத்தில் 80 மாணவர்களுக்கு திருவில்லிப்புத்தூர் சி.எம்.எஸ் பள்ளியிலும் , விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 150 மாணவர்களுக்கு கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியிலும் , அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 80 மாணவர்களுக்கு நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும் மற்றும் குலசேகரநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் மையங்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
பயிற்சியின் தன்மை
திருவில்லிப்புத்தூர் மற்றும் விருதுநகரில் நடைபெறுகின்ற பயிற்சி மையத்தில் மாணவர்கள் தங்கி பயிற்சியை மேற்கொள்கின்றனர். காலை 5.00 மணிக்கு எழுந்திருக்க வைப்பது 6 மணிவரை யோகா பயிற்சியும் அதைத் தொடர்ந்து 7 மணிவரை வாசிப்பு. பின்னர் காலை 9.30 மணி முதல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும். காலை வேளையில் ஒரு பாடத்திற்கு பயிற்சி அளிக்கப்படும். 1 மணி நேரம் பாடம் சம்பந்தமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு பின்னர் மாணவர்களை 1 மணி நேரம் படிக்கவைப்பது, பின்னர் 1 மணி நேரம் தேர்வு வைத்து எழுத வைப்பது, இதே போல் மாலை வேளையிலும் வேறு ஒரு பாடத்திற்கு இது மாதிரியான பயிற்சி வழங்கப்படுகின்றது. இம்மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிகள் மாணவர்களுக்கு எளிமையாகவும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பாடத்தில் திறன் வாய்ந்த அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு வழங்கப்படுவதால் அம்மாணவர்கள் விரும்பி கற்க முன்வருகின்றனர். ஒரே மாதிரியான மீத்திறன் உடைய மாணவர்களாக இருப்பதால் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பயிற்சி தேவைப்படுகின்றது. அத்தகைய பயிற்சி சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் மாலையில் மாணவர்களுக்கு 4.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். 5 மணிக்கு சிற்றுண்டியாக பாசிப்பயிறும், சுண்டல் வழங்கப்படும் பின்னர் மாலை 6 மணிவரை விளையாட அனுமதிக்கப்படுகின்றது. பின்னர் 6.30 மணி முதல் 8.00 மணிவரை வாசிப்பு வகுப்புகள் ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெறும், பின்னர் இரவு உணவு 8.45 மணிவரை வழங்கப்படும். அதன் பின்னர் 9.00 முதல் 10.00 மணி வரை மீண்டும் வாசிப்பு வகுப்பு ஆசிரியர்களின் மேற்பார்வையில். இரவு 10.00 மணி படுக்கைக்குச் செல்லுவர். உடன் ஆசிரியர்களும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களும் தங்கி மாணவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றனர்.
மெல்ல கற்கும் மாணவர்களான இவர்கள் சேட்டைகளிலும் அதிகம் நாட்டம் கொண்டவர்கள். ஆனால் இப்பயிற்சிக்கு பின்னர் அவர்களின் நடவடிக்கையில் நிறைந்த மாற்றத்தை காண முடிகின்றது. அம்மாணவர்களுக்கு படிப்புடன் கூடிய ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் இப்பயிற்சி மூலம் கற்றுக்கொடுக்கப்படுகின்றது.
இத்தகைய அரிய சிறப்பு வாய்ந்த பயிற்சிகளை இம்மாவட்டத்தில் 30க்கும் அதிகமான தன்னார்வமிகுந்த, பொது நல நோக்கம் கொண்ட தலைமையாசிரியர்கள் , ஆசிரியர்கள் , கல்வி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒத்துழைப்போடு முதன்மைக்கல்வி அலுவலர் டாக்டர் ஏ.புகழேந்தி அவர்களின் சீரிய தலைமையில் நடைபெற்று வருவது இம்மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்பது திண்ணம். உண்மையில் விருதுநகர் மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியான மாவட்டம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் என்பது உண்மை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
பிரேசிலில் வரலாறு காணாத மழை: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது
05 May 2024பிராசிலா : பிரேசிலில் வரலாறு காணாத மழைக்கு 56 பேர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
05 May 2024புதுடில்லி : தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., ஒரு போதும் அரசியலம
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிப்பு
05 May 2024சென்னை : தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
யாரையும் பழிவாங்க வேண்டாம் : நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் 2 கடிதங்கள் சிக்கின
05 May 2024நெல்லை : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு: தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதினர்
05 May 2024சென்னை : இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வை தமிழகத்தில் நேற்று 1.50 லட்சம் பேர் பங்கேற்று ஆர்வமுடன் எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 13 மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்தது : 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
05 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் பதிவுமுறை துவங்கியது
05 May 2024கொடைக்கானல் : சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு முறை நேற்று இரவு முதல் தொடங்கியது.
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை தேவை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
05 May 2024திருநெல்வேலி : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று
-
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டராக இருக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட் கருத்து
05 May 2024புதுடெல்லி : நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் கூறுவதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வெறும் டேப் ரெக்கார்டர்களாக இருக்கக்கூடாது என்று வழக்கு ஒன்றின் தீரப்பில
-
காலவரையின்றி சஸ்பெண்ட்: ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா?
05 May 2024புதுடில்லி : ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (என்ஏடிஏ) காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்