எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2016-17) அரசு பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களில் அரையாண்டுத் தேர்வில் 10ம் வகுப்பு மாணவர்களில் 4 அல்லது 5 பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் 12ம் வகுப்பில் 5 அல்லது 6 பாடங்களில் தேர்ச்சி பெற்றிடாத மாணவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து விருதுநகர், திருவில்லிப்புத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்களிலும் 4 மையங்களை ஏற்படுத்தி சிறப்பு பயிற்சி அளித்து அம்மாணவர்களை விடுதி போல் உணவு வழங்கி அங்கேயே தங்க வைத்து இப்பயிற்சி நடத்தப்படுகின்றது. இதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு அவர்கள் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் மிகுந்த சிரமத்திற்கும் பணிச்சுமைக்கும் இடையில் இச்சீரிய முயற்சியை தமிழகத்திலேயே முதன் முறையாக விருதுநகர் மாவட்டத்தில் எடுத்துள்ளார்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் டாக்டர் ஏ.புகழேந்தி அவர்கள்.
நோக்கம்
பள்ளிகளில் இம்மாணவர்களுக்கு இதுமாதிரியான கடைசி நேரத்தில் தனிக்கவனம் செலுத்துவதில் உள்ள சிரமங்களை அறிந்து இம்மாணவர்களுக்கு தன்நம்பிக்கையை ஊட்டி, ஆர்வத்தை கூட்டி கவனத்தை படிப்பின் மீது செலுத்த தேவையான சூழலை உருவாக்கி அம்மாணவர்கள் அரசு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கையை எடுப்பது அதன்மூலம் அம்மாணவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உயர் கல்வியை தொடர வைத்து, இடைநிற்றல் இல்லா மாவட்டமாக இம்மாவட்டத்தை மாற்றவும் அம்மாணவர்கள் வாழ்வில் வளம் பெற வைப்பது தான் முக்கிய நோக்கமாகும் மேலும் இப்பயிற்சி மூலம் மாணவர்களுக்கு எளிமையான முறையில் திறன் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்கி அம்மாணவர்களின் தேர்ச்சியை உறுதிப்படுத்துவதன் மூலம் மாவட்டத் தேர்ச்சியையும் உயர்த்துவது என்பதும் அடிப்படை நோக்கமாகும்.
பயிற்சிக்கான இடங்கள்
விருதுநகர் மாவட்டம் விருதுநகர், திருவில்லிப்புத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்களை கொண்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளி மாணவர்களையும் ஒரே இடத்தில் தங்க வைப்பதில் உள்ள சிரமங்களை உணர்ந்த முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள், மாவட்டத்தில் 4 இடங்களில் இப்பயிற்சியை ஆரம்பித்திருக்கின்றார்கள். அதாவது திருவில்லிப்புத்தூர் கல்வி மாவட்டத்தில் 80 மாணவர்களுக்கு திருவில்லிப்புத்தூர் சி.எம்.எஸ் பள்ளியிலும் , விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 150 மாணவர்களுக்கு கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியிலும் , அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 80 மாணவர்களுக்கு நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும் மற்றும் குலசேகரநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் மையங்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
பயிற்சியின் தன்மை
திருவில்லிப்புத்தூர் மற்றும் விருதுநகரில் நடைபெறுகின்ற பயிற்சி மையத்தில் மாணவர்கள் தங்கி பயிற்சியை மேற்கொள்கின்றனர். காலை 5.00 மணிக்கு எழுந்திருக்க வைப்பது 6 மணிவரை யோகா பயிற்சியும் அதைத் தொடர்ந்து 7 மணிவரை வாசிப்பு. பின்னர் காலை 9.30 மணி முதல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும். காலை வேளையில் ஒரு பாடத்திற்கு பயிற்சி அளிக்கப்படும். 1 மணி நேரம் பாடம் சம்பந்தமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு பின்னர் மாணவர்களை 1 மணி நேரம் படிக்கவைப்பது, பின்னர் 1 மணி நேரம் தேர்வு வைத்து எழுத வைப்பது, இதே போல் மாலை வேளையிலும் வேறு ஒரு பாடத்திற்கு இது மாதிரியான பயிற்சி வழங்கப்படுகின்றது. இம்மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிகள் மாணவர்களுக்கு எளிமையாகவும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பாடத்தில் திறன் வாய்ந்த அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு வழங்கப்படுவதால் அம்மாணவர்கள் விரும்பி கற்க முன்வருகின்றனர். ஒரே மாதிரியான மீத்திறன் உடைய மாணவர்களாக இருப்பதால் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பயிற்சி தேவைப்படுகின்றது. அத்தகைய பயிற்சி சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் மாலையில் மாணவர்களுக்கு 4.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். 5 மணிக்கு சிற்றுண்டியாக பாசிப்பயிறும், சுண்டல் வழங்கப்படும் பின்னர் மாலை 6 மணிவரை விளையாட அனுமதிக்கப்படுகின்றது. பின்னர் 6.30 மணி முதல் 8.00 மணிவரை வாசிப்பு வகுப்புகள் ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெறும், பின்னர் இரவு உணவு 8.45 மணிவரை வழங்கப்படும். அதன் பின்னர் 9.00 முதல் 10.00 மணி வரை மீண்டும் வாசிப்பு வகுப்பு ஆசிரியர்களின் மேற்பார்வையில். இரவு 10.00 மணி படுக்கைக்குச் செல்லுவர். உடன் ஆசிரியர்களும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களும் தங்கி மாணவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றனர்.
மெல்ல கற்கும் மாணவர்களான இவர்கள் சேட்டைகளிலும் அதிகம் நாட்டம் கொண்டவர்கள். ஆனால் இப்பயிற்சிக்கு பின்னர் அவர்களின் நடவடிக்கையில் நிறைந்த மாற்றத்தை காண முடிகின்றது. அம்மாணவர்களுக்கு படிப்புடன் கூடிய ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் இப்பயிற்சி மூலம் கற்றுக்கொடுக்கப்படுகின்றது.
இத்தகைய அரிய சிறப்பு வாய்ந்த பயிற்சிகளை இம்மாவட்டத்தில் 30க்கும் அதிகமான தன்னார்வமிகுந்த, பொது நல நோக்கம் கொண்ட தலைமையாசிரியர்கள் , ஆசிரியர்கள் , கல்வி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒத்துழைப்போடு முதன்மைக்கல்வி அலுவலர் டாக்டர் ஏ.புகழேந்தி அவர்களின் சீரிய தலைமையில் நடைபெற்று வருவது இம்மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்பது திண்ணம். உண்மையில் விருதுநகர் மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியான மாவட்டம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் என்பது உண்மை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 1 week ago |
-
தமிழ்நாடு பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
05 Feb 2025சென்னை: 2025-26-ம் ஆண்டுக்கான தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது
-
அதிபர் டிரம்பின் புதிய உத்தரவால் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த ஈரான் கரன்சி மதிப்பு
05 Feb 2025தெஹ்ரான் : அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சி வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-02-2025.
05 Feb 2025 -
தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்தது: தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
05 Feb 2025சென்னை: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டு ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன
-
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி
05 Feb 2025விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2026 தி.மு.க. வெற்றிக்கான முன்னோட்டம் வாக்கு செலுத்திய பிறகு சந்திரகுமார் பேட்டி
05 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத்தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன
-
உ.பி. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி
05 Feb 2025லக்னோ: உ.பி. மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்.
-
வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலாப்பயணி பலி
05 Feb 2025கோவை: வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலா பயணி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
'விடாமுயற்சி’ சிறப்புக்காட்சிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி
05 Feb 2025சென்னை : அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
-
தி.மு.க. ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பா.ஜ.க.வினர் முயற்சி அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு
05 Feb 2025சென்னை: தி.மு.க. ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பா.ஜ.க.வினர் முயற்சி செய்வதாக அமைச்சர் சேகர்பாபு குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்யுங்கள்: டெல்லி வாக்குகளர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை
05 Feb 2025புதுடெல்லி: முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளைய தலைமுறையினருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
யு.ஜி.சி.யின் வரைவு விதிமுறைகளை எதிர்த்து மாநாடு: தமிழகம் உள்பட 7 மாநில அமைச்சர்கள் பங்கேற்பு
05 Feb 2025பெங்களூரு: துணை வேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு அதிகாரம் வழங்கும் முடிவுக்கு எதிராக உயர்கல்வி அமைச்சர்கள் மாநாடு பெங்களூருவில் நேற்று நடந்தது.
-
கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு 3 ஆசிரியர்கள் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி
05 Feb 2025சென்னை : பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு திமுக அரசு தலைகுனிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவு குறித்த அறிவிப்பை முன்னரே அரசு அறிவிக்கவில்லை : ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
05 Feb 2025சென்னை : பத்திரப்பதிவு குறித்த அறிவிப்பை முன்னரே அரசு அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஒ.பன்னீர் செல்வம் தி.மு.க.
-
டெல்லி வாக்காளர்களுக்கு அமித்ஷா வேண்டுகோள்
05 Feb 2025புதுடெல்லி: தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு அரசாங்கத்தை அமைக்க வாக்களியுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
தன்னை கொல்ல சதி நடந்தால்.... ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
05 Feb 2025வாஷிங்டன் : டிரம்பை கொலை செய்வதற்கு ஈரான் நாட்டில் சதி திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் வந்ததையடுத்து அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
வாழப்பாடி ராமமூர்த்திக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு ஐ.என்.டி.யூ.சி. வலியுறுத்தல்
05 Feb 2025சென்னை, முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி இராமமூர்த்திக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு ஐ.என்.டி.யு.சி கோரிக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள்
-
ஐ.சி.சி. டி-20 தரவரிசை: அபிஷேக் சர்மா முன்னேற்றம்
05 Feb 2025துபாய் : ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்துள்ளார் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா.
-
நகரம், ஒன்றியம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள்: த.வெ.க. மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைவர் விஜய் முக்கிய உத்தரவு
05 Feb 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களுக்கு நகரம், ஒன்றியம், பகுதி, வட்டம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.&nb
-
மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
05 Feb 2025திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர், சிக்கந்தர் தர்காவிற்கு பக்தர்கள் செல்ல அனுதி அளிக்கப்பட்டுள்ளது.
-
தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு
05 Feb 2025பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பிப்.8ஆம் தேதி தொடங்குகிறது.
-
பறவையினங்களை வேட்டையாடியதாக அதிபர் டிரம்ப் மகன் மீது இத்தாலியில் வழக்குப்பதிவு
05 Feb 2025வெனிஸ் : இத்தாலியில் பாதுகாக்கப்பட்ட பறவையினங்களை வேட்டையாடிதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் டிரம்ப் ஜூனியர் மீது இத்தாலி அரசில் வழக்குப்பதிவு செய்யப்பட