எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேஷனல் பொறியியல் கல்லூரி;;யின் 33வது ஆண்டு விழா கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. நேஷனல் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் கல்வித்தந்தை மு.இராமசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாச்சலம், கல்லூரி இயக்குநர் கே.என்.கே.எஸ்.கே.சொக்கலிங்கம் மற்றும் கல்லூரியின் முதல்வர் எஸ்.சண்முகவேல்; முன்னிலை வகித்தனர். சென்னை காக்னிசன்ட் டெக்னோ சொல்யுசன்ஸ் நிறுவனத்தின் முதுநிலை திட்ட இயக்குநர் நாகராஜன் எஸ் கந்தசாமி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை இனிதே துவக்கி வைத்தார். அமைச்சர் கடம்பூர் ராஜு, மரியாதை விருந்தினராகவும், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துனைவேந்தர் மு. பாஸ்கர் சிறப்பு விருந்தினராகவும் இவ்விழாவில் பங்கேற்றனர். இவ்விழாவிற்கு வருகைதந்திருந்தோரை கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்புத் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியை சென்பகவள்ளி வரவேற்றார்.2016 - 2017 கல்வியாண்டின் ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் சமர்ப்பித்தார். அவர் தமது ஆண்டறிக்கையில், மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களிலிருந்து நிதி உதவி பெறப்பட்டு சர்வதேச கருத்தரங்கம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள் மாணவர்கள் பயன்பெரும் வகையில் கல்லூரி சார்பில் சிறப்புடன் நடத்தப்பட்டன என குறிப்பிட்டார். மேலும் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களில் 200 பேர் வளாகத் தேர்வு மூலம் டிசிஎஸ், சிடிஎஸ், இன்போசிஸ், ஜோஹோ, சொலார்டிஸ், சம்டு சாப்ட்வெர்ஸ் மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும், மேலும் பல நிறுவனங்கள் வளாகத் தேர்வு நடத்துவதற்காக இக்கல்லூரிக்கு வருகை தர உள்ளனர் என்றும் தெரிவித்தார்.தலைமை விருந்தினர் அவர்களை கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் ஸ்ரீனிவாசகன் அவையோருக்கு அறிமுகப்படுத்தினார்.தலைமை விருந்தினர் தமது உரையில் கூட்டு முயற்சி, நேர்மறையான அணுகுமுறை ஆகியவை வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை எடுத்துரைத்தார் மேலும் மாணவர்கள் மூன்றாம் ஆண்டு பயிலும் போதே வேலை வாய்ப்புக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். சிறப்பு விருந்தினர் தமது உரையில் மாணவர்கள் தங்களது கேள்வி கேட்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மாணவர்கள் தங்களது துறை சார்ந்த ஆழ்ந்த அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் மேலும் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற முயல வேண்டும் என்று குறிப்பிட்டார். விழாவில் காலம் சென்ற பேராசிரியர் கண்ணப்பன் கல்லூரிக்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூறும் விதமாக கடந்த 8 வருடங்களாக சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் "பேராசிரியர் கண்ணப்பன் நினைவு கல்வி ஊக்கத்தொகை" திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்று பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்புத் துறையைச் சார்ந்த மாணவி சு. கிருஷ்ணவேணியின் மூன்று ஆண்டுகளுக்கான கல்விச் செலவுகள் அனைத்தையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றது. அதற்கான சான்றிதழினை மாணவி;, கல்லூரியின் நிறுவனர் கல்வித்தந்தை திரு மு.இராமசாமி அவர்களிடமிருந்து விழா மேடையில் பெற்றுக்கொண்டார்.கல்லூரியின் மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து பொறியியல் துறைகளிலும் முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு பருவத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் ஆண்டு முழுவதும் கல்லூரிக்குத் தவறாமல் வருகை புரிந்து நூறு சதவீத வருகைப்பதிவுடன் சிறப்பாகக் கல்வி கற்ற மாணவ, மாணவிகள், தேசிய மாணவர் படை (என்.சி.சி), நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்), ரோட்டராக்ட், செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகளில் தன்னலமற்றுப் பணியாற்றிய சிறந்த மாணவ, மாணவிகள் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 2016 - 2017 கல்வியாண்டின் சிறந்த மாணவருக்கான விருதினை இயந்திரவியல் துறைiயைச் சார்ந்த இறுதியாண்டு மாணவர் செல்வன் P. ஹரிகமல்; பெற்றார். சிறந்த மாணவிக்கான விருதினை கணிப்பொறியியல் துறையைச் சார்ந்த இறுதியாண்டு மாணவி செல்வி து.ஸ்ரீலேகா லட்சுமி பெற்றார். மேலும் மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்று ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வரும் கல்லூரி பேராசிரியர்களை கௌரவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.இவ்விழாவில் கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கண்ணப்பன், இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், பேராசிரியர் குப்புசாமி, பொறியாளர் ஜெயபால், தணிக்கையாளர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் சம்பத்குமார், மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னனுவியில் துறைத் தலைவர் வில்ஜுஸ் இருதயராஜன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது. வுpழாவின் சிறப்பு ஏற்பாடுகளை இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோரின் ஆலோசனைப்படி கல்லூரியின் கணிப்பொறித் துறைத் தலைவர் டீ.பரமசிவன்; அவர்களின் ஒருங்கிணைப்பில் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் அலுவலர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.