எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத் - ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 21-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் சன் ரைசர்ஸ் 4-வது வெற்றியை பதிவு செய்தது.
8 அணிகள்
8 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.
முகமது சிராஜ் அறிமுகம்
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்சை எதிர்கொண்டது. ஐதராபாத் அணியில் பரிந்தர் ஸ்ரன் நீக்கப்பட்டு, ரூ.2.6 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அறிமுகம் ஆனார். இதே போல் முகமது நபி கழற்றிவிடப்பட்டு அவரது இடத்தில் கனே வில்லியம்சன் சேர்க்கப்பட்டார். டெல்லி அணியில் ஒரே ஒரு மாற்றமாக முகமது ஷமிக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் இடம் பெற்றார்.
தவான் அரைசதம்
‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி வார்னரும், ஷிகர் தவானும் ஐதராபாத்தின் இன்னிங்சை தொடங்கினர். அதிரடி சூரர் வார்னர் 4 ரன்னில் (7 பந்து) கேட்ச் ஆனார். ஐ.பி.எல்.-ல் கடைசி 17 இன்னிங்சில் வார்னர் ஒற்றை இலக்கில் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.
வில்லியம்சன் அதிரடி
இதன் பின்னர் ஷிகர் தவானுடன், கனே வில்லியம்சன் இணைந்தார். தவான் சற்று மெதுவாக ஆடினாலும் வில்லியம்சன், எதிரணி பந்து வீச்சை வெளுத்து கட்டினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மேத்யூஸ், அமித் மிஸ்ராவின் ஓவர்களில் தலா 2 சிக்சர்களை வில்லியம்சன் பறக்க விட்டார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் திரட்டியது. வில்லியம்சன் 89 ரன்களில் (51 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டம் இழந்தார். தவான் தனது பங்குக்கு 70 ரன்கள் (50 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். இவர்களுக்கு பிறகு வந்த யுவராஜ்சிங் (3 ரன்) ‘யார்க்கர்’ பந்தில் கிளன் போல்டு ஆனார்.
192 ரன்கள் இலக்கு
20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. ஹென்ரிக்ஸ் 12 ரன்னுடனும், தீபக் ஹூடா 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் 4 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் கைப்பற்றினார். அடுத்து 192 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. சாம் பில்லிங்ஸ் 13 ரன்னிலும், கருண் நாயர் 33 ரன்களிலும், ரிஷாப் பான்ட் ரன் ஏதுமின்றியும், சஞ்சு சாம்சன் 42 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
ஐதராபாத் வெற்றி
இதன் பின்னர் ஸ்ரேயாஸ் அய்யரும், மேத்யூசும் இணைந்து தங்கள் அணியை கரைசேர்க்க முயற்சித்தனர். கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் வீசினார். அவர் மேத்யூசின் (31 ரன்) விக்கெட்டை சாய்த்து 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார்.
20 ஓவர்களில் டெல்லி அணியால் 5 விக்கெட்டுக்கு 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன்களுடன் (31 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். இதன் மூலம் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் 4-வது வெற்றியை ருசித்தது. இந்த 4 வெற்றிகளும் அந்த அணிக்கு உள்ளூர் மைதானத்திலேயே கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 5-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லிக்கு இது 3-வது தோல்வியாகும்.
கடைசி ஓவரில் கூடுதல் ரன்: ஜாகீர்கான்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் கூடுதலாக ரன்னை கொடுத்து விட்டேன் என்று டெல்லி கேப்டன் ஜாகீர்கான் தெரிவித்தார்.
4-வது வெற்றி
ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி டெல்லியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நடப்பு சாம்பியன் சன்ரைசஸ் ஐதராபாத் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன் குவித்தது. வில்லியம்சன் 51 பந்தில் 89 ரன்னும் (6 பவுண்டரி, 5 சிக்சர்), தவான் 50 பந்தில் 70 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட் கைப்பற்றினார்.
ஐதராபாத் வெற்றி
பின்னர் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் 15 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் அய்யர் 31 பந்தில் 50 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), சாம்சன் 33 பந்தில் 42 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), கருண் நாயர் 23 பந்தில் 33 ரன்னும் எடுத்தனர். முகமது சிராஜ் 2 விக்கெட்டும், கவுல், யுவராஜ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் சன்ரைசஸ் ஐதராபாத் 2-வது இடத்துக்கு முன்னேறியது.
வெற்றி குறித்து வார்னர்
எங்கள் அணி வீரர்களின் ஆட்டம் அபாராமாக இருந்தது. வில்லியம்சன் முதல் ஆட்டத்திலேயே திறமையை வெளிப்படுத்தினார். அவரும், தவானும் இணைந்து அணி நல்ல ஸ்கோர் அமைய காரணமாக திகழ்ந்தனர். எங்களது பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. வேகப்பந்து வீரர்களுக்கு எனது பாராட்டுக்கள். புவனேஸ்வர் குமார் மீண்டும் ஒருமுறை தனது பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து ஜாகீர்கான்
180 ரன் என்பது எடுக்கக் கூடிய இலக்கு. 192 ரன் என்பது கடினமானதே. நான் வீசிய கடைசி ஓவரில் ரன்களை வாரி கொடுத்து விட்டேன். ஆனாலும் எங்கள் அணி வீரர்கள் இலக்கை நோக்கி சிறப்பாகவே ஆடினார்கள். துரதிருஷ்டவசமாக ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியாமல் போனது. புவனேஸ்குமார் மிகவும் நேர்த்தியாக பந்து வீசி ஐதராபாத் வெற்றிக்கு மிகவும் உதவியாக இருந்தார். கருண் நாயரின் ரன் அவுட் ஆட்டத்தை மாற்றி விட்டது. ஒட்டு மொத்தமாக நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். குறைந்த அளவு ரன்னில்தான் தோற்றுள்ளோம்.
இவ்வாறு ஜாகீர்கான் கூறியுள்ளார். டெல்லி அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். ஐதராபாத் அணி 7-வது ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்டை 22-ம் தேதியும், டெல்லி அணி 6-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை அதே தினத்திலும் சந்திக்க உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.